மணிமேகலை சௌரிராசன்!
முரண்பட்டக் கருத்துகளை மொழிவது யாராயினும் அரண்கட்டி அதனுள்ளே அமைதியாய் வாழாமல் எடுத்து அவர்களிடம் விளம்பு! அது வேந்தனே ஆயினும் எதிர்த்துரைக்கும் நீர்‘சிலம்பு’! ஆம்,அடுத்தவர்க்காய் நீர்‘வளையாபதி’! அன்னை தமிழின் அழகுத் தோள்களில் ஆடும் நீரொரு ‘குண்டலம்’! பற்களிலே சிக்காமல் பல்லிடங்கள் நிற்காமல் தெற்கிருக்கும் வள்ளுவனாய் தேன் கலந்த கல் கவணாய்சொக்கவைத்து பொட்டடிக்கும் சோழியாய் உன் சொற்கள்! அது வெறும் சொற்கள் அல்ல,சொற்கள் அல்ல,சொந்தமென்ற-சொர்க்கத்தை விலைக்கு வாங்கும் வைரமணிக் கற்கள்! ஆம்! உம்சொற்கள் ஒவ்வொன்றும் ‘சிந்தாமணி’! அட்சயப் பாத்திரம் ஏந்தாமல், […]