Marudhu Pandiyan

காதல் சைவமா? அசைவமா?

அவள்,மத்தியச் சோற்றுக்கேபத்தியச் சோற்றைப்பழகி வாழ்ந்தவள்! அவன்,நண்டு நத்தையெனக்கண்டு களிப்பதைஉண்டு கொளுத்தவன்! பன்னீரே அவளுக்குபட்டர் சிக்கன்!சோயா உருண்டையேசுக்கா மட்டன்! அவனோ,கட்சிமாறி சைவம் சேர்ந்ததால்முட்டையோடே பந்தத்தைமுறித்துக் கொண்டவன்! அவள்,கடுகே காரமென்றுகண் கசக்கும் அய்யமாரு! அவன்,கறிக்குத் தாகமென்றுகள் அடிக்கும் அய்யனாரு! வெளியே சென்றாலேவெஜ்ஜா? நான் வெஜ்ஜா?பட்டிமன்றம் தான்! ‘ஜீவகாருண்யம்’அவள் வாதம்! ஒரு உயிருக்குஇன்னொரு உயிரைஉணவாய் படைத்ததேஇயற்கை தான்அவன் வாதம்! வாழைக்காய் மீன்பருப்புக் ‘கோலா’ எனஅசைவப் பெயர்களைச்சைவத்திற்குச் சூட்டிஅழகு பார்ப்பாள்,வளைந்து கொடுத்ததாய்வாதிடுவாள்! பாலுண்ணும் போதுஇறைச்சியுண்ணலில்பாதகம் இல்லையெனஅவன் நியாயம் பேசுவான்! உடன்பட்டு இருவரும்உண்ணத்தகுந்தது எனச்சைவத்திற்காக […]

காதல் சைவமா? அசைவமா? Read More »

முதல் பெருந்தொற்று!

  உன் ஒற்றைக் கடைவிழிவெல்லமாய் என்னைஇனிக்க வைக்கிறது! உன் இன்னொரு கண்ணோவிடமாய்ப் பாய்ந்துவிரைக்க வைக்கிறது! ஒரு கையில்மது கோப்பையையும்இன்னொரு கையில்மருந்து குப்பியையும்வைத்திருக்கும்மந்திரக் காரியா நீ? இரண்டு கண்களில்வெவ்வேறு பார்வையெனவிளையாட்டாய்ச் சொன்னாலும்‘நாங்க இருக்கோம்’ என்றுவாசலில் வந்து நிற்கிறதுவாசன் ஐ கேர்! அவர்களின்கண்ணாடிப் பார்வைக்குள்தென்படாமல் எப்படிதெருக்களில் நடமாடுகிறாய்? கொரோனா,உலக நாடுகளைஉலையில் ஏற்றச்சீனம் கொடுத்தசீதனம்! முதலில் அதுஒவ்வொரு பகுதியாய்ஆட்கொண்டது!பிறகு மெல்லஒவ்வொரு நாட்டிலும்ஆட்கொன்றது! தனக்குள்ளே ஒருஎதிர்மத்தை உண்டாக்கி,தன்னைத் தானேதகவமைத்துக் கொண்டகொரோனா உந்தன்கொள்கை பரப்புச் செயலாளரா? பச்சோந்திகளுக்கு நீ தான்பார்வை வகுப்பெடுத்தாயா? விடியலில்சூரியனை வாசலில்காத்திருக்க

முதல் பெருந்தொற்று! Read More »

