இறைவனிடம் கையேந்துங்கள்!

“வள்ளல் நபி கதையைவரைகின்றேன் – காவியத்தின்உள்ளே நீ நிறைந்து ஒளியேற்ற மாட்டாயா? தெரியாமல் நான் இந்ததீன் நெருப்பைத் தொட்டுவிட்டேன்;கருகாமல் சுடர் வீசக்கருணையினைக் காட்டாயா? எனக்காக இல்லையெனினும்இறைதூதர் ஏந்தல் நபிதனக்காக இங்கெனக்குத்தமிழெடுத்து நீட்டாயா?” – முகமது மேத்தா “இந்த வாட்டியாச்சும் நாகூர் போயி ஒரு தென்னம்பிள்ளை வாங்கி வச்சிருப்பா”, என்று அம்மா சொன்ன போது தான் மாமாவின் வேண்டுதல் நினைவுக்கு வந்தது. மாமா மாமி என்று மட்டுமே அழைத்ததனால் என்னவோ அவர் பெயர் கூட எங்களுக்குத் தெரியாமலேயே போனது. […]

இறைவனிடம் கையேந்துங்கள்! Read More »

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

“ஓடுவது, துரத்துவதுவீசி எறிவது,குறி பார்த்து அடிப்பது,பிடிப்பது, தப்பிப்பது,மறைந்து கொள்வது,சுற்றுவது, சறுக்குவது,மூச்சு வாங்குவது எனவிளையாடி வாழ்க்கைக்குத்தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்சிறுவர், சிறுமியர்” – முகுந்த் நாகராஜன் வளர்தலும் வளர்தல் நிமித்தமும் வன்முறையை நோக்கி மட்டும் தான் என்று நினைக்கும் போதே இந்த உலகம் குழந்தைகள் உலகமாக மட்டுமே இருந்திருந்தால் எவ்வளவு அமைதியாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஜெர்மானியக் கவிஞர் கதே படைத்த சாத்தான் கதாபாத்திரம், கடவுளை விடவும் நான் நல்லவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும். அதில், “நீங்களே

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது Read More »

முப்பாலுக்கு அப்பால்!

ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் படித்து முடித்ததாய் செருக்குக் கொஞ்சம் சிரம் தூக்கும் ஒவ்வொரு முறையும், ‘திருக்குறளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்’ என இறையன்பு சொன்னதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்கிறேன். திருக்குறள் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல, வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும், ஒரு புதிய பொருளோடும், அதுவரை காணாத முகத்தோடும் காட்சியளிக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவம் ஒரு

முப்பாலுக்கு அப்பால்! Read More »

இரண்டாம் பால் என எண்ணிக் கொள்க…

“வாழ்க்கை சொர்க்கமா ஆகுறதுக்குப் பணம் மட்டும் காரணமில்ல தான். ஆனா நரகமா வாழ்க்கை ஆகுறதுக்குப் பணம் இல்லங்கற ஒரே காரணம் போதும்” – ஜெயகாந்தன்(யாருக்காக அழுதான்) பணம் தான் உலகத்தை இயங்க வைக்கும் எரிபொருள்! அதனால் தான், அறத்திற்கு முப்பத்தெட்டு அதிகாரமும், காதலுக்கு இருபத்தி ஐந்து அதிகாரமும் கொடுத்த வள்ளுவம், பொருளுக்கு மட்டும் எழுபது அதிகாரங்களைக் கொடுக்க இசைந்திருக்குமோ என்னவோ? எஸ்.ரா பேசும் காணொளி ஒன்றில், ‘பொருள் தானே ஒருவனைத் தன் நிலத்தை விட்டு, தன் மக்களை

இரண்டாம் பால் என எண்ணிக் கொள்க… Read More »

வாலிப வாலி!

எல்லோருக்குமானது இலக்கியம். அதை ஏன், ஒரு சாரருக்கு மட்டும் ஒதுக்க வேண்டும்? பாமரனின் பந்திக்குப் படங்களை மட்டுமே கொண்டு சென்ற திரைக் கலைஞர்கள், பாடல்களை ஏனோ பரிமாறவே இல்லை. அவர்களின் பசியைக் கவிதையைக் கொடுத்துக் கட்டிப் போட்டனர். கவித்துவம், இலக்கியத்தில் கரைகண்ட கூட்டம், புரிந்த வரிகளை முகர்ந்து கொண்டது. புரியாதக் கூட்டமோ நகர்ந்து சென்றது. படங்களும் பாடல்களும் பாமரனுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடநூல் அன்றோ? மேட்டிமைத்தனம் அதிலும் மிகுந்திருக்குமாயின், ஏட்டிலக்கியம் படிக்காதவர்க்கு அது எப்படிப் புரியும்? காவிய

வாலிப வாலி! Read More »

திரும்பிப் பார்க்கும் தீபாவளி!

