இதயத்தளபதி

“ஆரஞ்சுக் கலரா? ரோஸ் கலரா? என்னப் படம்ணே வேணும்?”, என்று வாசலில் நின்று கொண்டு கேபிள்கார அண்ணாக் கேட்க, அப்பா எங்களோடு கலந்தாலோசித்தார். மாதத்தின் முதல் வாரத்தில் தவறாமல் கேபிள் கட்டியவர்களுக்கு எல்லாம் அப்போது வெளிவந்த ‘ஆளவந்தான்’ ‘ஷாஜகான்’ பட டிக்கெட்டுகளை, கேபிள்கார அண்ணன்கள் வீடு வீடாகச் சென்று பட்டுவாடா செய்தனர். அப்பாக் கட்சி எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, அவர் சொல்வதைக் கேட்டு, நானும் ஆர்த்தியும் ஆளவந்தானுக்கு வாக்களிக்க, பாரதி மட்டும் தான் ஷாஜகானைத் தேர்வு […]

இதயத்தளபதி Read More »

பாதியின் பாதையில்…

“சமயங்களில் கைவிடுதலும்கருணைக் கொலையில் தான்சேர்த்தி நண்பா”- நேசமித்ரன் சென்ற வாரம் சோகப்பாடல்களைப் பேசும் நீயா நானாவில் அதிக துயர் தரும் பாடல் பற்றி கோபிநாத் கேட்க, ‘குயில் பாட்டு’ பாடலைக் குறிப்பிட்ட பெண் ஒருவர், “பாதில நிக்கிறப் பாட்டு இருக்குல சார் அது கொடுக்குற வலியே ஒரு மாதிரி பயமா இருக்கும்”, என்றார். பால்வெளியில் பயணப்படும் வால் நட்சத்திரமாய் மனது ஒருநிமிடம் அந்தரத்திலேயே அலைந்து திரும்பியது. குயில் பாட்டைப் பற்றி மனது ஏதேனும் குறிப்பு வைத்திருக்கிறதா என

பாதியின் பாதையில்… Read More »

முன்ன மாரி இல்ல, ரொம்ப மாறிட்ட…

பயணத்தில்ஜன்னல் ஓரம்கண் மூடிக்காற்று வாங்குபவன்போல்கிடக்கிறான்பனிப் பெட்டிக்குள்பின்னகரும் மரங்கள்போல வந்துசாத்துயர் கேட்டுப்போகிறார்கள்- கலாப்ரியா “இந்த ஊர்ல இருக்க எல்லாத் தெருவையும் போட்டோ எடுத்து வச்சிக்கணும் டா”, என்று பெல்ஜியம் சாலைகளைக் காட்டியதற்கு “ஏன்?”, என்றான் ஜெரால்ட் கொஞ்சம் வியப்பாக. “நாளப்பின்ன இங்க வந்தா எது எது மாறிருக்குனு நமக்கு அடையாளம் தெரியணும்ல” “அதெல்லாம் ஒன்னும் மாறி இருக்காது. இது யூரோப். நூறு வருசத்துக்கு முன்னடி எடுத்த எந்தப் போட்டாவ பாத்தீன்னாலும் இந்த ஊரு அப்படியே தான் இருக்கும். எதுவும்

முன்ன மாரி இல்ல, ரொம்ப மாறிட்ட… Read More »

நானெனப்படுவது…

நான் என்கிற பொய்யான வாதம்நாள் சென்றதும் என்னோடே மோதும்;தேர்வாக என் முன் வந்த பேதம்தீர்வாகினால் இப்போது போதும்; நான் என்பது யாரோ என் மனதிடமே கேட்டேன்;வான் மீதொரு பூவாய்நடு இரவினிலே பூத்தேன்;தான் என்பதைத் தூரம்ஒரு உடையெனவே வீசிஊன் வெளிப்படும் பித்தன் எனத் திரிந்தேன்; தெரிந்தேன்; தெளிந்தேன்; நான் என்பதை நிதம் உணரவேநான் என்பதன் பதம் உணரவேநான் என்பதில் விதம் உணரவேநான் என்னையே வதம் செய்கிறேன்; வேகாதொரு விறகாய் கேள்விவேள்வி துரத்தத் துரத்தத் தானேநோகாதொரு வாழ்வை வாழ்ந்தேநித்தம் நித்தம்

நானெனப்படுவது… Read More »

வெவ்வேறு ஒளி, ஒரே நிழல்!

