நான் ரசித்த வாலி-5

கவிதைகளில் கவித்துவம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு; ஆனால் பாடல்களுக்கு, அதுவும் தேவையான ஒரு பண்பு. அதுமட்டுமல்ல. பாடல்களைப் பொருத்த வரையில், புதுமையைத் தான் மக்கள் மனம் கொண்டாடுகிறது. இன்றதை, எத்தனையோப் பேர் செய்தாலும், அதை, அன்றே செய்தவர் கவிஞர் வாலி. படங்களில் தோன்றும் பாத்திரங்களை எல்லாம் பாடல்களில் பதித்தவர், சில நிஜப்பெயர்களையும், மக்கள் மனதில், நிலைநாட்ட முயற்சித்தார். முந்தைய பதிவில் சொன்ன ஒரு பாடலால், வாலியோடு ஒருவர், முறைத்துக் கொண்டார் என்றால் நம்புவீர்களா? ஆம்! “கறவை […]

நான் ரசித்த வாலி-5 Read More »

நான் ரசித்த வாலி-4

உணவு, உடை, உறைவிடம் என்பதோடு காமத்தையும் சேர்த்திருக்க வேண்டும். உணவுக்கு அலைந்தன உயிரினங்கள்; அது கிட்டியதும், தினவுக்கு அலையைத் தொடங்கின. காமத்திற்காக, உறுதிகள் எத்தனை உடைந்தனவோ? குருதிகள் எத்துணை வடிந்தனவோ? மறைத்து மறைத்து கொண்டு செல்வதைத் தான் மனது நினைத்து நினைத்து தவிக்கும். கல்வியில் மெய் வேண்டாம் என்கிறது பிற்போக்கு சமூகம். கல்வி’யில் மெய்யை நீக்கினால், கலவி ஆகும் என்று அறியாதவர்களிடம் என்ன பேசுவது? கல்வி கலவி, பள்ளி பள்ளி இரண்டும் வாழ்க்கைக்குத் தேவை என்று வாதாடிப்

நான் ரசித்த வாலி-4 Read More »

நான் ரசித்த வாலி-3

எல்லோருக்குமானது இலக்கியம். அதை, ஒரு சாரருக்கு மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்? படங்களை மட்டுமே மக்களின் பந்திக்குக் கொண்டு சென்ற திரைக் கூட்டம், பாடல்களை ஏனோ பறிமாறவே இல்லை. அவர்களின் பசியைக் கவிதையைக் கொடுத்துக் கட்டிப் போட்டது. அதன் சுவையை, உணர்ந்தோர் உண்டு கொழுத்தனர்; உணராதோர் கண்டு தவித்தனர். கலையால் நாமும் களிப்புற, காவியக் கவிஞர் வாலி, இயல் தமிழைத் துறந்து இயல்புத் தமிழுக்குத் தாவினார். அஃதோடு நிறுத்தாமல், புதுபுது முயற்சிகளை மேற்கொண்டு, திரைப்பாடல்களை, அடுத்த கட்டத்திற்கே

நான் ரசித்த வாலி-3 Read More »

நான் ரசித்த வாலி – 2

ஒரு படைப்பில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் அதன் காலத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். அருகிவிட்ட சொற்களைக் கொஞ்சம் ஆராய்ந்து சென்றால் அதன் நூற்றண்டுக்குள் நாமும் நுழைந்துவிடலாம். ஆம்! கால தண்டவாளங்களில் தான் பலக் கவிதைத் தொடரிகள் செல்கின்றன. அதை சிலர் கருத்தில் கொண்டு இயக்குவர், சிலர் இயல்பாகவே எழுதி விடுவதுண்டு. காவியக் கவிஞர் வாலி இதில் முதலாமவர். மேகத்திலிருந்து விழுகையில் துளியாகவும், அருவியில் நீரோட்டமாகவும், மலைகளில் நதிகளில் வெள்ளமாகவும், குட்டைகளில் சலமற்றதாகவும், கடல்களில் சீற்றம் கொண்ட அலையாகவும் என

நான் ரசித்த வாலி – 2 Read More »

நான் ரசித்த வாலி-1

தொண்ணூறுகளின் இறுதியில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் எல்லாம் பாக்கியசாலியகள் என்றே கருதத்தோன்றுகிறது. ஏனெனில், எல்லாத் தலைமுறைகளும் பத்தாண்டுகளைக் கடக்கும், ஒரு சில தலைமுறைகள் நூற்றாண்டுகளை கடக்கும், மிகச் சொற்பமான தலைமுறையே ஆயிரம் ஆண்டுகளைக் கடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடக்கும் தலைமுறைகள் ஒரே கல்லில் மூன்று மாங்காயை அடிக்கிறது. சென்ற ஆயிரம் ஆண்டில் இராஜ இராஜன் வாழ்ந்திருக்க, இந்த முறை, நாம். உலகமே மில்லினியத்தை நோக்கி உருண்டு கொண்டிருந்தது. உலகப் பணக்காரர்களின் பட்டியலில் ஒருவர் உச்சத்திற்கு ஏறி, உலகத்தை இன்னும்

