பிரிவின் பெருவலி
பிரியத்தில் தள்ளாடும் கணம்பிரிதலைப் பற்றிய எண்ணம் ஏன்? காதல் செய்வதில் மட்டும்கவனமாய் இருங்கள்…பிரிவின் அரங்கேற்றத்தைக்காலம் பார்த்துக்கொள்ளும்… https://kavirasan.com/wp-content/uploads/2024/11/Spiderman.mp4
பிரியத்தில் தள்ளாடும் கணம்பிரிதலைப் பற்றிய எண்ணம் ஏன்? காதல் செய்வதில் மட்டும்கவனமாய் இருங்கள்…பிரிவின் அரங்கேற்றத்தைக்காலம் பார்த்துக்கொள்ளும்… https://kavirasan.com/wp-content/uploads/2024/11/Spiderman.mp4
சண்டிக்கார சமயங் களாலே மண்டிக் கிடந்த மக்களின் மனதில் விளக்காய் இருளை விலக்கிய மாட்சி!கிழக்காய் வந்த கிளர்ச்சித் தீத்துகள்! பெரியார் என்னும் பெருஞ்சூரியனேஉரியார் என்று உளத்தில் வைக்கும் வல்லமை பெற்ற வாக்கியமே! எம்நல்லதை எண்ணிய நான்கடி மலையே! கோபுரம் நிறைந்த காஞ்சியின் நடுவேமாபெரும் புகழில் மலர்ந்தவனே! நீ நாத்திகம் பற்றி நவில்வதைக் கேட்க சாத்தியம் என்றால் சாகவும் சம்மதம்! காரியம் முடித்த கண்ணியனே! நீவீரியம் கொண்டு விளித்ததைக் கண்டுஆரியக் கூட்டம் அஞ்சிய துன்முன்சூரியனுக்கும் சூடு குறைந்தது! இந்தித் திணிப்பை எதிர்த்து அஃதைசந்தியில் நிறுத்திய சரித்திரமே! நீ
நூலகத்தில், புரட்டுபவர்களுக்காக புத்தகங்கள் காத்திருக்க, அதன் நடுவில், எதிர் எதிர் இருக்கையில் ஜெரோமும் ஷ்ராவனியும் அமர்ந்திருந்தனர். ஷ்ராவனி செல்போனில் விரல்களால் பேசிக் கொண்டிருக்க, புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த ஜெரோம் தலை நிமிர்த்தாமல், “சுனில் என்ன சொன்னான்?”, என்றான். “புடிச்சிருக்குன்னு சொன்னான். எனக்கும் புடிச்சிருக்குன்னு சொன்னேன். அப்பறம் சும்மா சுத்திட்டு இருந்தோம். அவ்வளோதான். ஜோதா பேசுனாளா?”, ஷ்ராவனி. “யா! கொஞ்சம். நான் தான் அதிகம் பேசிட்டு இருந்தேன்” “நல்லா காண்டேக்ட்(contact) வச்சிக்கோ. உன்ன மாதிரி ஆளுக்கு எல்லாம் பின்னாடி
சுனிலும் ஷ்ராவனியும் இல்யூஷன் ஹவுஸ் செல்ல, ஒரு புத்தகத்துடன் அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள மரப்பலகையில் சென்று அமர்ந்தான் ஜெரோம். எதுவும் பேசாமல் அவன் அருகில் வந்தமர்ந்த ஜோதாவிடம், தானாய் எதுவும் பேசக் கூடதென்பதில் தீர்க்கமாய் இருந்தான் ஜெரோம். சுற்றத்தை நோட்டமிட்டான். சுடாத வெயில். குடை விரித்த மர நிழல்கள். மகரந்தம் ஏந்திய மலர்கள். விளையாடும் சிறார்கள். ஆட்கள் மொய்க்கும் வேஃபல்ஸ் வண்டி. சில நிமிடங்களுக்குப் பின், “என்ன படிக்கிற?”, ஜோதாவே உரையாடலைத் தொடக்கினாள். மிகினும் குறையினும்
Antwerp Railway Station “அவன் ப்ரொப்போஸ்(propose) பண்ணா என்ன சொல்ல”, தன் இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று இறுகப் பற்றிக் கொண்டபடி, நடுக்கத்துடன் கேட்டாள் ஷ்ராவனி. “புடிக்கலன்னு சொல்லிடு”, ஜெரோம். “டேய்…” “அப்றம் என்ன… உனக்கும் அவனப் புடிச்சிருக்கு, அவனுக்கும் உன்னப் புடிச்சிருக்குனா. சரின்னு சொல்லிட்டு சந்தோசமா இருப்பியா”, பேசிக்கொண்டிருக்கும் போதே எதிரே சுனிலும், முகக்கவசம் அணிந்தபடி ஜோதாவும் வர, ‘ஹலோ’ என்று ஒருவருக்கொரு கைகுலுக்கிக் கொண்டனர், ஜோதா ஜெரோமைத் தவிர. இருவரும் வெறுப்புப் பார்வைகளே வீசினர்.
