<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கவிராசன் பதிப்பகம்</title>
	<atom:link href="https://kavirasan.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://kavirasan.com/</link>
	<description>எட்டு திக்கும் கொட்டு முரசே</description>
	<lastBuildDate>Tue, 08 Sep 2026 06:11:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://kavirasan.com/wp-content/uploads/2022/05/fav.png</url>
	<title>கவிராசன் பதிப்பகம்</title>
	<link>https://kavirasan.com/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>Bangalore Days</title>
		<link>https://kavirasan.com/bangalore-days/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Sep 2026 06:05:53 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<category><![CDATA[#katturaigal #கட்டுரைகள் #tamil #தமிழ் #தமிழ்_கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4834</guid>

					<description><![CDATA[<p>பேசிக்கொண்டே இருந்ததில் பேருந்துக்கான நேரம் அருகுவதைக் கூட பொருட்படுத்தாது இருக்க, இன்னும் அரை மணி நேரத்தில் பேருந்து என்பதை உணர்ந்த கணம் தான் உடனே கிளம்பினேன். ஏற வேண்டிய பேருந்து எங்கள் வாகனத்திற்குச் சற்று முன்னால் செல்ல, ஒரு வழியாய் அதைப் பின் தொடர்ந்து உரிய நேரத்தில் ஏற வேண்டிய இடத்தை அடைந்து பேருந்தில் ஏறியாயிற்று. காலணி கொஞ்சம் கடுகடுத்தது. செருப்பு கொண்டு வராததால், எங்குச் சென்றாலும் பூட்ஸ் தான். இரவெல்லாம் அதை அணிந்திருக்க வேண்டும் என்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/bangalore-days/">Bangalore Days</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4834" class="elementor elementor-4834">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-b504f75 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="b504f75" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-16e9013" data-id="16e9013" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-a9caa67 elementor-widget elementor-widget-text-editor" data-id="a9caa67" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>பேசிக்கொண்டே இருந்ததில் பேருந்துக்கான நேரம் அருகுவதைக் கூட பொருட்படுத்தாது இருக்க, இன்னும் அரை மணி நேரத்தில் பேருந்து என்பதை உணர்ந்த கணம் தான் உடனே கிளம்பினேன். ஏற வேண்டிய பேருந்து எங்கள் வாகனத்திற்குச் சற்று முன்னால் செல்ல, ஒரு வழியாய் அதைப் பின் தொடர்ந்து உரிய நேரத்தில் ஏற வேண்டிய இடத்தை அடைந்து பேருந்தில் ஏறியாயிற்று. காலணி கொஞ்சம் கடுகடுத்தது. செருப்பு கொண்டு வராததால், எங்குச் சென்றாலும் பூட்ஸ் தான். இரவெல்லாம் அதை அணிந்திருக்க வேண்டும் என்ற எண்ணமே என்னை ஏதோ செய்ய, கழற்றி வைத்து விட்டு காலோடு கிடக்கவும் மனம் ஒவ்வவில்லை.</p><p>&#8220;புழுக்கமாய் இருந்தாலும் சரி<br />பூட்ஸை அணிந்து கொள்</p><p>எவ்வளவு நேரமானாலும் <br />பரவாயில்லை<br />மேலத்தெரு வழியாகவே <br />பள்ளிக்கு போ..!</p><p>அங்கு தான்<br />காலணி அணிந்ததற்காய்<br />கட்டி வைத்து அடித்தார்கள்<br />உன் பாட்டனை&#8221;</p><p>என்ற கண்மணி ராசாவின் கவிதை மனமெங்கும் நிழலாட, காலணிகள் என்னைப் போன்றவனை வந்தடைய எத்தனை போராட்டங்களைப் பார்த்திருக்கும்? அணிந்து கொண்டிருந்த பூட்ஸோடே அற்றைய இரவு கழிந்தது. கண் விழித்தபோது காலைப் புலர்ந்திருந்தது. இன்னும் சில நிமிடங்களில் இறங்கும் இடம் வருமென, உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டேன். மூன்று பைகள் சுமக்க கனமாய்த் தான் இருந்தது. பெங்களூருவில் நான் இறங்கிய இடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போலவே அப்படியே இருந்தது. கன்னட நடையில் தமிழ் பேசும் ஆட்டோ ஓட்டுநர்களைக் கடந்து, பிரியா அக்கா வீட்டுக்குச் செல்லும் வழிகளைப் பார்த்தால், ஒரு கிலோமீட்டர் என்றது கூகுள் மேப். மூன்று பைகளோடு ஒரு கிலோமீட்டர் நடப்பது அவ்வளவு எளிதல்ல. ராப்பிடோ ஆட்டோ ஒன்றைப் பதிவு செய்தேன். பதிவு செய்த அடுத்த நொடியே &#8216;சரஸ்வதி&#8217; என்ற பெண் அதை ஏற்க, பெயரே மனமெங்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. பயமாய் இருந்த காலம் கடந்து, இப்படி சுயமாய் இயங்கும் பெண்களைக் கண்டால் பெரும் மகிழ்ச்சி அன்றி வேறென்ன வரும்? இவ்வளவு சிறிய காலத்தில் இத்தனை மாற்றங்களா?</p><p>ஆட்டோவிற்காகச் சில நிமிடங்கள் காத்திருந்தேன். ஆனால், மாற்றம் என்று நினைத்த ஒன்று ஏமாற்றம் தான் கொண்டு வந்தது. இளைஞன் ஒருவன் என் அருகே வந்து தன் ஆட்டோவை நிறுத்தி, &#8216;ராப்பிடோ&#8217; என்று சொல்ல, நான் புரியாத விழியோடு, &#8216;சரஸ்வதி?&#8217; என்றேன். &#8216;ஆம், என் அம்மா தான்&#8217; என்றான். என் புரியா மொழியைப் புரிந்து கொண்ட இளைஞன், &#8216;அதிகம் ரத்து செய்வதால் தன் கணக்கு முடக்கப் பட்டதாகவும் அதனால் தான், அம்மாவின் கணக்கைப் பயன்படுத்துவதாகவும்&#8217; விளக்கம் கூறிக் கொண்டே வந்தான். குருதியுள் ஊடுருவிய குளிரை எதிர்க்க, அந்த இளைஞன் கால் முதல் காது வரை மூடியிருந்தான்.</p><p>&#8220;என்ன படிக்கிற?&#8221; என்றதும்,</p><p>&#8220;பி.காம் படிக்கிறேன்&#8221;, என்றான். ஒரு கிலோமீட்டர் தொலைவைக் கடப்பதற்குள் நாங்கள் ஓரளவு பேசிக் கொள்ள, குடும்பச் சூழல் காரணமாகத் தான் இப்படி அதிகாலையே ஆட்டோ ஓட்டுவதாய்க் கூறினான். அவன் ஆங்கிலம் என்னை ஆச்சரியப் படுத்தியது. இறங்கும் போது காட்டிய தொகையை விட இருபது ரூபாய் நான் அதிகமாய்க் கொடுக்க, &#8216;தாங்க் யூ சார், தாங்க் யூ சார்&#8217; என்று அழுந்தக் கூறினான். ஒருவர் நாளை அழகாய் மாற்ற இருபது ரூபாய்க்குத் தான் எத்தனை வல்லமை உள்ளது?</p><p>இன்று அலுவலகம் செல்ல வேண்டும் ஆதலால் அயர்ச்சி ஆயினும் ஓய்வுக்கு அங்கே இடம் இல்லை. இந்தியா வந்தால் பெங்களூரு அலுவலகம் வந்து அனைவரையும் காண்பதாய்ச் சொன்ன வாக்கை நிறைவேற்ற, அலுவலகம் செல்ல ஆயத்தம் ஆனேன். ஸ்ரீதரன் மாமா அலுவலகத்திற்கு மிக அருகிலே இறக்கி விட உள்ளே செல்ல அனுமதி இல்லாமல், வெளியில் நின்றபடி உள்ளே இருக்கும் குழு நண்பர்களை அழைத்து வெளியே வரச் சொன்னேன். வாசலில் நின்றபடி தலை தாழ்த்தி அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க, &#8216;வணக்கம்&#8217; என்றது ஒரு பழகிய குரல். நிமிர்ந்து பார்த்தால், குறையா புன்னகையோடு மேலாளர் ரதி நின்று கொண்டிருந்தார். ரதியை மேலாளர் என்று சொன்னால் நம்புவது கொஞ்சம் கடினம் தான். அவ்வளவு இளமையாய், சின்னப் பெண் போல இருப்பார். என்னிடம் ஐடி இல்லை என்றும், உள்ளே செல்லும் முறைமைத் தெரியாதென்றும் அவரிடம் சொல்ல, வா என்பது போல் கையசைத்துத் தன் பின்னாலேயே அழைத்துச் சென்றார். தேடிச் சென்ற இடத்தில் உணவு, தென்படாது போக, ஒற்றைக் குழைக்கு ஓடிச் செல்லும் ஆட்டுக்குட்டியாய் அவருடன் சென்றது என் பாதம். உள்ளே சென்றவர் வாசலில் இருப்பவர்களிடம், நான் பெல்ஜியத்தில் இருந்து இரு நாட்களுக்கு மட்டும் வந்திருப்பதாகச் சொல்லி அனுமதி ஐடி ஒன்றைக் கேட்க, அவர்கள் அப்படி அனுமதி அளிப்பது சாத்தியமில்லை என்று கையை விரித்தனர். அதற்குள் என்னோடு பணி புரிபவர்கள் எல்லாம் கீழே வர, அங்கு ஒரு கூட்டமே கூடியது. &#8216;உன்னை அழைத்துச் செல்ல ஒரு பட்டாளமே வந்திருக்கிறது&#8217; என்று பகடி செய்தார் ரதி. இல்லை என்று நான் ஏற்க மறுத்தாலும் அத்தனைப்பேர் அங்கே வந்து நின்றது உள்ளூர எனக்குள் ஒருவித சொல்லமுடியாத உணர்வையே கொடுத்தது. அனுமதி கிடைக்க அரை மணிக்கு மேலாக, நான் எவ்வளவு சொல்லியும் மொத்தக் கூட்டமும் அங்கிருந்து அசையாதிருந்ததே ஆச்சரியம்.