சரஸ்வதி பெரியம்மா!

புவி மிசை மரபில் –பொதுவாக –இன்னொருவர் படும்இன்னலுக்கெல்லாம்உதவிட மக்கள்உடன்படுவதில்லை; பிறரதுகண்ணீர்க்கெல்லாம்கடன்படுவதில்லை; ஆம்!மண் வாழ்க்கை வாழும்மக்களிலே பலபேர்தன் வாழ்க்கை ஒன்றே –தழைக்கட்டும் என்றே –வாழ்வதுவே இங்குவழமை ஆயிற்றே; அதுபெற்றவர் ஆயினும்பிறந்தவர் ஆயினும்மற்றவர் போலேமாறியதாலேபற்றெல்லாம் இன்றுபழமை ஆயிற்றே; இப்படி இங்கே –எல்லோரும் இருக்க – துயர் –உறவுக்கு என்றதும்ஓடோடிச் சென்றந்தமரபுக்கு ஒரு கரம்மண்ணள்ளிப் போட்டது; அப்படி –மரபினை எல்லாம்மறந்திருந்து –மற்றவர்க்காய்ச் செவிமடல் திறந்து –நீளும் கரங்களேநித்தியம் காணும்;வாழும் வரையிலும்வாழ்வுக்குப் பின்னும்சரித்திரத்தில் இடம்சத்தியம் காணும்; ஏன் எனக் கேட்கஎவருமின்றி – இருமீனென […]

சரஸ்வதி பெரியம்மா! Read More »

ராம் குமார்!

கள்வாங்கி இருக்கும்கவின்மிகு மலர்களைஉள்வாங்கி நிற்கும்உள்ளமுன் உள்ளம்! உன்னிடம்சொல்வாங்கிச் செல்வோர்சோகமுற்றால் சொற்களெனும்கல்வாங்கி அடைக்கலாம்கவலையெனும் பள்ளம்! தீட்டாமல் வாளுமில்லை;சுட்டுப் பொசுக்கும்தீயின்றி உலையில்லை;தென்றல் வந்து,மீட்டாமல் குழலுமில்லை;வரவெண்ணாமல்மேதினியில் சொந்தமில்லை;வேண்டும் போதுநீட்டாமல் வாழுகின்றநிலத்தார் முன்னே,நெஞ்சினிக்க அன்புமழைநித்தம் பெய்து,கேட்காமல் உதவுகின்றகேளிர் கிடைத்தால்கிட்டியவன் பெற்றபயன்கிளவியில்(சொல்) அடங்கா! அகவையால் ஒன்றும்ஆவதற்கில்லை – அவரவர்தகவை வைத்துதான் தரணி போற்றும் என்ற வரிகளின்இன்னொரு வடிவு நீ;நிசிக்குள் நிற்போர்க்குநீள்வான் விடிவு நீ; இரண்டு தினங்கள் – உன்னோடுஇருந்தால் போதும் – நீஅரக்க மனத்திலும் – மெல்லஅன்பைக் குடியேற்றுவாய்! மனம்பாழடைந்தாலும் – சிலந்திநூலடைந்தாலும் –

ராம் குமார்! Read More »

வம்சி பிரியத்தம்

உண்மையில் நீயொருஆச்சரியம்! எனக்குள்உனைப் பற்றி யோசித்தால்பூச்சொரியம்! எங்களூர் தாண்டிஎங்குமே செல்லா எனைமுதலில்பெங்களூர் நீதானேஅழைத்தாய்!அறமொழி என்னும்அருந்தமிழ் தவிரபிறமொழி வெறுப்பைப்பேசிய எனக்குள்பிரியத்தை நீ தானேவிதைத்தாய்!உன்மொழி மட்டுமல்லபிறமொழியும்பெரிது தானென்றுஅதைத் ‘தாய்’ என்றேஅழைத்தாய்! வம்சி ப்ரியத்தம்(குழலை விரும்புபவன்)!பெயருக்கு அருத்தம்பலருக்குப் பொருத்தம்ஆவது என்பதேஅரிதான ஒன்று!உனக்கது பொருந்துதல்சரிதானா என்று,வினவினால் நூறுவிழுக்காடு பொருந்தும்! சிறுபுல்லுக்கும் அன்புபுரிவதன் பொருட்டு,விழைவாய் உன்னிடம்முழுக்காடு இருந்தும்! ஆனால் ஒன்றுஅவனைப் போலகொண்டதில்லை நீயும்கையில் குழலை!கோபத்தில் நீயும்மெய்யாய் மழலை! கோபி!இவ்வாறே அனைவரையும்இன்பத்தால் சோபி! நாரணனே!நஞ்சில்லாப் பிரியத்தின்பூரணனே! கண்ணா!மொழி உந்தன்இன்னொருகண்ணா? ஏன் மொழி மீதுஇத்தனைப்ப்ரியத்தம்,ப்ரியத்தம்? பிறமொழியை மதிப்பதுபெரிதென்று

வம்சி பிரியத்தம் Read More »

தீபின் விஜித்!