நான் ரசித்த வாலி-1 Read More »

A Thousand Years of Pain

பெங்களுரு சாலைகளில், கார்களின் சத்தங்களுக்கு மத்தியில் நசுங்கிச் செத்துக் கொண்டிருந்தது அமைதி. ஆயிரம் பெரும் அலைகளை ஆழி வீசினாலும், அது அத்தனையையும் ஆற்றுப் படுத்தும் கரைகளைப் போல, அத்தனைப் பெரும் ஓசைகளையும், ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தன, அங்கிருந்த புத்தகக் கடைகள். யாருக்குத் தான் இங்கே கனவு இல்லை? கடையில் வேலை செய்பவருக்கு, சொந்தக் கடை வாங்க வேண்டும் என்ற கனவு. சின்ன கடை வைத்திருப்பவருக்கு, பெரிய கடை வாங்க வேண்டும் என்ற கனவு. பெரிய கடை முதலாளிக்கு கோடிஸ்வரன் ஆக வேண்டும்

A Thousand Years of Pain Read More »

ஆதி குகையின் அணையா நெருப்பு…

ஆதி குகையில் அணையாத நெருப்பு… அகரம் எதுவென்றே அறியப்படாத பூமியின் நாகரிக நெருப்பிற்கு, சிகரம் தான் முதலுரசிய சிக்கிமுக்கிக் கல். அங்கு தொடங்கிய ஆதி மனிதன், வேட்டையாடி விலங்கினத்தை உண்டும், மலைகளில் புதர்களில் மறைந்தும் வாழ்ந்தான். குன்றின் வளங்கள் குன்றிப் போக, காடுகளுக்குள் கால் வைத்தான். விலக்கி வாழ்ந்த விலங்கினை எல்லாம், பழக்கி வாழ்ந்து பட்டிக்குள் அடைத்தான். எத்தனை வளங்கள் இருந்தால் என்ன, உட்கார்ந்து உண்ணும் உணவு, ஒருநாள் தீர்வது போல, காடுகளும் அவனைக் கைவிட்டன. விதைக்காமல்

ஆதி குகையின் அணையா நெருப்பு… Read More »

விடுதலை

குருதிக்குள் தோய்ந்தபடிகுண்டுமழைப் பெய்யும் – கணம் இறுதிக்குள் செல்லுமினம்எண்ணமென்ன செய்யும்? வரம்புகளை உடைத்தபடிவந்ததடா போர்கள்! பலநரம்புகளை வடமாக்கிநகர்ந்தடா தேர்கள்! முடங்கியது போதுமென்றுமுழங்கியது சங்கு! வெடிக்கிடங்கில்வந்து விழுந்ததொருகிளர்ச்சிகளின் கங்கு! பரங்கியனை எதிர்கொண்டுபார்த்தோமே ஒரு கை! உலகஅரங்கில்மெல்ல நிகழ்ந்ததுநம்அனைவரது வருகை! ஒருகையும் ஆணென்றால்மறுகையும் பெண்தான்! அந்தஇருகைக்கும் வணக்கத்தைஇயம்பவேண்டும் மண்தான்! ஆட்சிசெய்ய வந்தவனும்அரண்டுமிரண்டு போனான்! மிருகக்காட்சியிலே என்னசெய்யும் காலொடிந்த ஓணான்? வந்தேறி சென்றானெனவாளுறைக்குள் துஞ்சா! தமிழ்வந்தேறி ஆடிவிட்டால்வதங்களுக்கும் அஞ்சா! எருவுக்குள் தீப்பிடித்தால்என்னயிங்கு மிஞ்சும்? நாளைக்கருவுக்குள் தோன்றுவதும்கத்தியுடன் துஞ்சும்! இடிகளுக்குக் கேட்டிடுமோகடுகுடைக்கும் சத்தம்!

விடுதலை Read More »

கள்ளக் களவாணி

பம்பரம் சுத்தி பூமிக்குள்ளபள்ளத்தாக்கப் பறிச்சிருச்சே!கம்பரக் கத்தி தன்னந்தனியாகருவக் காட்டக் கழிச்சிருச்சே! உதிரம் குடிக்க மறுத்த மனசுல உண்ணா விரதப் போராட்டம்!அதிர ஓடும் ரயிலுக்கெடையிலஅம்புட்டதுபோல் மாராட்டம்! காத்தது மெல்லக் காய்ச்சதுக் குள்ள களவாப் போன நெலமையடி! நீசேத்தது எல்லாம் செல்லா தாயிடும்,செலவாகாத எளமையடி! ஆட்டத் திருடும் கூட்டம் போலஆளத்திருடத் திரியிறியே! மனக்காட்டுக் குள்ளக் கொள்ளிப் பேயாக்கொழுந்து விட்டு எரியிறியே! கிளியே நீயும் பறந்தப் பிறகு கெழக்கும் ராவுல கெடக்குதடி!வெளியே குதிச்சு வரவே நெனச்சுவிரதம் உடல ஒடைக்கிதடி! கழுத்தக் கவ்வும் நரியப்

கள்ளக் களவாணி Read More »

Shopping Cart
Scroll to Top