</p><p>ஒரு வழியாய் எல்லோரும், இரண்டாம் மாடியில் உள்ள இருக்கைக்குச் செல்ல, உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே ஒரு கூட்டம் காலை உணவுக்குச் செல்ல எழுந்தது. அமர்ந்து ஆசுவாசம் அடைய மூச்சு கூட விட்டிருக்க மாட்டேன், அதற்குள் இன்னொரு சுற்றா? எல்லோரும் ஏழாம் மாடியில் இருக்கும் உணவகத்திற்குச் சென்றோம். எங்களோடு வந்த கூட்டத்திலேயே எனக்குச் சற்றும் பழக்கமில்லாத ஒருவர் வந்து என்னிடம் வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு உண்ண என்ன வேண்டும் என்று கேட்டார். நான் காலை உணவு உண்டதாய்ச் சொல்ல, அப்படியென்றால் காப்பியாவது குடிக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்தியவர், எனக்கும் சேர்த்து காப்பிக்குப் பணம் செலுத்தினார். ஒரு செயலியில் என்ன வேண்டுமெனத் தேர்வு செய்துவிட்டு பணம் கட்டிக் காத்திருந்தால், உணவு தயாரானதும் நமக்கான அழைப்பு வரும். அந்தக் கடையில் சென்று நம் உணவைப் பெற்றுக் கொள்ளலாம். இங்கே ஒருவர் அல்லது இருவரே எல்லோருக்கும் சேர்த்துப் பணம் கட்டி வாங்கும் முறை எனக்குக் கொஞ்சம் புதிதாய் இருந்தது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பழக்கம் எல்லாம் பள்ளி கல்லூரியோடு முடிந்ததாய் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, பணிக்கு வந்தும் அது தொடர்வதைப் பார்க்கும்பொழுது வியப்பாகவும், உவப்பாகவும் தான் இருந்தது. பணிக்குச் சேர்ந்த தொடக்க நாட்களில், பிறருக்கும் சேர்த்து பணம் செலுத்தும் பழக்கத்தைத் தடுத்த நண்பன், &#8216;இங்க எல்லாரும் தான் சம்பாதிக்கிறான். அவன் அவனுக்கு என்ன வேணுமோ அவன் அவன் வாங்கிப்பான். நீ உனக்கு மட்டும் பணம் கட்டு போதும்&#8217; என்ற போது தான் அவரவர் உணவுக்கு அவரவரே பணம் செலுத்தும் &#8216;டச்சு ட்ரீட்&#8217; முறை எனக்கு அறிமுகம் ஆனது. அந்த முறைமைக்கே ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாய் இருந்தது இந்த இளம் தலைமுறையின் விருந்தோம்பல்.</p><p>உண்டு முடித்து ஒருவாறு வேலையில் அமரவே ஒரு மணி நேரம் எடுத்தது எல்லோர்க்கும். பெல்ஜியத்தில் இருந்து வந்ததால், இந்தியாவிலிருந்து வேலையைத் தொடங்க எனக்கு இன்னும் அனுமதி வராதிருக்க, நான் மட்டும் அங்கேயே அமர்ந்து எல்லோருடனும் பேசிக் கொண்டே என் பொழுதினைக் கழித்தேன். உலைக்கு மேல் ஊசலாடும் மூடி போல், தலைக்கு மேல் வேலை தாண்டவமாடியது. ஆனால் கையறு நிலையில் அனுமதிக்காகக் காத்திருந்த பொழுதில், எல்லோரும் வந்து என்னிடம் சில நிமிடங்கள் பேசிச் சென்றனர். விருந்தினைப் போல் நடத்தும் இடங்களை எல்லாம், நான், பெருந்திணை போல் நினைத்து விலகியே தான் இருந்தேன். ஆனால் இன்று, ஒவ்வொருவராய் வந்து உபசரிக்க, உறவினைப் போல் எந்தன் நலம் வினவ, உள்ளம் எங்கிலும் உற்சவ மனநிலை. காலை உணவு போல், மதிய உணவு முறைமையும் மாற்றமில்லாமல் அப்படியே இருந்தது. யாரோ ஒருவர் யார் யாருக்கோ உணவு வாங்கிக் கொடுக்க, செலவு செய்யா நிலையே உறுத்தலாய் மாறி உடற்கூசச் செய்தது. உண்டு முடித்ததும் எல்லோரும் வேலைக்குத் திரும்ப, நான் மட்டும் வெளியே கிளம்பினேன். மாலை வரை வேலை இல்லை, வேறென்ன செய்வது.</p><p>தெலங்கானாவில் இருந்து சாயும், சென்னையில் இருந்து மௌனிக்காவும் என்னைக் காண இத்தனைத் தொலைவு வந்திருப்பதே எனக்குப் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. எல்லோரையும் வெளியே அழைத்துச் செல்ல நினைத்து அவர்கள் வேலை முடிக்கும் வரை காத்திருந்தேன். ஏனையோர் வேலை முடிக்க இரவு ஆக, நானும் என்னோடு பணி புரியும் மற்ற மூவரும் அருகில் இருக்கும் ஃபோரம் மால் சென்று உணவருந்தினோம். அங்கிருந்து வீடு வந்து சேர பத்து மணி ஆனது. சொந்த வேலையாகப் பிரியா அக்கா கோவைக் கிளம்ப, அவர்களை வழியனுப்பி வைக்கச் சென்ற மாமா என்னையும் அவரோடு வரும்படி கேட்டுக் கொண்டார். மூளைச் சுமை உறங்கச் சொல்லி உத்தரவிட, மூடும் இமை, இறங்கத் துடித்து இருவிழி தொட, உள்ளே நானும் உறங்கச் செல்ல வெளியே கதவுகள் பூட்டப்பட்டது.</p><p>மறுநாள் அதிகாலையே விழிப்பு எந்தன் விழித் தாழ் திறக்க, நானும் மாமாவும் அருகாமையில் இருக்கும் பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டோம். மாமாவோடு பணிபுரிபவரும் அங்கே எங்களோடு இணைந்து கொள்ள, பணி, குடும்பம், சொந்த ஊர், பெங்களூரு, உடல் பராமரிப்பு என உரையாடல் எங்கெங்கோ நீண்டது. ஆண்கள் உலகம் அத்தனை அழகானது. அங்கே அகவையோ அந்தஸ்தோ நட்பை முடிவு செய்வதில்லை. ஆம் அங்கே, நட்புப் படகை நங்கூரமிட்டு நிறுத்த ஒரு குறும் புன்னகையோ, சிறு கைகுலுக்கலோ போதும். நாங்கள் மூவரும் அங்கே நடந்தபடியும் அமர்ந்தபடியும் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருக்க, மாமாவின் நண்பர் எங்களிடம் இருந்து விடை பெற்றார். நானும் மாமாவும் காப்பியோடு எங்கள் காலை நடைப் பயணத்தை முடித்துக் கொண்டோம். வெய்யில் ஏறும் முன், நெய்யில் ஊறிய தோசை, காலை உணவுக்கு. அங்கிருந்து அலுவலகம் என இனிதாய்த் தொடங்கியது என் இரண்டாம் நாள். வேலைப் பார்ப்பதற்கான அனுமதியும் வந்து சேர, அந்நாளைக் கடத்த வேறென்ன வேண்டும்.</p><p>எங்கள் குழு மட்டும் மாலை வெளியே செல்ல முடிவெடுத்து, ஓர் உணவகத்தைத் தேர்ந்தெடுத்தோம். எல்லாம் முடித்து இரவு வீடு வரப் பிரியா அக்காவை அழைக்க, மாமா தொடர்வண்டி நிலையம் சென்றிருந்தமையால் வாசலிலேயே காத்திருக்க வேண்டியதாய்ப் போனது. அருகாமையில் இருக்கும் கடையில் வாங்கிய தேநீர் துணையோடு தெருக்களில் உலாவினேன். பொதுவாய் பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசல் தான். ஆனால் இத்தனை முறைச் சென்றிருந்த போதிலும் நான் ஒருமுறை கூட பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கியதே இல்லை எனக் காலை தான் மாமாவிடம் நான் பெருமையாய் சொல்லிக் கொண்டிருந்தேன். பதினொரு மணிக்கே வருவதாய்ச் சொன்ன மாமா போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வீடு வரப் பன்னிரண்டரை மணி ஆனது. போக்குவரத்து நெரிசலை அனுபவிக்க நாம் சாலையில் செல்லத் தேவையில்லை என்றும், பெங்களூரு நெரிசல் ஏதோ ஒரு வகையில் நம்மை பாதிக்க வல்லது என்றும் அன்று தான் விளங்கியது எனக்கு.</p><p>அக்கா திரும்பிய கையோடு மாமா சென்னை செல்ல வேண்டிய சூழல் ஆதலால், சனிக்கிழமை மதிய உணவுக்கு ஷ்யாமா அக்கா அழைக்க, நானும் பிரியா அக்காவும் மட்டும் கிளம்பிச் சென்றோம். நாங்கள் சென்று இறங்கிய கணத்தில் காயத்ரி அக்காவும் வந்து சேர வந்தவர்களை வரவேற்க ஷ்யாமா அக்காவின் கணவர் வாசலிலேயே காத்திருந்தார். ஷ்யாமா அக்காவும் மாமாவும் சுத்த சைவம். அசைவத்திலிருந்து சைவத்திற்குக் கட்சித் தாவல் செய்த முட்டையை மட்டும் ஷ்யாமா அக்கா ஏற்றுக் கொண்டபோதும், சனிக்கிழமை போன்ற கிழமைகள் அதற்குச் சம்மதிப்பதில்லை. ஆயினும், ஊரிலிருந்து வரும் நான் உண்ண வேண்டுமென, ஷ்யாமா அக்கா எனக்காக அன்று முட்டை மற்றும் இதர சைவ உணவுகள் செய்ய, வெளியிலிருந்து காயத்ரி அக்கா, கோழி, கறி, மீன் அசைவத்தில் அனைத்தும் செய்து எடுத்து வர, பிரியா அக்காவும் நானும் உண்டு கொழுத்து அசைய முடியாமல் கிடக்கும் ஊர்வன போல் ஆனோம். அளவுச் சாப்பாடு, அரை வயிற்று உணவு என இக்கிகாய்ப் பேசும் எந்த விதியும் அங்கே எடுபடாமலேயே போனது. உண்ணும் பொழுது,</p><p>&#8220;ஷ்யாமா அக்காவும் மாமாவும் தான் அசைவம் சாப்பிட மாட்டாங்களே அப்பறம் ஏன் க்கா இதெல்லாம் செஞ்சி இங்க கொண்டு வந்தீங்க?&#8221;, என்று நான் காயத்ரி அக்காவிடம் கேட்க,</p><p>&#8220;சைவம் மட்டும் போதும்னு தான் நெனச்சோம் அப்பறம் ஊர்ல இருந்து வந்த புள்ள, பொக்குன்னு போயிடும்ல. அதான்&#8221;, என்றார் ஷ்யாமா அக்கா, தன் கொஞ்சமும் மாறாத கொங்கு மொழிகள்.</p><p>அங்கிருந்து எல்லோரும் பிரியா அக்கா வீட்டிற்குச் செல்ல, மாலை இன்னும் சிலரோடு உணவகம் ஒன்றில் திட்டமிட்ட கூடலுக்குத் தயார் ஆனோம்.</p><p>வெளிநாடு எடுத்துச் செல்வதற்காய் காயத்ரி அக்கா கொண்டு வந்த பொருட்களை எல்லாம் ஷ்யாமா அக்கா வீட்டில் இருந்து சுமக்க முடியாமல் தூக்கி வந்தேன். வீடு வந்த கணமே என்னுடைய இன்னொரு மேலாளர் காவ்யா அழைத்து எனக்கு ஏதோ பார்சல் அனுப்பி இருப்பதாகக் கீழே வரச் சொல்ல, ஊபரில் உடைகள் இரண்டு வந்து சேர்ந்தன. என்ன சொல்வதென்று தெரியாமல் நான்,</p><p>&#8220;எதுக்கு காவ்யா இதெல்லாம்?&#8221;, என்று வினவ,</p><p>&#8220;உனக்குப் புடிக்குமோ, புடிக்காதோ தெரியல ஆனா கொடுக்கணும்னு தோனுச்சு. குர்த்தாவ முதல்ல குளிர் தண்ணில துவைச்சிடு, அப்ப தான் அளவு சரியா இருக்கும். கலர் எல்லாம் ஒகேவா?&#8221;, என்று என் நெருடலைப் பொருட்படுத்தாமல் நீண்டு கொண்டே சென்றது அவர் பதில். இடை இடையே என்னோடு பணி புரியும் சுவாமி நான் எங்கிருப்பதாய்க் கேட்டு அழைக்க, அலைச்சலுக்கு நடுவில் நான் அவ்வளவாய் அவனைப் பொருட்படுத்தவே இல்லை. இங்கு, அங்கு என்று ஏதேதோ காரணம் சொல்லித் தட்டிக் கழிக்க, ஆனால் சுவாமி விடுவது போல் இல்லை. அலட்சிய நோக்கம் இல்லை எனினும், அற்றை நாள் கொடுத்த அயர்ச்சி, காரணம் சொல்ல எனைக் கட்டாயப் படுத்தியது. இரவு, உணவகம் செல்லப் போவதாகச் சுவாமியிடம் சொல்ல, என்னைத் தேடி அங்கேயே வந்துவிட்டான். வாசலில் ஒரு சில நிமிடங்கள் பேச வேண்டும் என்றவன், எங்கே தங்கி இருக்கிறேன், எப்போது திரும்பிச் செல்கிறேன் என ஒரு சில முறைசார் கேள்வி கேட்டு முடித்துக் கொண்டு, தன் வண்டியில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்து என்னிடம் நீட்டினான். பிரிக்காமலேயே அது கைக்கடிகாரம் என்று தெரிந்தது எனக்கு. நான் வேண்டாம் என்று சொன்னபோதும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் கைகளில் திணித்த சுவாமி, ஏதோ எங்களால் முடிந்தது என்றான். சில நிமிட உரையாடலுக்குப் பின், சுவாமி விடைபெற்றுக் கொள்ள, ஆர்வம் தாங்காமல் அதைப் பிரித்துப் பார்த்தேன். எப்போதோ வாங்க நினைத்து, காசில்லாமல் தவறவிட்ட விலையுயர்ந்த கடிகாரம். அன்பின் அளவீடு பொருட்களில் இல்லை எனினும் இப்படி ஒரு சேரக் கிடைத்த அனைத்தும், ஒருவாறு நெஞ்சை நிலைகுலையச் செய்தது. எப்போதோ எழுதிய கவிதை ஒன்றைக் கடந்து செல்லாமல் இருக்க முடியவில்லை.