நீர்ப்பறவை!

பச்சிளஞ்சிசுவெனஉறங்க வைத்துவிலகத் துணியாதே!பிரிவின் முன் பழக்கிவிட்டுப் போ! தொலைதலினும் மரித்தல் நலம்! – காயத்ரி ராஜசேகர் திரும்பி வராத கணவனின் திசைப் பார்த்துக் காத்திருக்கும் நந்திதாவிற்கு, தொலைதலை விட மரித்தல் நலமாக இருந்திருக்கும் என்னும் மனநிலையில் தான் ‘நீர்ப்பறவை’ படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். இன்ஸ்டாகிராம் வந்ததிற்குப் பின் படமோ பாடலோ கொண்டாடப்படுவது மிக இயல்பாயிற்று. அதில் அதிகம் பேசப்பட்ட பாடலாய் ‘பற பற பற பறவை ஒன்று’ பாடலைச் சொல்லலாம். இந்தப் பாடல், ஏட்டிலக்கியத்தைப் பாட்டிலக்கியமாய் மாற்றச் […]

நீர்ப்பறவை! Read More »

தொங்கும் தொடரி!

  “தன்னினும் வலியதைச் சுமந்ததண்டவாளத் தடங்கள்உடைந்த பின்பும்அதிர்ந்து கொண்டிருக்கின்றன,பள்ளிக்கூட தூண்களில்” உங்களுக்குத் தொடர்வண்டி பிடிக்குமா? வேர்வை நெடியின் பிடியில் சிக்கி, முகம் திருப்பக் கூட இடம் கிடைக்காமல் தரையில் அமர்ந்து கொண்டே பல ஊர் பயணம் செய்தவர்கள் இந்த கேள்விக்குப் பதில் அளிக்காமல் கடந்து செல்லலாம். ஏனைய எல்லோருக்கும் தொடர்வண்டி என்றால் பிடிக்கும் தானே? ஒருவேளை, மாரி செல்வராஜ் சொல்வது போல, குஜராத்தில் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், உங்களுக்குப் பிடிக்காமல் போகக் காரணங்கள் இருக்கிறதா? என்னைப்

தொங்கும் தொடரி! Read More »

ஜெமினை ஏ.ஐ-யும் அழகின் அளவீடும்!

  “என் அழகைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”, என்றாள் இளவரசி மாதேவி. “நீங்கள் பொறுக்கி எடுத்த பூலோக அழகை, உருக்கிச் செய்த உன்னதச் சிற்பம்; நெருக்கி வடித்த நேர்த்திச் சித்திரம்; அடுக்கி வைத்த அழகியல் வாக்கியம்; தடுக்கி வீழ்த்தும் தாமரைத் தடாகம்”, என்றான் கெவின், உலகில் கண்ட உன்னதப் படைப்பின் அழகில் விழுந்த அடுத்த நொடி. – காலச்சக்கரம் நூல் சமூக ஊடகங்களைத் திறந்தாலே, எங்குப் பார்த்தாலும் ஜெமினை ஏ.ஐ(Gemini AI) செய்து கொடுக்கும் செயற்கைப் படங்கள்

ஜெமினை ஏ.ஐ-யும் அழகின் அளவீடும்! Read More »

மாரீசனும் மறதியும்!

“என் வேண்டுதல் ஒன்றே.மறப்பதற்கு உனக்கு வாய்த்தஅதே மனதிடம்எனக்கும் வாய்க்க வேண்டும் என்பதே” – மகுடேஸ்வரன் எனக்கொரு நோய் இருக்கிறது. அது நூறில் சிலருக்கு மட்டுமே இருக்கும் நோய். இப்போது வரை அதற்கு மருத்துவமோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவே இல்லை. வீட்டுப் பாடத்தில் நான்கு வரை எழுதிவிட்டு ஐந்து எழுதத் தெரியாமல், அழுது கொண்டிருந்த அண்ணன் மகனை, மிரட்டி ஐந்து எழுதச் சொல்லிக் கொடுத்த அக்காவிடம், “மறந்து மறந்து போயிடுது அத்தை”, என்ற அழத் தொடங்கினான். அவன் பதிலைக் கொஞ்சம்

மாரீசனும் மறதியும்! Read More »

இதயத்தளபதி

“ஆரஞ்சுக் கலரா? ரோஸ் கலரா? என்னப் படம்ணே வேணும்?”, என்று வாசலில் நின்று கொண்டு கேபிள்கார அண்ணாக் கேட்க, அப்பா எங்களோடு கலந்தாலோசித்தார். மாதத்தின் முதல் வாரத்தில் தவறாமல் கேபிள் கட்டியவர்களுக்கு எல்லாம் அப்போது வெளிவந்த ‘ஆளவந்தான்’ ‘ஷாஜகான்’ பட டிக்கெட்டுகளை, கேபிள்கார அண்ணன்கள் வீடு வீடாகச் சென்று பட்டுவாடா செய்தனர். அப்பாக் கட்சி எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, அவர் சொல்வதைக் கேட்டு, நானும் ஆர்த்தியும் ஆளவந்தானுக்கு வாக்களிக்க, பாரதி மட்டும் தான் ஷாஜகானைத் தேர்வு

இதயத்தளபதி Read More »