  மாடி வீட்டுக் குழந்தைகள்வெடிக்கும் சரவெடிகுடிசைகளின் வாசல்களைக்குப்பையாக்குகிறது! குப்பைகளைக் கொஞ்சம்உற்றுப் பார்த்தால்படிக்க வசதியில்லாதஅந்தக் குடிசைக் குழந்தைகளின்பாடநூல்களை யாரோசுக்கு நூறாய்க் கிழித்துப்போட்டதைப் போலத் தெரிகிறது! – பழநி பாரதி தீபாவளி என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரு வித ஆனந்தம் தொற்றிக் கொள்வதைக் காண முடிகிறது. ‘பொங்கலா? இல்லை பூமியின் பிறந்தநாள்’ என்று கவிப்பேரரசு வைரமுத்து சொல்வதைப் போல, பொங்கலை நாம் நமது மண்ணின் திருநாள் என உயர்த்திப் பிடித்தாலும் தீபாவளி கொடுக்கும் இன்பமும் ஏற்றமும் தனி தான். ‘தீபாவளிக்கு புது

திரும்பிப் பார்க்கும் தீபாவளி! Read More »

நீர்ப்பறவை!

பச்சிளஞ்சிசுவெனஉறங்க வைத்துவிலகத் துணியாதே!பிரிவின் முன் பழக்கிவிட்டுப் போ! தொலைதலினும் மரித்தல் நலம்! – காயத்ரி ராஜசேகர் திரும்பி வராத கணவனின் திசைப் பார்த்துக் காத்திருக்கும் நந்திதாவிற்கு, தொலைதலை விட மரித்தல் நலமாக இருந்திருக்கும் என்னும் மனநிலையில் தான் ‘நீர்ப்பறவை’ படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். இன்ஸ்டாகிராம் வந்ததிற்குப் பின் படமோ பாடலோ கொண்டாடப்படுவது மிக இயல்பாயிற்று. அதில் அதிகம் பேசப்பட்ட பாடலாய் ‘பற பற பற பறவை ஒன்று’ பாடலைச் சொல்லலாம். இந்தப் பாடல், ஏட்டிலக்கியத்தைப் பாட்டிலக்கியமாய் மாற்றச்

நீர்ப்பறவை! Read More »

தொங்கும் தொடரி!

  “தன்னினும் வலியதைச் சுமந்ததண்டவாளத் தடங்கள்உடைந்த பின்பும்அதிர்ந்து கொண்டிருக்கின்றன,பள்ளிக்கூட தூண்களில்” உங்களுக்குத் தொடர்வண்டி பிடிக்குமா? வேர்வை நெடியின் பிடியில் சிக்கி, முகம் திருப்பக் கூட இடம் கிடைக்காமல் தரையில் அமர்ந்து கொண்டே பல ஊர் பயணம் செய்தவர்கள் இந்த கேள்விக்குப் பதில் அளிக்காமல் கடந்து செல்லலாம். ஏனைய எல்லோருக்கும் தொடர்வண்டி என்றால் பிடிக்கும் தானே? ஒருவேளை, மாரி செல்வராஜ் சொல்வது போல, குஜராத்தில் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், உங்களுக்குப் பிடிக்காமல் போகக் காரணங்கள் இருக்கிறதா? என்னைப்

தொங்கும் தொடரி! Read More »

ஜெமினை ஏ.ஐ-யும் அழகின் அளவீடும்!

  “என் அழகைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”, என்றாள் இளவரசி மாதேவி. “நீங்கள் பொறுக்கி எடுத்த பூலோக அழகை, உருக்கிச் செய்த உன்னதச் சிற்பம்; நெருக்கி வடித்த நேர்த்திச் சித்திரம்; அடுக்கி வைத்த அழகியல் வாக்கியம்; தடுக்கி வீழ்த்தும் தாமரைத் தடாகம்”, என்றான் கெவின், உலகில் கண்ட உன்னதப் படைப்பின் அழகில் விழுந்த அடுத்த நொடி. – காலச்சக்கரம் நூல் சமூக ஊடகங்களைத் திறந்தாலே, எங்குப் பார்த்தாலும் ஜெமினை ஏ.ஐ(Gemini AI) செய்து கொடுக்கும் செயற்கைப் படங்கள்

ஜெமினை ஏ.ஐ-யும் அழகின் அளவீடும்! Read More »

மாரீசனும் மறதியும்!

“என் வேண்டுதல் ஒன்றே.மறப்பதற்கு உனக்கு வாய்த்தஅதே மனதிடம்எனக்கும் வாய்க்க வேண்டும் என்பதே” – மகுடேஸ்வரன் எனக்கொரு நோய் இருக்கிறது. அது நூறில் சிலருக்கு மட்டுமே இருக்கும் நோய். இப்போது வரை அதற்கு மருத்துவமோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவே இல்லை. வீட்டுப் பாடத்தில் நான்கு வரை எழுதிவிட்டு ஐந்து எழுதத் தெரியாமல், அழுது கொண்டிருந்த அண்ணன் மகனை, மிரட்டி ஐந்து எழுதச் சொல்லிக் கொடுத்த அக்காவிடம், “மறந்து மறந்து போயிடுது அத்தை”, என்ற அழத் தொடங்கினான். அவன் பதிலைக் கொஞ்சம்

மாரீசனும் மறதியும்! Read More »

Shopping Cart
Scroll to Top