கனித்தேனே! உனைத்தானே!
சுவைக்க வேண்டும் – என
கணித்தேனே! களித்தேனே!
தினமும் தானே!
இனித்தேனே! வேண்டாமென்
றெனக்குள் நானே! உன்
இதழ்தேனைக் குடித்தப்பின்
எண்ணினேனே!
இனித்தேனே! உன்னாலே!
உள்ளன்பாலே! உனை
இசைத்தேனே! விரல்களாலும்!
இதழ்களாலும்!
சனித்தேனே! கனவில்நீ
சாரல் தூற! அட
சபித்தேனே மூடாத
இமைகள் சேர!
மணித்தேனே மலர்த்தேனேத்
தோற்றுப் போகும் என
மலைத்தேனே! மலைத் தேனே
கண்டி ராத
தனித் தேனே! உனைப்போல
தரணி எங்கும் ஒரு
தகைத்தேனே! இல்லென்று
வண்டும் நாட!
பணித்தேனே! உனையென்னுள்
பார்க்கத் தானே! – அட
பகைத்தேனே! சுற்றத்தைப்
பாக்கள் பாட!
தனித்தேனே! எனைநானே
உன்னைத் தேட! அட
தவித்தேனே! துடித்தேனே!
உன்னுள் கூட!
w