</p><p>&#8220;கம்பளிப் பூச்சி ஊர்ந்தே<br />பழகிய உடம்பு<br />முதன்முதலாய் சிலிர்க்கிறது,</p><p>தலை மேல் விழுந்த பூக்களால்&#8221;</p><p>இரவு உணவகத்தில் சுபா அக்காவும், சுதா அக்காவும் வந்து சேர்ந்து கொள்ள, அவர்களின் கனிவு, முதல்முறைப் பார்த்த வியப்பு, ஆசையாய்ப் பேசும் அன்பு என அற்றைய நாள் மேலும் அழகாகிக் கொண்டே தான் போனது. இதில் வியப்பு என்னவெனில், அக்கா மாமா என்று உறவோடு அழைக்கும் ஒருவர் கூட எனக்கு உறவு முறை அல்ல. இலக்கியம் புத்தகம் என எங்கெங்கோ கிடைத்த அறிமுகம், இத்தனை உறவுகளைக் கொடுத்திருக்கிறது என்றால் வியப்பன்றி வேறென்ன வரும்? பேருந்துக்கு நேரமானதால் அங்கிருந்து அடைத்து நெரித்து மாமாவின் வாகனத்திலேயே வீடு வந்து சேர்ந்தோம். மெட்ரோ வேலை நடக்கிறதென ஆட்டோ ஓட்டுனர், தெற்கு வடக்குத் தெரியாத ஏதோ ஓர் இடத்தில் என்னை இறக்கிவிட அரக்கப்பறக்க ஓடி, தோள் வலிக்க, மூச்சிரைக்க மூன்று பைகளோடு ஒருவழியாய் பேருந்தைப் பிடித்து, இறக்கி வைத்தேன், சுமைகளையும் இமைகளையும்.</p><p>காலை விடிந்த பின்பும் பேருந்து தஞ்சாவூர் தான் அடைந்திருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் செல்ல வேண்டும். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் பேச்சுக் கொடுக்க, அலைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு கும்பகோணம் செல்லும்வரை பேசிக் கொண்டே வந்தேன். வழித்துணை இருக்க, விழித் துணை எதற்கு?</p><p>பேருந்து எங்கள் இருவரையும் ஆட்டோ, நகரப்பேருந்து என எதுவும் இல்லாத சுவாமிமலை பைபாசிலேயே இறக்கி விட்டுச் செல்ல, என் கைகளில் இருந்த மூன்று பைகளில் ஒன்றை வாங்கிக் கொண்ட பக்கத்து இருக்கை இளைஞன் தன்னை அழைக்க வந்தவரிடம் என்னை ஆட்டோ நிறுத்தத்தில் இறக்கி விடும்படி கூறினான். வந்தவர் உதவியால் வழி பிறக்க, அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். முதல் நாள் சரஸ்வதி அம்மாவின் பெயரில் ஆட்டோ ஓட்டிய இளைஞனின் முகம் கண் முன் வந்து போனது. எங்கோ யாருக்கோ செய்யும் உதவி வேறொரு வடிவில் நம்மை மீண்டும் வந்தடைவதெல்லாம் வையத்தில் பேரன்பு வடியாதிருப்பதன் சாட்சி அல்லவோ?</p><p>காயத்ரி அக்கா கொடுத்த பையைப் பிரித்துப் பார்த்தால், உணவு உடை என ஏதேதோ இருந்தது. இயல்பாய் பேசும் போது சொன்ன இனிப்பு வகைகளைக் கூடச் செய்து அனுப்பி இருந்தார். அதனூடே காவ்யா கொடுத்த உடைகளும் கண்ணில் பட, அவருக்கு நன்றி சொல்லியும், குழுவினர் வாங்கிக் கொடுத்த கடிகாரத்தைப் பற்றியும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். செய்தி சென்றடைந்த மறு கணமே,</p><p>&#8220;இவையெல்லாம் நாங்கள் உன் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு மருது&#8221;, என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.</p><p>&#8220;இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை காவ்யா. எப்படிக் கைம்மாறு செய்வதென்றே புரியவில்லை&#8221;, என்றேன்.</p><p>&#8220;எதுவும் செய்ய வேண்டாம், இப்போதைக்குக் கிடைக்கும் அன்பை அனுபவித்துக் கொள்&#8221;, என்றார்.</p><p>அன்பின் பெருவெளி எவ்வளவு அழகானது? பிறகு, இந்த உலகில் அது தானே எல்லாம்?</p><p>ஆம்!</p><p>அன்பே முறை!<br />அன்பே மறை!<br />அன்பே நிறை!<br />அன்பே இறை!</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-67cfb3b elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="67cfb3b" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-d5ac0cd" data-id="d5ac0cd" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-9e37e2a elementor-widget elementor-widget-image" data-id="9e37e2a" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img fetchpriority="high" decoding="async" width="1024" height="545" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-5.59.54-AM-1024x545.jpeg" class="attachment-large size-large wp-image-4840" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-5.59.54-AM-1024x545.jpeg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-5.59.54-AM-300x160.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-5.59.54-AM-768x409.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-5.59.54-AM-200x106.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-5.59.54-AM.jpeg 1280w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-a19a0de elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="a19a0de" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-e89bd59" data-id="e89bd59" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-122242c elementor-widget elementor-widget-image" data-id="122242c" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img decoding="async" width="1024" height="554" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.20-AM-1024x554.jpeg" class="attachment-large size-large wp-image-4838" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.20-AM-1024x554.jpeg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.20-AM-300x162.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.20-AM-768x415.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.20-AM-200x108.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.20-AM.jpeg 1280w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-7d7e13d elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="7d7e13d" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-4072b95" data-id="4072b95" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-0f2ed2d elementor-widget elementor-widget-image" data-id="0f2ed2d" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img decoding="async" width="1024" height="768" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-04-at-7.11.39-AM-1024x768.jpeg" class="attachment-large size-large wp-image-4841" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-04-at-7.11.39-AM-1024x768.jpeg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-04-at-7.11.39-AM-300x225.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-04-at-7.11.39-AM-768x576.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-04-at-7.11.39-AM-200x150.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-04-at-7.11.39-AM.jpeg 1280w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-ec4229b elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="ec4229b" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-baa3f2b" data-id="baa3f2b" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-4e5bb06 elementor-widget elementor-widget-image" data-id="4e5bb06" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="745" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.59-AM-745x1024.jpeg" class="attachment-large size-large wp-image-4839" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.59-AM-745x1024.jpeg 745w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.59-AM-218x300.jpeg 218w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.59-AM-768x1056.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.59-AM-1117x1536.jpeg 1117w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.59-AM-200x275.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.59-AM-300x412.