முப்பாலுக்கு அப்பால்!
ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் படித்து முடித்ததாய் செருக்குக் கொஞ்சம் சிரம் தூக்கும் ஒவ்வொரு முறையும், ‘திருக்குறளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்’ என இறையன்பு சொன்னதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்கிறேன். திருக்குறள் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல, வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும், ஒரு புதிய பொருளோடும், அதுவரை காணாத முகத்தோடும் காட்சியளிக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவம் ஒரு […]