நாட்கள் ஓடின… இரண்டு துறைகளை ஒன்றாய்த் திரட்டி, ஓரறையில் உட்கார வைத்தபடி, முன்னால் நின்று உரையாற்றத் தொடங்கினார், ப்ரொபஸர் கேலின். அவருக்கு அருகில் இருந்த பெயர்ப் பலகை, பாக்டன் கேலின் என்றது. கேலினை ப்ரொபஸர் என்று ஒப்புக் கொள்வது கொஞ்சம் கடினம். இளம் வயது. மூக்கிற்கும் புருவ மத்திக்கும் இடையில் நிற்கும் விளிம்பில்லாக் கண்ணாடி. வரிசையான மஞ்சைப் பற்கள். சிரிக்கும் போது மட்டும் வந்து போகும் கன்னச் சுருக்கங்கள், வயதைக் கொஞ்சம் கூட்டி மறைத்தது. மேசைக்குப் பின்
கரைகளைத் தொட்டு நுரைகளைப் பரப்பி, மேடு பள்ளங்களிலும், ஏற்ற இறக்கங்களிலும், நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஏற்படும் அதிர்வுகள் எண்ணிலடங்காதவை. ஓடும் நதியில் எறியப்படும் ஒரு கல், எந்த ஒரு அதிர்வையும் ஏற்படுத்தாமல், ஆழம் சென்று அமைதியாய் உறங்கும். ஆனால், குளங்களில் எறியப்படும் கல், கரையைத் தொடும்வரை, தன்னைச்சுற்றி வளையம் உண்டாக்கும் வல்லமை கொண்டவை. வேறுபாடு என்ன? அதிர்வுகளோடும் அசைவுகளோடும் செல்லும் வாழ்க்கை, ஓரிரு இடர்களில் ஒடுங்குவதில்லை. எல்லாவற்றிற்கும் முன்பே பழக்கப்பட்டிருப்பதால், ஒரு சிறு கல் அதை
“இங்கக் கம்யூன் எங்க இருக்கு?”, ஆறடிக்கும் உயரமாக, தொப்பி அணிந்திருந்த பெண்மணியிடம் கேட்டான் ஜெரோம். அப்பெண்மணி, வார்த்தையைச் செலவு செய்யாமல், வலது கையால் வழி சொல்ல, நன்றியுரைத்து அத்திசை நோக்கி விரைந்தான் ஜெரோம். ஃபேர் அண்ட் லவ்லி(Fair and Lovely) விளம்பரத்தில் வெள்ளைக்கு அடுத்து வரும் இந்திய நிறம். ஆறடிக்கு ஓர் அங்குலம் குறைவு. நெற்றியில் விழாமல் நேர்த்தியாய் சீவப்பட்ட முடி. தொட்டால் குத்தும் தாடி. குளிரை வெல்ல, ஆடையை மறைக்கும் கம்பளி மேலாடை. இடப்பக்கம் தோள் தொடங்கி வலப்பக்கம் விழுந்த, ஒரு பக்கப் பை அணிந்து, அந்தக் கண்ணாடிக் கட்டிடத்திற்குள் நுழைந்தான். வெளியே மழை விடாமல் தூறியது. அணிந்திருக்கும்
“War is not about who is right!War is all about who is left! நிலப்போர் புரிந்தவருள் நிலைப்போர்க்கு மட்டுமே நிற்பதற்கு நிழல் கொடுக்கிறது வரலாறு. நாளைப் போர் முடியப் போகிறது. பிழைத்தவர்களை எல்லாம் பிரபஞ்சம் பெரிதாய்ப் பேசும், ஆனால், உலக வரலாற்றில் உயிர்கள் குடித்த யுத்தங்களில் முதன்மையானது எது? ஆதாயம் கிடைக்க ஆ! தாயம்! கேட்டு, மனைவி மனை மாடு இழந்து, கைப்பொருள் விட்டுக் காடு நுழைந்து, உட்பகை நெஞ்சுக்குள் உலையாய் கொதிக்க
மக்களுக்கு ஏதும் என்றால்மன்னவன் குடையேகாக்கும்; அதுபோலே- ஆகாயத்தில்-இரவில் ஞாயிறு மறையஇரவல் நிலவேபூக்கும்; அத்தகுச் சிறந்தமதியை மதி;அன்றாடம் அதைத் மனதுள் துதி; ª ஞாயிறு விண்ணின் தோழன்; அதுபோல்ஞாலத்தில் வாழ்ந்தான்சோழன்; அவனதுபாதங்கள் மண்ணைவலம் வரும்; அதனின்பலனாய் பற்பலவளம் வரும்; அதுபோல்பரிதியும் தினமும்நிலம் வரும்; அத்தகு சிறந்தவன்இரவி; இருக்கட்டும்அவன்புகழ் மண்ணில்பரவி; ª விசும்பு விசும்பாமல் போனால்மண் விசும்பும்;மண் விசும்பினால்புல் விசும்பும்;புல் விசும்பினால்புள் விசும்பும்; மழையால் விண்ணும்கானம் பாடும்; அதன்மூலம்மண்ணின் மடியில்தானம் போடும்; அதனால்,அன்றாடம் போற்றுவோம்அடை மழையை; அளவின்றி தருமந்தகொடை நிலையை;