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-08-at-6.00.59-AM.jpeg 1164w" sizes="(max-width: 745px) 100vw, 745px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-d371c20 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="d371c20" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-b1ce2c1" data-id="b1ce2c1" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-d66497a elementor-widget elementor-widget-text-editor" data-id="d66497a" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<h3>Bangalore Days!</h3><p>There are times when a journey begins long before we actually leave.</p><p>That night, I was still sitting and talking when the time for my bus was quietly slipping away. It was only when I realised that the bus would leave in another half an hour that I finally got up and hurried out.</p><p>The bus was already moving a little ahead of our vehicle. We followed it for a while and somehow reached the place where I had to board. I climbed in just in time.</p><p>I settled into my seat.</p><p>The boots on my feet were beginning to bother me.</p><p>I had not brought slippers with me. So wherever I went, the boots had followed. Now I had to spend the whole night in them.</p><p>I could take them off.</p><p>But somehow, I could not bring myself to sleep with my bare feet exposed either.</p><p>And then, from somewhere in the back of my mind, a poem by Kanmani Rasa came looking for me.</p><blockquote><p>Even if it feels suffocating,<br />wear your boots.</p><p>No matter how long it takes,<br />go to school<br />only through Melatheru.</p><p>Because it was there<br />they tied up your grandfather<br />and beat him<br />simply because he wore slippers.</p></blockquote><p>I looked at my boots again.</p><p>How many struggles must have taken place before a pair of shoes could become something ordinary for someone like me?</p><p>That night, I slept with my boots on.</p><p>When I opened my eyes, morning had already arrived.</p><p>I gathered my things. In a few minutes, it would be time to get down. Three bags were not easy to carry.</p><p>The place where I got down in Bengaluru looked almost exactly as it had three years ago. I passed auto drivers speaking Tamil in a Kannada accent and checked the way to Priya Akka’s house.</p><p>Google Maps said one kilometre.</p><p>One kilometre with three bags is not really one kilometre.</p><p>So I booked a Rapido auto.</p><p>The moment the booking was accepted, I saw the name of the rider.</p><p>Saraswathi.</p><p>The name itself brought a strange happiness.</p><p>We have come a long way from a time when women were expected to live within fear and restrictions. To see women moving about on their own, earning and working for themselves, still gives me a quiet joy.</p><p>So much change in such a short time.</p><p>I waited for the auto.</p><p>A few minutes later, a young man arrived and stopped beside me.</p><p>“Rapido,” he said.</p><p>“Saraswathi?” I asked, looking at him with confusion.</p><p>“Yes. She is my mother.”</p><p>He understood my confusion and explained. His mother’s account had been blocked because of too many cancellations, so he was using her account to drive the auto.</p><p>The cold had entered deep into the morning. He had covered himself from his feet almost up to his ears.</p><p>“What are you studying?”</p><p>“B.Com.”</p><p>Before we reached the one-kilometre mark, we had spoken enough to know a little about each other. He told me that because of his family situation, he had to drive the auto from early morning.</p><p>His English surprised me.</p><p>When I got down, I paid him twenty rupees more than the amount shown.</p><p>“Thank you, sir. Thank you, sir,” he said, with a sincerity that made those twenty rupees feel much larger than they were.</p><p>How much power can twenty rupees have to change someone&#8217;s day?</p><p>There was no time to rest.</p><p>I had to go to the office.</p><p>When I was in Belgium, I had told everyone that I would visit the Bengaluru office and meet them. A promise is a small thing until the day comes when you have to keep it.</p><p>Sridharan Mama dropped me near the office.</p><p>But I had no ID, and I had no idea how I was supposed to get inside.</p><p>So I stood outside and called my teammates, asking them to come down.</p><p>I stood at the entrance, head bent, looking at my phone.</p><p>“Vanakkam.”</p><p>It was a familiar voice.</p><p>I looked up.</p><p>Rathi was standing there with her usual smile.</p><p>Calling Rathi a manager is still a little difficult for me. She looks so young, almost like a schoolgirl.</p><p>I told her I did not have an ID and did not know the procedure for entering the office.</p><p>She simply gestured for me to follow her.</p><p>Inside, however, the security team was not ready to let me in. Rathi explained that I had come from Belgium and would be there only for two days. She asked if they could issue me a visitor ID.</p><p>They refused.</p><p>By then, one after another, my colleagues had started coming down.</p><p>Soon, there was a small crowd around me.</p><p>“You have brought an entire army to take you away,” Rathi joked.</p><p>I denied it.</p><p>But inside, seeing so many people standing there just for me created a feeling I could not quite explain.</p><p>The permission took more than half an hour.</p><p>I kept telling them to go back to work.</p><p>Nobody moved.</p><p>That, perhaps, was the part that touched me most.</p><p>Finally, we were allowed in.</p><p>I reached my seat on the second floor. I had barely sat down and taken a breath when another group got up to go for breakfast.</p><p>Another round already?</p><p>We went to the restaurant on the seventh floor.</p><p>Among the group was someone I hardly knew. He came over, introduced himself, and asked what I wanted to eat.</p><p>I told him I had already had breakfast.</p><p>“Then at least have coffee.”</p><p>He insisted.</p><p>And he paid for mine too.</p><p>The food was ordered through an app. We selected what we wanted, paid, waited for the notification and then went to collect it.</p><p>What felt new to me was the way one or two people simply paid for everyone.</p><p>I had thought the habit of sharing food ended with school and college. Seeing it continue even after entering working life was both surprising and comforting.</p><p>When I had first joined the company, a friend once stopped me from paying for others.</p><p>“Everyone here earns. Everyone will buy what they want. You just pay for yourself.”</p><p>That was how I first came to know the idea of a Dutch treat, where each person pays for their own food.</p><p>The hospitality of this younger generation felt like the end of that Dutch treat.</p><p>After breakfast, it took all of us nearly an hour to settle back into work.</p><p>For me, there was still one problem.</p><p>I had come from Belgium, and I was still waiting for permission to start working from India.</p><p>There was nothing I could do except wait.</p><p>So I sat there and talked to whoever came by.</p><p>I had always kept away from places where I was treated like a guest. I never liked that feeling.</p><p>But here, people kept coming to me one by one.</p><p>They made me feel less like a visitor and more like family.