திருநங்கை/திருநம்பி

புகழ் விரும்பிகளும்கேட்க விரும்பாதகைத்தட்டுக்குச்சொந்தக்காரர்கள்! முப்பாலைமூலை முடுக்கெல்லாம்பரப்பியவர்கள்! அவனா? அவளா? என்றுஅடித்துக் கொண்டது போதும்!‘அவர்’ விகுதி கூடதமிழ்த் தான்! கடவுள் தூரிகைகலந்துத் தீட்டியவண்ண ஓவியம்! பிடித்த உடலில்பிடிக்காத உடைகூடஅணிய மறுக்கும்நமக்கென்ன தெரியும்பிடிக்காத உடலில்பிடித்த உடை அணியும்அவர்களின் வலி? மொழியில் ஒருசின்ன திருத்தம்!மேனியை இனிமெய் என்றுசொல்லாதீர்கள்!இவர்களுக்கு அதுமெய் இல்லை! வல்லினம்மிகும் மிகா விதிகளைத்தீர்மானித்து அவர்களைசந்திப் பிழை என்று சொல்வதேசந்ததிப் பிழை! கடவுள் எழுதியகவிதைத் தொகுப்பில்அவர்கள்அச்சுப் பிழை அல்லசமூகம் ஏற்றுக் கொள்ளாதசீர்த் திருத்தங்கள்!காலம் கடந்தேபுரட்சி என்றுபேசப்படுவார்கள்! இறுதியில் நிகழ்ந்தசிறிய மாற்றம் – […]

திருநங்கை/திருநம்பி Read More »

செத்துவிடவில்லை!

கனவாய்ப் போகும் வேளைகளில் – அடகரியாய்ப் போகும் நாளைகளில்,கனமாய்ப் போகும் உறவுகளில் – என்கவிதைக் கிடந்து சாகிறதே! கண்ணீர் கொண்டு கலை செய்தேன் – பலகளிப்பினை எல்லாம் கொலை செய்தேன்முந்நீர் கொண்டு முயற்சியினால் – நான்முப்போகம் நிலம் விளை செய்தேன்! எழுதா சொற்கள் ஏராளம் – நான்எழுத்தென்றானால் தாராளம்,விழுதா கிளையா தெரியாது – என்விதைகள் கொண்ட வேர் ஆழம்! முகத்தில் களிப்பு கொண்டதனால் என்முட்காயங்கள் மறைவதில்லை!அகங்கள் கொண்ட ஆழத்தை – அடஅக்கம் பக்கம் அறிவதில்லை! கண்ணிமை கவிழும்

செத்துவிடவில்லை! Read More »

இறைவனது காவியம்!

என்வாழ்க்கை நிறைவுறாத இறைவனது காவியம்! இறைவனது காவியத்தில் இடம்கிடைக்கா ஓவியம்! மண்வாழ்க்கை இன்பமுற மனம்முழுக்க வேள்விகள்! மனம் எழுப்பும் வேள்விகட்கு மலர்கொடுக்கும் தோல்விகள்! * இடைமறித்த ஆசைகட்கு இதயங்களை விற்றவன்! இதயங்களை விற்றதனால் இன்னல்களைப் பெற்றவன்! தடைகொடுத்த வாழ்க்கையிலே தத்துவங்கள் சொன்னவன்! தத்துவங்கள் சொல்லும்-நான் தோல்விகளின் மன்னவன்! * காலநதி வெள்ளத்திலே கடல்கலக்கச் சென்றவன்! கடல்கலக்கும் முன்னமஞ்சி கரை ஒதுங்கி நின்றவன்! வாழவழி இல்லையென்று வார்த்தைகளை அழைத்தவன்! வார்த்தைகளை நம்பியதால் வாழ்க்கைதனில் பிழைத்தவன்! * சோலைகளின் மலர்வனப்பில்

இறைவனது காவியம்! Read More »

இறகு உதிர்க்கும் மரம்!