உற்ற துயரங்களை எல்லாம்ஊருக்கு சொல்லாமல் மறைக்கும்கோப்பின் வடிவம் நீ!மூப்பின் அனுபவம் நீ!யாப்பின் கட்டுப்பாடு நீ! வேப்பின் வெறுப்பை வெளிக்காட்டாது கொஞ்சம்காப்பின்? உன்வாழ்க்கை கடக்கும் பூ பின்!நிச்சயம் வெல்லுவாய் நீயதை நீப்பின்! தீபின்!உன் வாழ்க்கை போனதுவே தீ பின்! அனைத்தையும் மாற்றியதே மரணம்தன்தீர்ப்பின்!வழிவந்த வலிகளெல்லாம் சேர்ப்பின்,வருந்தாது அதைக்கண்டு ஆர்ப்பின்,புன்னகையை பரிசாக வார்ப்பின்,பயமின்றி அதைஎதிர்த்து தீர்ப்பின்,வருமிந்த ஊர்பின் யார்பின்? உன்பின்;செல்லாதே பெண்பின், பொன்பின், மண்பின்! கவிதைக்குக்காரணம் என்பின்? பண்பின்அன்பின்சிகரம் நீ; ஒருவரையும் கண்டதில்லை உனைப்போல முன் பின்! வருந்தாமல் வாநீ

தீபின் விஜித்! Read More »

ஸ்டாலின் தமிழ்!

சிகரம் தொட்டாலும் – எந்தன்சிந்தனைத் துளிகளுக்கு,அகரம் நீர் தானே – அடஅதைநான் என் சொல்வேன்?உனக்கும் எல்லைஉண்டா? எழுது!என்று,ஆரும் என்னைஅண்டா பொழுது,நீயே என்னுடைய,எழுத்தைப் போற்றினாய்! இந்தநிழலையும் கூடநிஜமாய் மாற்றினாய்! நீ மட்டும்,எப்படி அறிந்தாயோஎந்தன் பாத் திறம்?அன்பில் நீ,அல்ல அல்ல குறையாஅட்சயப் பாத்திரம்! இதற்காகவே நான்,வருங்காலம் சொல்வதுபோல்வளர வேண்டும்! சமர்பணமாய் அந்தவளர்ச்சியை உனக்குத்தான்வழங்க வேண்டும்! ஆம்!வளர்ச்சியைக் கொடுப்பேன்உனக்கே நிச்சயம்! இது வெறும்,உணர்ச்சிகள் அல்லஉன்மேல் சத்தியம்! கைம்மாறு எண்ணாமல்காட்டுவாய் பாசத்தை! உண்மையாய் பலமுறை-கண்டதுண்டு உன்னிடத்தில்கடவுளின் வாசத்தை! ஆராவது உன்னிடம்ஆசையாய்ப் பேசினால்,கேட்காமலேயே உள்ளதைத்

ஸ்டாலின் தமிழ்! Read More »

அரு சௌரிராசன்!

குபேரனுக்குகுசேலன் எழுதும்கடிதம்! பெரியாரின் மாணவர்அனா ரூனாவின்நகல் அகம் இவர்! ஆம்! இவர் ஒருமாணவர் நகலகம்!அட! யாரு? என்றெல்லாம்ஆச்சர்யம் வேண்டாம்! இந்தஅடையாறு ஒருகொடை ஆறு! திரு.சௌரிராசன் அவர்கள்! அ’னா ரூ’னா அய்யாராஜா என்றால்நீ இளையராஜா தானே? உனக்கும் இளையராஜாக்கும் தான்எத்தனைப் பொருத்தம்! இருவருமேவாசிப்பைநேசிப்பவர்கள்! இருவர் தொடங்கிய இடமும்பொதுவுடைமை தான்! இருவருமே, நூல்களுக்கு மத்தியிலே,நுழைந்தவர்கள்! எழுத்துத் தேரைஎல்லோர்க்கும் சேர்க்க,ராஜாஇசையால் அச்சிடுகிறார்!நீ இயந்திராத்தால் அச்சிடுகிறாய்! ஒரே ஒரு வேறுபாடு தான்,அது பண்ணபுரத்து ராஜா!இது கண்ணபுரத்து ராஜா!என்னைப் போன்றுஎத்தனையோப் பேர்க்கு-நீஅ’னா தானா? கைநீட்டுவதில்

அரு சௌரிராசன்! Read More »

மணிமேகலை சௌரிராசன்!

முரண்பட்டக் கருத்துகளை மொழிவது யாராயினும் அரண்கட்டி அதனுள்ளே அமைதியாய் வாழாமல் எடுத்து அவர்களிடம் விளம்பு! அது வேந்தனே ஆயினும் எதிர்த்துரைக்கும் நீர்‘சிலம்பு’! ஆம்,அடுத்தவர்க்காய் நீர்‘வளையாபதி’! அன்னை தமிழின் அழகுத் தோள்களில் ஆடும் நீரொரு ‘குண்டலம்’! பற்களிலே சிக்காமல் பல்லிடங்கள் நிற்காமல் தெற்கிருக்கும் வள்ளுவனாய் தேன் கலந்த கல் கவணாய்சொக்கவைத்து பொட்டடிக்கும் சோழியாய் உன் சொற்கள்! அது வெறும் சொற்கள் அல்ல,சொற்கள் அல்ல,சொந்தமென்ற-சொர்க்கத்தை விலைக்கு வாங்கும் வைரமணிக் கற்கள்! ஆம்! உம்சொற்கள் ஒவ்வொன்றும் ‘சிந்தாமணி’! அட்சயப் பாத்திரம் ஏந்தாமல்,

மணிமேகலை சௌரிராசன்! Read More »

Shopping Cart
Scroll to Top