</p><p>My heart was in a festive mood.</p><p>Lunch followed the same pattern as breakfast.</p><p>Someone bought food for someone else. Someone else paid for another person.</p><p>And strangely, not spending money myself began to make me uncomfortable.</p><p>After lunch, everyone went back to work.</p><p>I left for a walk.</p><p>There was no work for me until evening. What else could I do?</p><p>Sai had come all the way from Telangana. Mounika had come from Chennai. The fact that they had travelled so far simply to see me and the team made me happy.</p><p>I wanted to take everyone out, so I waited until they finished work.</p><p>By the time they were done, it was already night.</p><p>Finally, three of my teammates and I went to Forum Mall and had dinner.</p><p>I reached home around ten.</p><p>Priya Akka had to leave for Coimbatore, and Mama had gone to see her off. He asked me to come along.</p><p>My mind was already ordering me to sleep.</p><p>My eyelids were becoming heavier by the minute.</p><p>I went inside to sleep.</p><p>The doors outside were locked.</p><p>The next morning, I woke up early.</p><p>Mama and I went for a walk in a nearby park. One of his colleagues joined us.</p><p>The conversation wandered everywhere.</p><p>Work.</p><p>Family.</p><p>Our hometowns.</p><p>Bengaluru.</p><p>Taking care of our health.</p><p>Men&#8217;s world is a beautiful place.</p><p>Age does not decide friendship there.</p><p>Status does not decide it either.</p><p>Sometimes, all it takes to anchor a friendship is a small smile or a simple handshake.</p><p>The three of us walked, sat, talked and walked again for nearly two hours.</p><p>Then Mama&#8217;s friend said goodbye.</p><p>Mama and I finished our morning walk with coffee.</p><p>Before the sun became too strong, there was dosa soaked in ghee for breakfast.</p><p>Then, the office.</p><p>The permission to work finally came through.</p><p>What more did I need for a good second day?</p><p>That evening, our team decided to go out together. We chose a restaurant and went.</p><p>After everything was done, I started heading home.</p><p>Mama had gone to the railway station, so I had to wait outside.</p><p>I bought a tea from a nearby shop and walked around the streets.</p><p>Usually, Bengaluru means one thing.</p><p>Traffic.</p><p>That morning, I had proudly told Mama that despite having visited Bengaluru so many times, I had never once been caught in its traffic.</p><p>Mama had said he would be home by eleven.</p><p>He got caught in traffic.</p><p>He reached only at half past twelve.</p><p>That night I understood something.</p><p>You don&#8217;t have to be on the road to experience Bengaluru traffic.</p><p>Sometimes, Bengaluru finds a way to make you wait even when you are sitting at home.</p><p>Soon after Priya Akka returned, Mama had to leave for Chennai.</p><p>Shyama Akka invited us for Saturday lunch, so only Priya and I went.</p><p>Gayathri Akka also arrived by the time we reached there.</p><p>Shyama Akka&#8217;s husband was waiting at the door to welcome us.</p><p>Shyama Akka and Mama are strict vegetarians.</p><p>She has made only one small compromise with the non-vegetarian world—the egg.</p><p>Even that is not allowed on certain days, and Saturday is one of them.</p><p>But I was coming from abroad. So, for me, she made eggs along with all the vegetarian dishes. Gayathri Akka had also brought chicken, mutton and fish from outside.</p><p>What began as lunch slowly turned into a feast. Priya and I ate one dish after another until we could barely move. By the time we finished, we were so full that all we could do was sit back and let our bodies recover from the feast.</p><p>All the Ikigai rules about eating in moderation, eating only half a stomach, and controlling ourselves had no place at that table.</p><p>At one point I asked,</p><p>“Akka, you and Mama don&#8217;t eat non-veg. Then why did you make all this and bring it here?”</p><p>Shyama Akka replied in her unchanged Kongu Tamil:</p><p>“We thought vegetarian food alone would be enough. But you have come all the way home. I don&#8217;t want you to go hungry. That&#8217;s why.”</p><p>That was enough.</p><p>From there, everyone went to Priya Akka&#8217;s house.</p><p>Another gathering was waiting in the evening.</p><p>Gayathri Akka had brought so many things for me to take back abroad that I could barely carry them.</p><p>The moment I reached home, another call came.</p><p>It was Kavya, one of my managers.</p><p>She told me she had sent a parcel and asked me to come downstairs.</p><p>Two sets of clothes arrived through Uber.</p><p>I did not know what to say.</p><p>“Why did you send all this, Kavya?”</p><p>“I don&#8217;t know whether you&#8217;ll like them or not. But I felt like giving them to you. Wash the kurta first in cold water. Then the size will settle properly. Are the colours okay?”</p><p>She continued explaining everything to me, making sure I would like what she had chosen and that everything would fit me properly.</p><p>In between all this, Swami kept calling and asking where I was.</p><p>I was tired.</p><p>I gave him one excuse after another.</p><p>I did not mean to avoid him. I simply did not have the energy left to explain anything.</p><p>But Swami did not give up.</p><p>That night I told him I was going to a restaurant.</p><p>He came there looking for me.</p><p>He stood at the entrance and said he wanted to talk for a few minutes.</p><p>Where are you staying?</p><p>When are you leaving?</p><p>A few ordinary questions.</p><p>Then he took a small box from his vehicle and handed it to me.</p><p>I knew what it was without opening it.</p><p>A watch.</p><p>I told him I didn&#8217;t want it.</p><p>He ignored me and pressed it into my hands.</p><p>“Something from us. Something we could do.”</p><p>After a few minutes of talking, he left.</p><p>I could not resist the curiosity.</p><p>I opened the box.</p><p>It was the expensive watch I had once wanted to buy but had left behind because I did not have enough money.</p><p>Love cannot be measured by the things people give us.</p><p>I know that.</p><p>And yet, when so many such gestures come together, the heart cannot remain untouched.</p><p>I remembered a poem I had written long ago.</p><blockquote><p>A body<br />long used to the crawling<br />of caterpillars<br />shivers for the first time,</p><p>beneath the flowers<br />falling upon its head.</p></blockquote><p>That night, Subha Akka and Sudha Akka also joined us at the restaurant.</p><p>Their kindness.</p><p>The happiness of meeting me for the first time.</p><p>The way they spoke with affection.</p><p>The day kept becoming more beautiful.</p><p>And the strangest part was this.</p><p>Not one of the people I call Akka or Mama is actually related to me.</p><p>Somewhere through literature.</p><p>Somewhere through books.</p><p>Somewhere through a simple introduction.</p><p>Life had quietly given me all these relationships.</p><p>What greater surprise could there be?</p><p>Soon it was time to catch my bus.</p><p>We squeezed ourselves into Mama&#8217;s vehicle and went home.