முப்பாலில் இதை முதலாம் என்க…

“திருக்குறளைத் தூக்கிச் சுமக்க மதங்களின் பீடங்கள் இல்லை – அரசுகளின் பல்லக்குகள் இல்லை – திருக்குறள் பேசப்பட்ட நிலப்பரப்புக்கே தமிழ்நாடு என்ற பேரில்லை – வாள்முனையில் நீட்டிக்கப்பட்ட நெடுந்தேசம் இல்லை – திருக்குறள் எழுதப்பட்ட இனம் உலக மக்கட்பரப்பில் பேரினத் தொகுதியில்லை. சத்தியத்தின் சார்பை மட்டுமே நம்பி ஒரு நூல், உலக அறிவின் உயரத்தில் ஓர் ஆதி இனத்தின் அடையாளமாகத் திகழ்கிறதென்றால் அது எங்கள் முப்பால் ஆசான் வள்ளுவரின் மூளைச் சாறாய் விளங்கும் திருக்குறள் மட்டும்தான்” –

முப்பாலில் இதை முதலாம் என்க… Read More »

சீசரா? தெரியாது! நீராவா? கிடையாது!

“பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை.யார் மேலும் பட்டுவிடாமல்இரண்டு கைகளையும்வீசிக்கொண்டுஇன்னும் கொஞ்ச தூரம்போகவேண்டும்.அவ்வளவு தான்” – வண்ணதாசன் இந்தத் தலைமுறையில் பயணம் செய்யப் பிடிக்கும் எனச் சொல்லிக் கொள்ளும் பலரைக் காணமுடிகிறது. இந்தியர்களைப் பொறுத்தவரைப் பயணம் என்றால் காணாததைக் காண்பது. ஆனால் மற்ற நாட்டவர்களைப் பொறுத்தவரை, காண்பதைக் காணாதது தான் பயணம். விடுமுறைக்கு எங்கே செல்வதெனத் தெரியாமல், குழப்பமான மனத்துடன் இத்தாலி செல்வதென முடிவு செய்தேன். சீசர் போன்ற ஹீரோக்களும், முசோலினி போன்ற நீரோக்களும் வாழ்ந்த வரலாற்று ஊருக்குச் செல்வதென்றால்

சீசரா? தெரியாது! நீராவா? கிடையாது! Read More »

பிரிவின் பெருவலி

பிரியத்தில் தள்ளாடும் கணம்பிரிதலைப் பற்றிய எண்ணம் ஏன்? காதல் செய்வதில் மட்டும்கவனமாய் இருங்கள்…பிரிவின் அரங்கேற்றத்தைக்காலம் பார்த்துக்கொள்ளும்…  https://kavirasan.com/wp-content/uploads/2024/11/Spiderman.mp4

பிரிவின் பெருவலி Read More »

நான்கடி இமயம்!

சண்டிக்கார சமயங் களாலே மண்டிக் கிடந்த மக்களின் மனதில்  விளக்காய் இருளை விலக்கிய மாட்சி!கிழக்காய் வந்த கிளர்ச்சித் தீத்துகள்! பெரியார் என்னும் பெருஞ்சூரியனேஉரியார் என்று உளத்தில் வைக்கும்  வல்லமை பெற்ற வாக்கியமே! எம்நல்லதை எண்ணிய நான்கடி மலையே! கோபுரம் நிறைந்த காஞ்சியின் நடுவேமாபெரும் புகழில் மலர்ந்தவனே! நீ நாத்திகம் பற்றி நவில்வதைக் கேட்க சாத்தியம் என்றால் சாகவும் சம்மதம்! காரியம் முடித்த கண்ணியனே! நீவீரியம் கொண்டு விளித்ததைக் கண்டுஆரியக் கூட்டம் அஞ்சிய துன்முன்சூரியனுக்கும் சூடு குறைந்தது! இந்தித் திணிப்பை எதிர்த்து அஃதைசந்தியில் நிறுத்திய சரித்திரமே! நீ 

நான்கடி இமயம்! Read More »