வேடிக்கைக்குள் விழுந்த உலகம்வெறுப்பைக் கொடுக்கும் சம்பளமாய்;மூடிக்குள்ளே முடங்கிக் கிடக்கும் முகமென்றாகும் அம்பலமாய்? இருப்பதை எல்லாம் இசைப்பதற்கே – என்இதயம் இரண்டாய் அடிக்கிறது;இருபதில் செய்ததை மறக்காமல் – மனம்இப்போதும் செய்யத் துடிக்கிறது; உரைக்கும் சொற்கள் செவிமடல்கட்குஉள்ளேச் செல்ல மறுக்கிறதா?இரைச்சல் என்றே நினைக்கும் மனமதைஎடுத்துக் கொள்ளாதிருக்கிறதா? நிகழ்வதை நிந்தனை செய்வீர்; ஒருநாள்நிச்சயம் திறக்கும் தடங்காது;இகழ்வதைத் தொழிலெனக் கொண்டோரே – அடஎரிமலை முறத்தால் அடங்காது; நித்தம் நித்தம் முதுமை என்றன்நினைவுக்குள் சென்று அடர்கிறது;எத்தனை வயது ஏறும் போதும்இளமையும் என்னைத் தொடர்கிறது; மூடிய

வெவ்வேறு ஒளி, ஒரே நிழல்! Read More »

Adolescence

“கசப்பாய் இருக்கிறதெனஒவ்வொரு மிடற்றுக்கும்ஒவ்வொரு பிடி சர்க்கரையை வாயிலிட்டுவிசமருந்திச் செத்தவள்உங்களுக்கு யுவதியாகவாத் தெரிகிறாள்? நான் குழந்தை என்கிறேன்” – ந. சிவநேசன் சில நாட்களாக எங்குப் பார்த்தாலும் ‘அடலசன்ஸ்(Adolescence)’ பற்றிய உரையாடல்களைக் கேட்க முடிகிறது. ஒரு சிலர் அதை ஆகச் சிறந்ததென்றும், ஒரு சிலர் அதை மறுத்துப் பேசுவதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அப்படி அதில், என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்துடன் பார்த்தோமேயானால், தூக்கம் கெடுவது தான் மிச்சம். பதிமூன்று வயது சிறுவன் செய்த கொலையைப்

Adolescence Read More »

காதல் சைவமா? அசைவமா?

அவள்,மத்தியச் சோற்றுக்கேபத்தியச் சோற்றைப்பழகி வாழ்ந்தவள்! அவன்,நண்டு நத்தையெனக்கண்டு களிப்பதைஉண்டு கொளுத்தவன்! பன்னீரே அவளுக்குபட்டர் சிக்கன்!சோயா உருண்டையேசுக்கா மட்டன்! அவனோ,கட்சிமாறி சைவம் சேர்ந்ததால்முட்டையோடே பந்தத்தைமுறித்துக் கொண்டவன்! அவள்,கடுகே காரமென்றுகண் கசக்கும் அய்யமாரு! அவன்,கறிக்குத் தாகமென்றுகள் அடிக்கும் அய்யனாரு! வெளியே சென்றாலேவெஜ்ஜா? நான் வெஜ்ஜா?பட்டிமன்றம் தான்! ‘ஜீவகாருண்யம்’அவள் வாதம்! ஒரு உயிருக்குஇன்னொரு உயிரைஉணவாய் படைத்ததேஇயற்கை தான்அவன் வாதம்! வாழைக்காய் மீன்பருப்புக் ‘கோலா’ எனஅசைவப் பெயர்களைச்சைவத்திற்குச் சூட்டிஅழகு பார்ப்பாள்,வளைந்து கொடுத்ததாய்வாதிடுவாள்! பாலுண்ணும் போதுஇறைச்சியுண்ணலில்பாதகம் இல்லையெனஅவன் நியாயம் பேசுவான்! உடன்பட்டு இருவரும்உண்ணத்தகுந்தது எனச்சைவத்திற்காக

காதல் சைவமா? அசைவமா? Read More »

முதல் பெருந்தொற்று!