கவிதைத் தொடரின் முன்னுரை…   தோன்றிய நாள் முதலே, வாழ்வில் மனிதன் ஓடிக்கொண்டே இருக்க, உழைக்க வேண்டியிருந்தது. உழைத்துக் களைத்த ஊமை விழிகள், கலைகள் மூலமாய்த் தான் கதைகள் பேசின; ஆம்!கலைகள் தான் அவன்,காயங்களுக்கெல்லாம்களிம்புகள் இட்டன;மௌனத்தைக் கூடமொழி பெயர்த்தன; சமிக்ஞையே அவனதுசகலமும் ஆனது;குறிகள் காட்டியகுறைகளைப் போக்கஒலிகள் வந்துஉதவத் தொடங்கின;ஒலிகள் கூடஓரிரு இடத்தில்உதவாமல் போக,மொழிகள் வந்துவழிகள் காட்டின; ஆனால் மொழிகளால்,வளர்ச்சியில் உழன்றவனின்வலக்கரம் பிடித்தாலும்,அயர்ச்சியில் கிடந்தவனைஆற்றுப்படுத்த முடியவில்லை; வேகமாய் ஓடும் நதியைவெட்டித் திருப்பி வயலுக்குக்கொட்டித் தீர்க்கப் பாய்ச்சுவது போல,மொழிகள் தன்னைமுறைமை

இறகு உதிர்க்கும் மரம்! Read More »

அவர் தான் பெரியார்!

பெரியார் இறந்து ஐம்பது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறோம். இன்னும் அந்தக் கறுப்புச் சூரியனின் நெருப்புக் குழம்பால் தான், நிலைத்து நிற்கிறது நம், நிலமிசைப் பகல். பெரியாரின் சிந்தனைகள் அருகிக் கொண்டிருப்பதாய் அச்சமூட்டகின்றனர் சிலர்; விண் வரை எழுந்து விழுது இறக்கிய ஆலத்தை, மண் அடி வாழும் கரையான்கள் அரிக்குமா? அவரை நினைக்கும் போதெல்லாம், நினைவுக் குளத்தில் நீந்துகின்றன விந்தை மீன்கள்; அவர் சிந்தனைச் சிற்பிக்குள், முத்துக்கள் எடுக்க முயலாத ஆட்கள், கிளிஞ்சல் என்று அதைக் கீழே

அவர் தான் பெரியார்! Read More »

ஆடும் பாம்படம்

எங்களுக்கெல்லாம்வசவுச் சொற்களின்வாத்தியார் அவர்! அண்டிய செடிகொடிகளால்அதிகம் புழக்கமில்லாதஒற்றை அடிப் பாதையாய் ஆனதுஅப்பாவுக்கும் அப்பத்தாவுக்குமான உறவு! அப்பத்தாவைப் பொறுத்த வரைஅப்பா ஒரு,தேவையில் திறக்கும்அண்டாகா கசம் குகை! அடகு வைத்த நகையைமாதா மாதம் மீட்டுமீண்டும் அடகு வைக்கும்ஏழைச் சாமானியனைப் போலசந்திப்பு ஒவ்வொன்றிலும்சண்டையைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறியதே இல்லை இருவரும்! எவருக்கு எதுவென்றுஎப்போதோ கையெழுத்தானஉடன்படிக்கைகளை எல்லாம்உதவாதவைகளாக்கினஅப்பத்தாவின் ஆயுள்! அன்றாடம் வரும்அனைத்து உபசரிப்புகளும்நின்று போனதன்காரணம் விளங்காமல் அப்பத்தாக்காத்திருக்க, ஐந்து விரல்களில்மோதிர விரலானஅத்தைகள் கூட வந்து பார்க்கவில்லை, அத்தனை நகைகளும்திருடுபோன பின்!

ஆடும் பாம்படம் Read More »

புத்தனின் கருவறை!