J J Dreams – 7

நூலகத்தில், புரட்டுபவர்களுக்காக புத்தகங்கள் காத்திருக்க, அதன் நடுவில், எதிர் எதிர் இருக்கையில் ஜெரோமும் ஷ்ராவனியும் அமர்ந்திருந்தனர். ஷ்ராவனி செல்போனில் விரல்களால் பேசிக் கொண்டிருக்க, புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த ஜெரோம் தலை நிமிர்த்தாமல், “சுனில் என்ன சொன்னான்?”, என்றான். “புடிச்சிருக்குன்னு சொன்னான். எனக்கும் புடிச்சிருக்குன்னு சொன்னேன். அப்பறம் சும்மா சுத்திட்டு இருந்தோம். அவ்வளோதான். ஜோதா பேசுனாளா?”, ஷ்ராவனி. “யா! கொஞ்சம். நான் தான் அதிகம் பேசிட்டு இருந்தேன்” “நல்லா காண்டேக்ட்(contact) வச்சிக்கோ. உன்ன மாதிரி ஆளுக்கு எல்லாம் பின்னாடி

J J Dreams – 7 Read More »

J J Dreams – 6

சுனிலும் ஷ்ராவனியும் இல்யூஷன் ஹவுஸ் செல்ல, ஒரு புத்தகத்துடன் அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள மரப்பலகையில் சென்று அமர்ந்தான் ஜெரோம். எதுவும் பேசாமல் அவன் அருகில் வந்தமர்ந்த ஜோதாவிடம், தானாய் எதுவும் பேசக் கூடதென்பதில் தீர்க்கமாய் இருந்தான் ஜெரோம். சுற்றத்தை நோட்டமிட்டான். சுடாத வெயில். குடை விரித்த மர நிழல்கள். மகரந்தம் ஏந்திய மலர்கள். விளையாடும் சிறார்கள். ஆட்கள் மொய்க்கும் வேஃபல்ஸ் வண்டி. சில நிமிடங்களுக்குப் பின், “என்ன படிக்கிற?”, ஜோதாவே உரையாடலைத் தொடக்கினாள். மிகினும் குறையினும்

J J Dreams – 6 Read More »

J J Dreams – 5

Antwerp Railway Station “அவன் ப்ரொப்போஸ்(propose) பண்ணா என்ன சொல்ல”, தன் இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று இறுகப் பற்றிக் கொண்டபடி, நடுக்கத்துடன் கேட்டாள் ஷ்ராவனி. “புடிக்கலன்னு சொல்லிடு”, ஜெரோம். “டேய்…” “அப்றம் என்ன… உனக்கும் அவனப் புடிச்சிருக்கு, அவனுக்கும் உன்னப் புடிச்சிருக்குனா. சரின்னு சொல்லிட்டு சந்தோசமா இருப்பியா”, பேசிக்கொண்டிருக்கும் போதே எதிரே சுனிலும், முகக்கவசம் அணிந்தபடி ஜோதாவும் வர, ‘ஹலோ’ என்று ஒருவருக்கொரு கைகுலுக்கிக் கொண்டனர், ஜோதா ஜெரோமைத் தவிர. இருவரும் வெறுப்புப் பார்வைகளே வீசினர்.

J J Dreams – 5 Read More »

J J Dreams – 4

நாட்கள் ஓடின… இரண்டு துறைகளை ஒன்றாய்த் திரட்டி, ஓரறையில் உட்கார வைத்தபடி, முன்னால் நின்று உரையாற்றத் தொடங்கினார், ப்ரொபஸர் கேலின். அவருக்கு அருகில் இருந்த பெயர்ப் பலகை, பாக்டன் கேலின் என்றது. கேலினை ப்ரொபஸர் என்று ஒப்புக் கொள்வது கொஞ்சம் கடினம். இளம் வயது. மூக்கிற்கும் புருவ மத்திக்கும் இடையில் நிற்கும் விளிம்பில்லாக் கண்ணாடி. வரிசையான மஞ்சைப் பற்கள். சிரிக்கும் போது மட்டும் வந்து போகும் கன்னச் சுருக்கங்கள், வயதைக் கொஞ்சம் கூட்டி மறைத்தது. மேசைக்குப் பின்

J J Dreams – 4 Read More »

Shopping Cart
Scroll to Top