நான் ரசித்த வாலி-3

எல்லோருக்குமானது இலக்கியம். அதை, ஒரு சாரருக்கு மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்? படங்களை மட்டுமே மக்களின் பந்திக்குக் கொண்டு சென்ற திரைக் கூட்டம், பாடல்களை ஏனோ பறிமாறவே இல்லை. அவர்களின் பசியைக் கவிதையைக் கொடுத்துக் கட்டிப் போட்டது. அதன் சுவையை, உணர்ந்தோர் உண்டு கொழுத்தனர்; உணராதோர் கண்டு தவித்தனர். கலையால் நாமும் களிப்புற, காவியக் கவிஞர் வாலி, இயல் தமிழைத் துறந்து இயல்புத் தமிழுக்குத் தாவினார். அஃதோடு நிறுத்தாமல், புதுபுது முயற்சிகளை மேற்கொண்டு, திரைப்பாடல்களை, அடுத்த கட்டத்திற்கே […]

நான் ரசித்த வாலி-3 Read More »

நான் ரசித்த வாலி – 2

ஒரு படைப்பில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் அதன் காலத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். அருகிவிட்ட சொற்களைக் கொஞ்சம் ஆராய்ந்து சென்றால் அதன் நூற்றண்டுக்குள் நாமும் நுழைந்துவிடலாம். ஆம்! கால தண்டவாளங்களில் தான் பலக் கவிதைத் தொடரிகள் செல்கின்றன. அதை சிலர் கருத்தில் கொண்டு இயக்குவர், சிலர் இயல்பாகவே எழுதி விடுவதுண்டு. காவியக் கவிஞர் வாலி இதில் முதலாமவர். மேகத்திலிருந்து விழுகையில் துளியாகவும், அருவியில் நீரோட்டமாகவும், மலைகளில் நதிகளில் வெள்ளமாகவும், குட்டைகளில் சலமற்றதாகவும், கடல்களில் சீற்றம் கொண்ட அலையாகவும் என

நான் ரசித்த வாலி – 2 Read More »

நான் ரசித்த வாலி-1

தொண்ணூறுகளின் இறுதியில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் எல்லாம் பாக்கியசாலியகள் என்றே கருதத்தோன்றுகிறது. ஏனெனில், எல்லாத் தலைமுறைகளும் பத்தாண்டுகளைக் கடக்கும், ஒரு சில தலைமுறைகள் நூற்றாண்டுகளை கடக்கும், மிகச் சொற்பமான தலைமுறையே ஆயிரம் ஆண்டுகளைக் கடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடக்கும் தலைமுறைகள் ஒரே கல்லில் மூன்று மாங்காயை அடிக்கிறது. சென்ற ஆயிரம் ஆண்டில் இராஜ இராஜன் வாழ்ந்திருக்க, இந்த முறை, நாம். உலகமே மில்லினியத்தை நோக்கி உருண்டு கொண்டிருந்தது. உலகப் பணக்காரர்களின் பட்டியலில் ஒருவர் உச்சத்திற்கு ஏறி, உலகத்தை இன்னும்

நான் ரசித்த வாலி-1 Read More »

A Thousand Years of Pain

பெங்களுரு சாலைகளில், கார்களின் சத்தங்களுக்கு மத்தியில் நசுங்கிச் செத்துக் கொண்டிருந்தது அமைதி. ஆயிரம் பெரும் அலைகளை ஆழி வீசினாலும், அது அத்தனையையும் ஆற்றுப் படுத்தும் கரைகளைப் போல, அத்தனைப் பெரும் ஓசைகளையும், ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தன, அங்கிருந்த புத்தகக் கடைகள். யாருக்குத் தான் இங்கே கனவு இல்லை? கடையில் வேலை செய்பவருக்கு, சொந்தக் கடை வாங்க வேண்டும் என்ற கனவு. சின்ன கடை வைத்திருப்பவருக்கு, பெரிய கடை வாங்க வேண்டும் என்ற கனவு. பெரிய கடை முதலாளிக்கு கோடிஸ்வரன் ஆக வேண்டும்

A Thousand Years of Pain Read More »

ஆதி குகையின் அணையா நெருப்பு…

ஆதி குகையில் அணையாத நெருப்பு… அகரம் எதுவென்றே அறியப்படாத பூமியின் நாகரிக நெருப்பிற்கு, சிகரம் தான் முதலுரசிய சிக்கிமுக்கிக் கல். அங்கு தொடங்கிய ஆதி மனிதன், வேட்டையாடி விலங்கினத்தை உண்டும், மலைகளில் புதர்களில் மறைந்தும் வாழ்ந்தான். குன்றின் வளங்கள் குன்றிப் போக, காடுகளுக்குள் கால் வைத்தான். விலக்கி வாழ்ந்த விலங்கினை எல்லாம், பழக்கி வாழ்ந்து பட்டிக்குள் அடைத்தான். எத்தனை வளங்கள் இருந்தால் என்ன, உட்கார்ந்து உண்ணும் உணவு, ஒருநாள் தீர்வது போல, காடுகளும் அவனைக் கைவிட்டன. விதைக்காமல்

ஆதி குகையின் அணையா நெருப்பு… Read More »

Shopping Cart
Scroll to Top