</p><p>Because of the metro construction, the auto driver dropped me somewhere I could not make sense of.</p><p>I did not know which way was north or south.</p><p>I ran.</p><p>Three bags on my shoulders.</p><p>My feet hurting.</p><p>My breath running short.</p><p>Somehow, I reached the bus.</p><p>I climbed in.</p><p>And finally, I put down both my bags and my eyelids.</p><p>When morning came, the bus had only reached Thanjavur.</p><p>There was still another hour to go.</p><p>A young man sitting beside me started talking.</p><p>I kept my phone in my hand, but hardly looked at it.</p><p>We spoke all the way to Kumbakonam.</p><p>When there is someone to share the journey with, what need is there for a phone?</p><p>The bus dropped both of us at the Swamimalai bypass.</p><p>There was no auto.</p><p>No town bus.</p><p>Nothing.</p><p>The young man beside me took one of my three bags.</p><p>Then he asked the person who had come to pick him up to drop me at the auto stand.</p><p>A small act of help opened a way for me.</p><p>From there, I found an auto and finally reached home.</p><p>For a moment, the young man from Bengaluru came back to my mind.</p><p>The boy who had driven an auto in his mother&#8217;s name.</p><p>The boy who had thanked me for twenty extra rupees.</p><p>Somewhere, the help we give someone returns to us in another form.</p><p>Isn&#8217;t that proof that love has not yet dried up from this world?</p><p>I opened the bag Gayathri Akka had given me.</p><p>There was food.</p><p>Clothes.</p><p>Many other things.</p><p>She had even made and packed the sweets I had casually mentioned while talking to her.</p><p>Then I saw the clothes Kavya had given me.</p><p>I texted her and thanked her, and told her about the watch the team had bought for me.</p><p>Her reply came almost immediately.</p><blockquote><p>“These are expressions of the love we have for you, Marudhu.”</p></blockquote><p>I did not know what to say.</p><p>“How do I ever repay all this?”</p><p>Her answer was simple.</p><blockquote><p>“You don&#8217;t have to do anything. For now, just enjoy the love you are receiving.”</p></blockquote><p>I sat with those words for a while.</p><p><strong>How beautiful is this vast expanse of love?<br />And, in the end, isn&#8217;t that all there is in this world?</strong></p><p><strong>Yes!</strong></p><p><strong>Love is the way!</strong></p><p><strong>Love is the truth!</strong></p><p><strong>Love is the fullness!</strong></p><p><strong>Love is God!</strong></p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/bangalore-days/">Bangalore Days</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>Giethoorn (கீத்தோர்ன்)</title>
		<link>https://kavirasan.com/giethoorn/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Aug 2026 14:39:39 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<category><![CDATA[#katturaigal #கட்டுரைகள் #tamil #தமிழ் #தமிழ்_கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4766</guid>

					<description><![CDATA[<p>யாரும் இல்லாத இடத்திற்குப் போக வேண்டும்! அங்கே,நான் கூட இருக்கக் கூடாது! &#8211; அப்துல் ரகுமான்! சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் தமிழ்நாடு எல்லையைக் கூடக் கடந்தது இல்லை. தவழும் அக்கா மகள்கள் வரை அனைவரும் வீட்டில் விமானத்தில் பயணம் செய்திருக்க, நான் மட்டும் விமானத்தை அருகில் கூட பார்த்தது கிடையாது. விடுதலைக்குப் பின் எழுந்த முதல் அல்லது இரண்டாம் தலைமுறை நாங்கள். தானாகவோ அல்லது தூக்கிப் பிடிக்கும் ஏதோ சில கைகளைப் பற்றிக் கொண்டோ [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/giethoorn/">Giethoorn (கீத்தோர்ன்)</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4766" class="elementor elementor-4766">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-69d4a66 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="69d4a66" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-920a61c" data-id="920a61c" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-07469ab elementor-arrows-position-inside elementor-pagination-position-outside elementor-widget elementor-widget-image-carousel" data-id="07469ab" data-element_type="widget" data-e-type="widget" data-settings="{&quot;navigation&quot;:&quot;both&quot;,&quot;autoplay&quot;:&quot;yes&quot;,&quot;pause_on_hover&quot;:&quot;yes&quot;,&quot;pause_on_interaction&quot;:&quot;yes&quot;,&quot;autoplay_speed&quot;:5000,&quot;infinite&quot;:&quot;yes&quot;,&quot;speed&quot;:500}" data-widget_type="image-carousel.default">
				<div class="elementor-widget-container">
							<div class="elementor-image-carousel-wrapper swiper" role="region" aria-roledescription="carousel" aria-label="Image Carousel" dir="ltr">
			<div class="elementor-image-carousel swiper-wrapper" aria-live="off">
								<div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="1 of 7"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.52-PM-6-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM (6)" /></figure></div><div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="2 of 7"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.52-PM-5-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM (5)" /></figure></div><div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="3 of 7"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.52-PM-4-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM (4)" /></figure></div><div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="4 of 7"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.52-PM-2-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM (2)" /></figure></div><div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="5 of 7"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.52-PM-1-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM (1)" /></figure></div><div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="6 of 7"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.52-PM-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM" /></figure></div><div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="7 of 7"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.51-PM-3-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.51 PM (3)" /></figure></div>			</div>
												<div class="elementor-swiper-button elementor-swiper-button-prev" role="button" tabindex="0">
						<i aria-hidden="true" class="eicon-chevron-left"></i>					</div>
					<div class="elementor-swiper-button elementor-swiper-button-next" role="button" tabindex="0">
						<i aria-hidden="true" class="eicon-chevron-right"></i>					</div>
				
									<div class="swiper-pagination"></div>
									</div>