  உன் ஒற்றைக் கடைவிழிவெல்லமாய் என்னைஇனிக்க வைக்கிறது! உன் இன்னொரு கண்ணோவிடமாய்ப் பாய்ந்துவிரைக்க வைக்கிறது! ஒரு கையில்மது கோப்பையையும்இன்னொரு கையில்மருந்து குப்பியையும்வைத்திருக்கும்மந்திரக் காரியா நீ? இரண்டு கண்களில்வெவ்வேறு பார்வையெனவிளையாட்டாய்ச் சொன்னாலும்‘நாங்க இருக்கோம்’ என்றுவாசலில் வந்து நிற்கிறதுவாசன் ஐ கேர்! அவர்களின்கண்ணாடிப் பார்வைக்குள்தென்படாமல் எப்படிதெருக்களில் நடமாடுகிறாய்? கொரோனா,உலக நாடுகளைஉலையில் ஏற்றச்சீனம் கொடுத்தசீதனம்! முதலில் அதுஒவ்வொரு பகுதியாய்ஆட்கொண்டது!பிறகு மெல்லஒவ்வொரு நாட்டிலும்ஆட்கொன்றது! தனக்குள்ளே ஒருஎதிர்மத்தை உண்டாக்கி,தன்னைத் தானேதகவமைத்துக் கொண்டகொரோனா உந்தன்கொள்கை பரப்புச் செயலாளரா? பச்சோந்திகளுக்கு நீ தான்பார்வை வகுப்பெடுத்தாயா? விடியலில்சூரியனை வாசலில்காத்திருக்க

முதல் பெருந்தொற்று! Read More »

முப்பாலில் இதை முதலாம் என்க…

“திருக்குறளைத் தூக்கிச் சுமக்க மதங்களின் பீடங்கள் இல்லை – அரசுகளின் பல்லக்குகள் இல்லை – திருக்குறள் பேசப்பட்ட நிலப்பரப்புக்கே தமிழ்நாடு என்ற பேரில்லை – வாள்முனையில் நீட்டிக்கப்பட்ட நெடுந்தேசம் இல்லை – திருக்குறள் எழுதப்பட்ட இனம் உலக மக்கட்பரப்பில் பேரினத் தொகுதியில்லை. சத்தியத்தின் சார்பை மட்டுமே நம்பி ஒரு நூல், உலக அறிவின் உயரத்தில் ஓர் ஆதி இனத்தின் அடையாளமாகத் திகழ்கிறதென்றால் அது எங்கள் முப்பால் ஆசான் வள்ளுவரின் மூளைச் சாறாய் விளங்கும் திருக்குறள் மட்டும்தான்” –

முப்பாலில் இதை முதலாம் என்க… Read More »

சீசரா? தெரியாது! நீராவா? கிடையாது!

“பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை.யார் மேலும் பட்டுவிடாமல்இரண்டு கைகளையும்வீசிக்கொண்டுஇன்னும் கொஞ்ச தூரம்போகவேண்டும்.அவ்வளவு தான்” – வண்ணதாசன் இந்தத் தலைமுறையில் பயணம் செய்யப் பிடிக்கும் எனச் சொல்லிக் கொள்ளும் பலரைக் காணமுடிகிறது. இந்தியர்களைப் பொறுத்தவரைப் பயணம் என்றால் காணாததைக் காண்பது. ஆனால் மற்ற நாட்டவர்களைப் பொறுத்தவரை, காண்பதைக் காணாதது தான் பயணம். விடுமுறைக்கு எங்கே செல்வதெனத் தெரியாமல், குழப்பமான மனத்துடன் இத்தாலி செல்வதென முடிவு செய்தேன். சீசர் போன்ற ஹீரோக்களும், முசோலினி போன்ற நீரோக்களும் வாழ்ந்த வரலாற்று ஊருக்குச் செல்வதென்றால்

சீசரா? தெரியாது! நீராவா? கிடையாது! Read More »

Shopping Cart
Scroll to Top