புத்தனாக மாறசித்தார்த்தன்தவம் செய்தான்!முதலில் அவன்,சித்தார்த்தன் ஆகவேதவம் செய்தான் என்பதை ஏன் யாரும் சொல்லவில்லை? முன்னது,இருப்பதில் இருந்துஇல்லாமைக்குச் செல்வது…பின்னது,இல்லாமையில் இருந்துஇருத்தலைச் சொல்வது… ஒரு ஒற்றுமை!இரண்டு தவங்களின்ஈட்டலையும்கடவுளாகக் கருதினாலும், விருப்பமில்லாமல்,புத்தனுக்குப்பூசப்பட்டதைப் போல்இங்கும் ஏராளமான கைகள்மதச்சாயங்களோடுநிற்கின்றன! *இது,தண்ணீருக்குள் மூழ்கியதவநிலை! இங்கு,இலைகள் விழுந்துஎழுப்பப்போவதில்லை! எத்தனைக் குரல்கள்எங்கு ஒலித்தாலும்முகங்களும் மொழிகளும்பரிட்சயமில்லாததால்முடியாத மோன நிலை! கடவுளாகக் கருதக்முக்கிய காரணம்,‘கருவறை’ காவலே! ஆனால்,இந்தக் கருவறையில்எல்லோர்க்கும் அனுமதி உண்டு!

புத்தனின் கருவறை! Read More »

ஆசிரியர் பா!

தன்னலமே கொள்ளாதோர்,தமக்கென்று நில்லாதோர்,தரணியிலே ஆசிரியர் மட்டும்! அஃதிடம்சின்னதொரு விதைதந்தால்சிங்கார மரமாக்கிசிரிப்போடு வளர்ச்சியில்கைத் தட்டும்! பெற்றோர்கள் வெளியிலேபெருமையோடு சொன்னாலும்பேர்வாங்கித் தந்ததுவோ இவர்கள்! பலகற்றோர்கள் ஆனாலும்கர்வமே இல்லாமல்(கொள்ளாமல்)கைகொடுப்போர் இவரில்லா தெவர்கள்? வள்ளுவனோ தன்னுடையவார்த்தைகளில் மறந்தானோமேன்மையான ஆசான்கள் பற்றி! அந்தவல்லவனே மறந்தாலும்வாழ்த்துவோம் இல்லையெனில்வையகமே எறிந்திடும்தீப் பற்றி! இருள்நீக்கி மனிதர்கள்இதயத்தை ஒளியாக்கிஎந்நாளும் ஒளிருமிந்த மெழுகு! அவர்கள்பொருளீட்ட வழியொன்றைப்புரியாமல் எங்கேதான்போகிறதிப் பொல்லாத உலகு? அவமானம் செய்தாலும்அறியாமை என்றெண்ணிஅன்பாக பேசிடுவார் நாளும்! அஃதைதவமாக எண்ணாததற்குறிகள் மேதினியில்தழைத்தோங்கி எவ்வாறு வாழும்? ஏணியென பலபேரைஏற்றிவிட்டோர் அவர்மட்டும்ஏறாமல் நிற்பதுதான் கொடுமை!

ஆசிரியர் பா! Read More »

பயணங்கள்!

Previous Next ஏன் எப்போதும் பயணம்என்று கேட்போரிடம்ஒன்று கேட்க வேண்டும், பயணங்கள் செய்யாதமனிதர் யார்? எல்லா மனிதனும்பயணத்தில் தான்அல்லதுபயணத்தால் தான்உயிர்ப்போடு இருக்கிறான்! ஆம்!சயனங்கள் கொள்ளாதிருக்கபயணங்கள் தான்நம்மைக் காக்கின்றன! நாளுக்கு ஒரு இடம்,பொழுதுக்கு ஒரு வலம் என்றுநினைவுகளைச் சேர்ப்பது மட்டுமல்லநினைவுகளை மீட்பதும் பயணங்கள் தான்! ஒரு பாடலால்ஒரு படத்தால்எத்தனை ஆண்டுகள் பின்னால்நம்மைப் பயணப்பட வைக்க முடிகிறது? கர்ப்பக் கிரகம் விட்டு இந்தஅற்ப கிரகம் வந்ததுபயணம் தான்! இறுதியில்,நால்வரால் மெல்லநகர்வதும் பயணம் தான்! அதிசயங்களை,அனுபவங்களை,ஆச்சரியங்களை,ஆதாரங்களை,தொலைத்ததைத்தேடும் இன்பங்களை எனஏதோ ஒன்றை அடைவதற்கேஎல்லாப்

பயணங்கள்! Read More »

Shopping Cart
Scroll to Top