காவலர்கள்!

கோடையில் காய்வதனால்குலைந்திடுவானோ?வாடையில் தேய்வதனால்வாடிடு வானோ?மேடையில் பிறர் ஏறமெனக்கடல் கொள்வான்!ஓடையில் ஓரிலையாய்வரும்வழி செல்வான்! முயலாக ஓடினாலும்முப்பொழுதும் ஓயவில்லை; வாழ்க்கைபுயலாக மாறியதால்பூப்பறிக்க நேரமில்லை; முரட்டுச்செயலாக வாழ்வதனால்சிரிப்பதற்கும் காலமில்லை! சிரிப்புஅயலாகிப் போனதனால்அழுவதற்கும் தேவையில்லை! புத்தியே ஆயுதமாம்;பூச்சாண்டி காட்டுகிறகத்தியே வந்தாலும்கையோடு விளையாடும்லத்தியே குலதெய்வம்;லாக்அப்பைக் கண்டதனால்சுத்தியே அலைகிறதுசுதாரித்தே வாழ்ந்தவிழி! (வேறு) காவலன் இன்றிக்கட்டுகள் இலையே! அதுகோவலன் இல்லாக்கண்ணகி நிலையே! சிவனிடம் இருந்ததொருசிறந்த பண்பு – அதுஇவனிடம் உள்ளதெனில்எவரறி வாரோ? கலவரமோ? பெயர்தெரியாகட்சிகளின் ஊர்வலமோ? பகைநிலவரமோ? இல்லையில்லைநிற்காமல் போர்வருமோ? ஊருக்கு வருகின்றஒவ்வொரு துயரையும் – தன்பேருக்குப் […]

காவலர்கள்! Read More »

விடுதலை

குருதிக்குள் தோய்ந்தபடிகுண்டுமழைப் பெய்யும் – கணம் இறுதிக்குள் செல்லுமினம்எண்ணமென்ன செய்யும்? வரம்புகளை உடைத்தபடிவந்ததடா போர்கள்! பலநரம்புகளை வடமாக்கிநகர்ந்தடா தேர்கள்! முடங்கியது போதுமென்றுமுழங்கியது சங்கு! வெடிக்கிடங்கில்வந்து விழுந்ததொருகிளர்ச்சிகளின் கங்கு! பரங்கியனை எதிர்கொண்டுபார்த்தோமே ஒரு கை! உலகஅரங்கில்மெல்ல நிகழ்ந்ததுநம்அனைவரது வருகை! ஒருகையும் ஆணென்றால்மறுகையும் பெண்தான்! அந்தஇருகைக்கும் வணக்கத்தைஇயம்பவேண்டும் மண்தான்! ஆட்சிசெய்ய வந்தவனும்அரண்டுமிரண்டு போனான்! மிருகக்காட்சியிலே என்னசெய்யும் காலொடிந்த ஓணான்? வந்தேறி சென்றானெனவாளுறைக்குள் துஞ்சா! தமிழ்வந்தேறி ஆடிவிட்டால்வதங்களுக்கும் அஞ்சா! எருவுக்குள் தீப்பிடித்தால்என்னயிங்கு மிஞ்சும்? நாளைக்கருவுக்குள் தோன்றுவதும்கத்தியுடன் துஞ்சும்! இடிகளுக்குக் கேட்டிடுமோகடுகுடைக்கும் சத்தம்!

விடுதலை Read More »

கள்ளக் களவாணி

பம்பரம் சுத்தி பூமிக்குள்ளபள்ளத்தாக்கப் பறிச்சிருச்சே!கம்பரக் கத்தி தன்னந்தனியாகருவக் காட்டக் கழிச்சிருச்சே! உதிரம் குடிக்க மறுத்த மனசுல உண்ணா விரதப் போராட்டம்!அதிர ஓடும் ரயிலுக்கெடையிலஅம்புட்டதுபோல் மாராட்டம்! காத்தது மெல்லக் காய்ச்சதுக் குள்ள களவாப் போன நெலமையடி! நீசேத்தது எல்லாம் செல்லா தாயிடும்,செலவாகாத எளமையடி! ஆட்டத் திருடும் கூட்டம் போலஆளத்திருடத் திரியிறியே! மனக்காட்டுக் குள்ளக் கொள்ளிப் பேயாக்கொழுந்து விட்டு எரியிறியே! கிளியே நீயும் பறந்தப் பிறகு கெழக்கும் ராவுல கெடக்குதடி!வெளியே குதிச்சு வரவே நெனச்சுவிரதம் உடல ஒடைக்கிதடி! கழுத்தக் கவ்வும் நரியப்

கள்ளக் களவாணி Read More »

Shopping Cart
Scroll to Top