						</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-fcafc2f elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="fcafc2f" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-6af5893" data-id="6af5893" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-3d8ced2 elementor-widget elementor-widget-text-editor" data-id="3d8ced2" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p><strong><em>யாரும் இல்லாத </em></strong><br /><strong><em>இடத்திற்குப் போக வேண்டும்!</em></strong></p><p><strong><em>அங்கே,</em></strong><br /><strong><em>நான் கூட </em></strong><br /><strong><em>இருக்கக் கூடாது!</em></strong></p><p><strong><em>&#8211; அப்துல் ரகுமான்!</em></strong></p><p>சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் தமிழ்நாடு எல்லையைக் கூடக் கடந்தது இல்லை. தவழும் அக்கா மகள்கள் வரை அனைவரும் வீட்டில் விமானத்தில் பயணம் செய்திருக்க, நான் மட்டும் விமானத்தை அருகில் கூட பார்த்தது கிடையாது. விடுதலைக்குப் பின் எழுந்த முதல் அல்லது இரண்டாம் தலைமுறை நாங்கள். தானாகவோ அல்லது தூக்கிப் பிடிக்கும் ஏதோ சில கைகளைப் பற்றிக் கொண்டோ எழுந்து மட்டுமே நிற்க முடிந்த எங்கள் தலைமுறைக்குக் கிடைத்த பயணம் எல்லாம் இந்தளவு தான். எட்டாக்கனி கிட்டாக்கனி என்றான பின் அதை நினைத்து ஏக்கம் என்ன வேண்டி இருக்கிறது?</p><p>இந்தியர்களைப் பொறுத்தவரை பயணம் என்றால் என்ன? இரண்டு மணி நேரத்திற்கு மேல் அலுவலகத்திற்குச் செல்வது, விடுமுறையில் தொலைவாய் வசிக்கும் விருந்தினர் வீட்டிற்குச் செல்வது, திட்டமிட்ட மூன்று கோவில்கள், வரும் வழியில் திட்டமிடாமல் தரிசனம் கிடைத்த இரண்டு கோவில்கள் அவ்வளவு தானே? ஆம்! பயணம் என்ற சொல்லுக்கான பொருளை இந்திய அகராதியில் தேடிப் பார்த்தால் இப்படித் தான் எழுதி இருக்கும். நாத்திகக் குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு எல்லாம் அந்தக் கோவில் கொடுப்பினையும் இல்லை.</p><p>எஸ்.ரா சொல்வது போல, &#8220;காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டோ, உறங்கிக் கொண்டோ செல்வது பயணம் அல்ல. பயணத்தை அனுபவிக்க வேண்டும். ஒரு பேருந்திலோ ரயிலிலோ நான் ஏறிவிட்ட பிறகு நான் யாருடைய மகனும் அல்ல, யாருடைய அப்பாவும் அல்ல. நான் படித்தவன் அல்ல, எழுத்தாளன் அல்ல. யாரும் அல்ல. வயதும் ஒரு பொருட்டல்ல. நான் இந்தப் பேருந்தில் இருக்கக் கூடிய ஒரு பயணி&#8221;, பயணம் தான் வாழ்வின் இன்னொரு முகத்தைக் காட்டி புதிதாய் நமக்கு ஒன்றைக் கற்றுக் கொடுக்கிறது. எல்லாம் இழந்து யாரோ ஒருவராய் நாம் நிற்கும் மொழி தெரியாத நாடும், நிலமும் நமக்கு ஏதோ ஒன்றைப் புதிதாய்க் கற்பிக்கின்றன. மனிதர்கள் தங்கள் அடையாளம் இழக்கும் பொழுது தான் எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்.</p><p>நெதர்லாந்து செல்ல வேண்டும் எனச் சனிக்கிழமை அன்று அதிகாலையே எழுந்து விட்டேன். பலமுறை செல்ல வேண்டும் என நினைத்துச் செல்லாமலே போன ஓர் ஊருக்கு இன்று செல்லப் போகிறேன் என்ற எண்ணமே ஒருவாறு களிப்பை ஏற்படுத்தியது. சீ ஈயு(See EU &#8211; <a href="https://see-eu.info/">https://see-eu.info/</a>) என்ற நிறுவனத்திடம் முன்பதிவு செய்திருந்தேன். ஐரோப்பாவை இந்தியக் கண்களால் காண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் இந்தியர்கள் நடத்தும் நிறுவனம். பெல்ஜியத்தின் முதன்மை நகரங்களில் இருந்து நம்மை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவில் பல இடங்களுக்குக் கொண்டு செல்லும். துணையாக இந்தி பேசும் ஒருவர், இந்தியத் திரைப்படம், இந்திய உணவு வகைகள், மசாலா தேநீர் போன்ற வசதிகளால் பேருந்தில் ஏறிய கணம் நாசி எங்கும் தேசி வாசம்.</p><p>அவர்கள் சொன்ன நேரத்திற்கு முன்பே நிறுத்தத்தை அடைய, பேருந்து கொஞ்சம் தாமதமாகவே வந்தது. மெக்கல்லனில் என்னோடு இன்னும் மூன்று பேர் ஏற, ஆண்ட்வர்ப்பில் ஒரு சிலரை ஏற்றிக் கொண்டு வண்டி கீத்தோர்னை நோக்கி விரைந்தது. செல்லும் வழியில் அவரவர் அவர்களுக்குத் தேவையான உணவினைப் பெற்றுக் கொள்ள, திரைப்படத்திற்கான வாக்கெடுப்பு நடந்தது. எப்பொழுதும் போடும் அதே ஐந்து படங்கள். பீ.கே திரைப்படம் அதிக வாக்கினைப் பெற, அமீர்கான் பூமிக்கு வந்து அனுஷ்கா ஷர்மாவைத் தன் காதலனுடன் சேர்த்து வைத்துவிட்டு, மீண்டும் தன் விண்ணூர்தியில் ஏறிய கணத்தில் நாங்கள் கீத்தோர்னை அடைந்திருந்தோம். அதிகாலையே எழுந்ததால் பயணம் முழுவதையும் நான் உறக்கத்தில் தான் கழித்தேன்.</p><p>இறங்கிய நொடியே உடன் வந்த ஆற்றுநர் இலவசக் கழிப்பறையைக் காட்டி, எல்லோரும் தன் தேவைகளை முடித்துக்கொள்ள இருபது நிமிடங்கள் கொடுத்தார். கழிப்பறை, மலங்களால் அன்றி, மனிதர்களால் நிரம்பி வழிந்தது. முகம் கழுவி நான் வெளியே வந்தபோது, ஒரு படகு எங்களுக்காகக் காத்திருந்தது. படகினைச் செலுத்தவும் எங்களுக்குப் பயணத்துணையாகவும் வயதான ஒரு டச்சுக்காரர் புன்னகையோடே எங்களை வரவேற்றார். பேருந்தில் வந்த அனைவரும் அமர்ந்து கொள்ளும் அளவு பெரிய படகு. அதில் முன் இருக்கையிலேயே எனக்கு இடம் கிடைக்க, எல்லோரும் வந்தடைந்த பின் படகு அசைந்தது. சில நிமிடங்களுக்குப் பின் பேசத் தொடங்கிய அந்த டச்சுக்காரர், கடைசி இருக்கை வரை தன் குரல் கேட்கிறதா என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டார். அப்படி ஒரு கனீர் குரல். அலெக்ஸ் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அந்த ஊரின் வரலாற்றை உரைக்கத் தொடங்கினார்.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-af914a1 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="af914a1" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-2860cc4" data-id="2860cc4" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-626f1dc elementor-widget elementor-widget-image" data-id="626f1dc" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img decoding="async" src="https://kavirasan.com/wp-content/uploads/elementor/thumbs/WhatsApp-Image-2026-08-12-at-4.29.52-PM-3-rrsvbzhh3tfomu11b6sbsdhulyjq2rfr87aeclzvz4.jpeg" title="WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM (3)" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM (3)" loading="lazy" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-81b6dd2 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="81b6dd2" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-0e4deba" data-id="0e4deba" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-261038a elementor-widget elementor-widget-text-editor" data-id="261038a" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>கீத்தோர்ன் என்றால் ஆடுகளின் கொம்பு(Giet Hoorn) என்று பொருள். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து தஞ்சம் அடைந்த மக்கள், வெள்ளத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான ஆடுகளின் கொம்புகளை இங்குக் கண்டதால் இவ்வூர் இப்பெயர் பெற்றதென நம்பப்படுகிறது. இங்கு வந்த மக்கள், பிழைப்பிற்காக, சதுப்பு நிலங்களில் இறந்து மக்கிய செடிகளை உலர வைத்து எரிபொருள் ஆக்கினர். நாளுக்கு நாள் எரிபொருளுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் வீட்டைச் சுற்றி பெரும் பள்ளங்களை உருவாக்க, சதுப்பு நிலங்களில் ஊறிய நீரே சிறு சிறு கால்வாயாக மாறியது. தண்ணீர் சூழ்ந்த இச்சிற்றூரை, உலகின் தொடர்புகளில் இருந்து தனித்து விடப்பட்டத் தீவு என்று தான் சொல்ல வேண்டும்.</p><p>மொத்த ஐரோப்பாவும் இறைச்சிக்காக மாடுகளையும் பன்றிகளையும் நம்பி இருக்க, இந்த ஓர் ஊர் தான் ஆடுகளை நம்பி வாழ்கிறது(ஐரோப்பா ஐயனார் போலும்). ஆம்! சொந்தங்கள் ஒன்றுகூடுகையில் இவர்கள் உணவு அதிகம் நம்பி இருப்பது ஆடுகளையும் கோழிகளையும் தான். கோடைக் காலத்தில் எரிபொருள் விற்பதையும் மீன் பிடிப்பதையும் தொழிலாகக் கொண்ட இம்மக்கள், நீரும் நிலமும் உறைந்து போகும் குளிர் காலத்தில் படகு செய்வதைத் தங்கள் தொழிலாக்கிக் கொண்டனர். மொத்த நெதர்லாந்தும் நீர் சூழ்ந்த நிலம் ஆதலால், படகு விற்பனை செல்வம் கொழிக்கச் செய்தது.</p><p>வேதாரண்யம் செல்லும் பொழுது, உப்பளங்களைக் கண்ட இராமு அண்ணன், &#8220;இதெல்லாம் என்னடா தம்பி?&#8221;, என்றார் ஆச்சரியமாக. உப்பளம் என்று நான் அதைப் பற்றி விளக்க, &#8220;அப்ப இங்க நிலத்தடி நீரெல்லாம் உப்பா தான இருக்கும். இங்க எப்படி விவசாயம் செய்வாங்க. கடவுளோட படைப்பு எப்படி இருக்குன்னு பாரேன். நம்மூரு பக்கம் எல்லாம் விவசாயம். இங்க அதுக்கு வழி இல்ல, அதனால இப்படி உப்பு தயாரிச்சு பொழச்சிக்கிறாங்க&#8221;, என்ற அடுத்த நொடி,</p><p>&#8220;அந்தந்த நிலத்துல என்ன செய்ய முடியுமோ அதுக்கு ஏத்த மாதிரி மக்கள் தங்கள் வாழ்க்கைய அமைச்சிக்கிறாங்க. இதுல கடவுள் எங்க வந்தாரு&#8221;, என்று நானும் அப்பாவும் ஒன்றாய் பதிலுரைத்தோம். அப்பா இன்னும் பரிணாமம் பற்றி அண்ணனுக்குப் பாடம் எடுக்க, சேப்பியன்ஸ் புத்தகம் பற்றி அறிந்திடாத இராமு அண்ணன் அதை ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.