பாதியின் பாதையில்…

“சமயங்களில் கைவிடுதலும்கருணைக் கொலையில் தான்சேர்த்தி நண்பா”- நேசமித்ரன் சென்ற வாரம் சோகப்பாடல்களைப் பேசும் நீயா நானாவில் அதிக துயர் தரும் பாடல் பற்றி கோபிநாத் கேட்க, ‘குயில் பாட்டு’ பாடலைக் குறிப்பிட்ட பெண் ஒருவர், “பாதில நிக்கிறப் பாட்டு இருக்குல சார் அது கொடுக்குற வலியே ஒரு மாதிரி பயமா இருக்கும்”, என்றார். பால்வெளியில் பயணப்படும் வால் நட்சத்திரமாய் மனது ஒருநிமிடம் அந்தரத்திலேயே அலைந்து திரும்பியது. குயில் பாட்டைப் பற்றி மனது ஏதேனும் குறிப்பு வைத்திருக்கிறதா என

பாதியின் பாதையில்… Read More »

முன்ன மாரி இல்ல, ரொம்ப மாறிட்ட…

பயணத்தில்ஜன்னல் ஓரம்கண் மூடிக்காற்று வாங்குபவன்போல்கிடக்கிறான்பனிப் பெட்டிக்குள்பின்னகரும் மரங்கள்போல வந்துசாத்துயர் கேட்டுப்போகிறார்கள்- கலாப்ரியா “இந்த ஊர்ல இருக்க எல்லாத் தெருவையும் போட்டோ எடுத்து வச்சிக்கணும் டா”, என்று பெல்ஜியம் சாலைகளைக் காட்டியதற்கு “ஏன்?”, என்றான் ஜெரால்ட் கொஞ்சம் வியப்பாக. “நாளப்பின்ன இங்க வந்தா எது எது மாறிருக்குனு நமக்கு அடையாளம் தெரியணும்ல” “அதெல்லாம் ஒன்னும் மாறி இருக்காது. இது யூரோப். நூறு வருசத்துக்கு முன்னடி எடுத்த எந்தப் போட்டாவ பாத்தீன்னாலும் இந்த ஊரு அப்படியே தான் இருக்கும். எதுவும்

முன்ன மாரி இல்ல, ரொம்ப மாறிட்ட… Read More »

நானெனப்படுவது…

நான் என்கிற பொய்யான வாதம்நாள் சென்றதும் என்னோடே மோதும்;தேர்வாக என் முன் வந்த பேதம்தீர்வாகினால் இப்போது போதும்; நான் என்பது யாரோ என் மனதிடமே கேட்டேன்;வான் மீதொரு பூவாய்நடு இரவினிலே பூத்தேன்;தான் என்பதைத் தூரம்ஒரு உடையெனவே வீசிஊன் வெளிப்படும் பித்தன் எனத் திரிந்தேன்; தெரிந்தேன்; தெளிந்தேன்; நான் என்பதை நிதம் உணரவேநான் என்பதன் பதம் உணரவேநான் என்பதில் விதம் உணரவேநான் என்னையே வதம் செய்கிறேன்; வேகாதொரு விறகாய் கேள்விவேள்வி துரத்தத் துரத்தத் தானேநோகாதொரு வாழ்வை வாழ்ந்தேநித்தம் நித்தம்

நானெனப்படுவது… Read More »

வெவ்வேறு ஒளி, ஒரே நிழல்!

வேடிக்கைக்குள் விழுந்த உலகம்வெறுப்பைக் கொடுக்கும் சம்பளமாய்;மூடிக்குள்ளே முடங்கிக் கிடக்கும் முகமென்றாகும் அம்பலமாய்? இருப்பதை எல்லாம் இசைப்பதற்கே – என்இதயம் இரண்டாய் அடிக்கிறது;இருபதில் செய்ததை மறக்காமல் – மனம்இப்போதும் செய்யத் துடிக்கிறது; உரைக்கும் சொற்கள் செவிமடல்கட்குஉள்ளேச் செல்ல மறுக்கிறதா?இரைச்சல் என்றே நினைக்கும் மனமதைஎடுத்துக் கொள்ளாதிருக்கிறதா? நிகழ்வதை நிந்தனை செய்வீர்; ஒருநாள்நிச்சயம் திறக்கும் தடங்காது;இகழ்வதைத் தொழிலெனக் கொண்டோரே – அடஎரிமலை முறத்தால் அடங்காது; நித்தம் நித்தம் முதுமை என்றன்நினைவுக்குள் சென்று அடர்கிறது;எத்தனை வயது ஏறும் போதும்இளமையும் என்னைத் தொடர்கிறது; மூடிய

வெவ்வேறு ஒளி, ஒரே நிழல்! Read More »

Adolescence

“கசப்பாய் இருக்கிறதெனஒவ்வொரு மிடற்றுக்கும்ஒவ்வொரு பிடி சர்க்கரையை வாயிலிட்டுவிசமருந்திச் செத்தவள்உங்களுக்கு யுவதியாகவாத் தெரிகிறாள்? நான் குழந்தை என்கிறேன்” – ந. சிவநேசன் சில நாட்களாக எங்குப் பார்த்தாலும் ‘அடலசன்ஸ்(Adolescence)’ பற்றிய உரையாடல்களைக் கேட்க முடிகிறது. ஒரு சிலர் அதை ஆகச் சிறந்ததென்றும், ஒரு சிலர் அதை மறுத்துப் பேசுவதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அப்படி அதில், என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்துடன் பார்த்தோமேயானால், தூக்கம் கெடுவது தான் மிச்சம். பதிமூன்று வயது சிறுவன் செய்த கொலையைப்

Adolescence Read More »

Shopping Cart
Scroll to Top