</p><p>மூலம் இல்லா இடங்களிலும் ஏதேனும் ஒன்றைப் புதிதாய் முளைக்க வைக்க வல்லதல்லவா இந்த வையம்? அகமமைத்து, புறமமைத்து, கீத்தோர்ன் தன்னைத் தானே தகவமைத்து வாழக் கற்றுக் கொண்டது. வெளியே வந்து உலகத்தோடு ஒன்றி வாழ அச்சப்பட்ட அந்த மக்கள், தங்களுக்குள்ளே திருமணம் செய்து கொண்டனர். இலையாடும் கிளைகள், கிளையாடும் மரங்கள், அலையாடும் கால்வாய், மலையாடும் கோழியும், எண்ணற்ற வாத்துகள், நீரால் ஆன தெருக்கள், வீடுகளை இணைக்கும் மரப்பாலங்கள், உள்ளூரிலேயே ஒரு தேவாலயம், எங்கும் செல்லச் சின்ன சின்ன மரப்படகுகள் என்று சிறு வட்டத்திற்குள் தான் அவர்கள் வாழ்க்கை முழுவதும். உலகம் எங்கெங்கோ சென்று கொண்டிருக்க, பல நூறாண்டுகளாக இம்மக்கள் பதிமூன்றாம் நூற்றாண்டின் பிடியிலேயே தான் வாழ்ந்து கொண்டிருந்தனர்.</p><p>ஆண்டுக் கணக்காய் அடைபட்டக் குருவிக்குக் கூண்டுக் கதவுகள் திறந்தது போல, ஊரை விட்டு அதிகம் வெளியே வராத இவர்கள் முதன் முதலில் உலகத்தைப் பார்த்தனர். வெளியே செல்லாமல், உலகத்தையே தங்கள் ஊருக்கு வர வைத்தனர். ஆம்! உலகின் பார்வை முதல் முதலில் அதன் மீது விழுந்தது 1958ல் தான். &#8216;ஃபான்ஃபேர்(Fanfare)&#8217; என்றொரு டச்சு திரைப்படம் அங்கே எடுக்கப்பட மொத்த ஐரோப்பாவும் அங்கே வண்டி கட்டிக் கொண்டு வரத் தொடங்கின. வந்திருக்கும் பயணிகளுக்காகத் தொடங்கப்பட்ட கடைகள், உணவகங்கள் எல்லாம் அவர்களது வருவாயைக் கொஞ்சம் உயர்த்த, இந்த ஊரே ஒரு சுற்றுலாத் தலம் ஆனது. மகுடத்தின் சிறகாய் ஆப்பிரிக்காவில் இருந்து வலசைக்கு வந்து செல்லும் வண்ண வண்ணப் பறவைகள்.</p><p>எல்லா வீடுகளும் கூரைகளால் வேயப்பட்டிருக்க, ஓடு பதித்திருந்த ஒரு சில வீடுகளைக் காட்டி, அவையெல்லாம் அரசு வேலையில் இருக்கும் மேயர், ஆசிரியர், பாதிரிமார்களின் வீடுகள் என்று இரு விரலால் பணம் கொழிக்கும் சமிக்ஞையைச் செய்து காட்டினார் அலெக்ஸ்.</p><p>படகுப் பயணத்தின் போது அனுபவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தவர், தன் ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார். வெளியூரில் இருக்கும் செல்வந்தர்கள் இங்கே வீடு வாங்கிப் போட்டுவிட்டு கோடையில் மட்டும் வந்து தங்கள் பொழுதுகளை இங்கே கழிக்க, இவ்வூர் மக்களுக்குச் சற்றும் தொடர்பில்லாதவர்களாய் சில மாதங்கள் மட்டும் அவர்கள் வாழும் அந்த உல்லாச வாழ்க்கை, உள்ளூரில் இருக்கும் இணக்கத்தை உடைப்பதோடு, ஊருக்குள் இருக்கும் நில மதிப்பையும் உயர்த்துகிறது. ஓராண்டு முழுவதும் அங்கே தங்காத ஒருவர் நிலத்தை வாங்கும் தகுதியினை இழப்பதாய் அண்மையில் நடைமுறைப் படுத்தப்பட்ட சட்டத்தைப் பெரும் மகிழ்ச்சியுடன் கூறினார். கால்வாய் சென்று கலக்கும் ஏரியின் நடுவே ஒரு சிறு படகில் தண்ணீர் மற்றும் ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருக்கும் சிறுவன், தன் முழு பலத்தோடு எங்கள் படகை இழுத்துப் பிடித்து அருகே நிறுத்தி யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டுக் கேட்டு ஒவ்வொன்றையும் ஓடி ஓடிக் கொடுத்தான். ஆழம் பற்றி வினவிய போது, ஒரு மீட்டர் என்று தன் கையில் இருக்கும் குச்சியைத் தண்ணீரில் இறக்கி அளந்து காட்டிய அலெக்ஸ், மொத்த ஏரியையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு, எங்களையும் தனியாய்ப் படகில் பயணம் செய்யச் சொல்லிப் பரிந்துரைத்து, தொடங்கிய இடத்திலேயே எங்களை இறக்கிவிட்டார்.</p><p>அலெக்ஸ் சொன்னது போல், படகுப் பயணம் செய்ய வேண்டும். ஆனால் ஒரு படகின் கட்டணமே ஐம்பது ரூபாய் வரை போக, என்னோடு வந்த ஒரு சிலரைக் கேட்டு ஐந்து பேராய்ச் செல்வதென்று தீர்மானித்து படகு ஒன்றை வாடகைக்கு எடுத்தோம். கணவன் மனைவி, அவர்களோடு வந்த முதியவர், நான் மற்றும் இன்னொரு இளைஞர் என ஐவராய்த் தொடங்கினோம். தொடக்கத்தில் அந்தப் பெண்ணின் கணவன் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு படகினைச் செலுத்த நானும் அந்த இளைஞனும் படகின் இன்னொரு மூலையில் அமர்ந்து புகைப்படம் எடுப்பதில் ஆழ்ந்தோம். படகு என் கைக்கு வந்த போதே ஓரளவு கூட்டம் கூடி இருந்தது. அங்கும் இங்கும் மோதி, பாதித் தொலைவுக்குப் பின் தான் ஓரளவு கட்டுப்பாடு என் கைக்கு வந்தது. இரண்டு மணி நேரத்திற்குள் படகை ஒப்படைக்க வேண்டும். கால்வாய் முழுவதையும் சுற்றி ஏரி வழியே சென்றபோது எல்லா வழிகளும் பழகிய வழிகளாகவே தோன்றின. ஆனால் தொடங்கிய இடம் மட்டும் வரவே இல்லை. &#8216;பாப்பிலோன்&#8217; நாவலில் வழி தெரியாமல் கடலில் தத்தளிக்கும் நாயகனின் நிலைமை ஒரு நிமிடம் கண் முன் வந்து போனது. தொடங்கிய இடத்தை நான் பதிவு செய்து வைத்திருந்தமையால் ஒரு வழியாக இரண்டு மணி நேரத்திற்குள் படகை ஒப்படைத்தோம். மதிய உணவு, ஊர் முழுவதையும் கால்களால் அளந்து அங்கிருந்து கிளம்ப மாலை ஆனது.</p><p>தீவாந்திர வாழ்க்கை வழியனுப்பியது. தினசரி வாழ்க்கை வரவேற்றது!</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-dd68e67 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="dd68e67" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-8ca43a1" data-id="8ca43a1" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-e3433a5 elementor-arrows-position-inside elementor-pagination-position-outside elementor-widget elementor-widget-image-carousel" data-id="e3433a5" data-element_type="widget" data-e-type="widget" data-settings="{&quot;navigation&quot;:&quot;both&quot;,&quot;autoplay&quot;:&quot;yes&quot;,&quot;pause_on_hover&quot;:&quot;yes&quot;,&quot;pause_on_interaction&quot;:&quot;yes&quot;,&quot;autoplay_speed&quot;:5000,&quot;infinite&quot;:&quot;yes&quot;,&quot;speed&quot;:500}" data-widget_type="image-carousel.default">
				<div class="elementor-widget-container">
							<div class="elementor-image-carousel-wrapper swiper" role="region" aria-roledescription="carousel" aria-label="Image Carousel" dir="ltr">
			<div class="elementor-image-carousel swiper-wrapper" aria-live="off">
								<div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="1 of 4"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.52-PM-7-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM (7)" /></figure></div><div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="2 of 4"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.51-PM-1-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.51 PM (1)" /></figure></div><div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="3 of 4"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.51-PM-2-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.51 PM (2)" /></figure></div><div class="swiper-slide" role="group" aria-roledescription="slide" aria-label="4 of 4"><figure class="swiper-slide-inner"><img decoding="async" class="swiper-slide-image" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-12-at-4.29.51-PM-150x150.jpeg" alt="WhatsApp Image 2026-08-12 at 4.29.51 PM" /></figure></div>			</div>
												<div class="elementor-swiper-button elementor-swiper-button-prev" role="button" tabindex="0">
						<i aria-hidden="true" class="eicon-chevron-left"></i>					</div>
					<div class="elementor-swiper-button elementor-swiper-button-next" role="button" tabindex="0">
						<i aria-hidden="true" class="eicon-chevron-right"></i>					</div>
				
									<div class="swiper-pagination"></div>
									</div>
						</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-cbcb49d elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="cbcb49d" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-02af3c6" data-id="02af3c6" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-eadefe8 elementor-widget elementor-widget-text-editor" data-id="eadefe8" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<h3>Giethoorn: Where the World Came to a Village</h3><p><em><strong>“I want to go somewhere where no one exists.</strong></em><br /><em><strong>And even there, I should not exist.”</strong></em><br /><em><strong>&#8211; Abdul Rahman</strong></em></p><p>There was a time when travel was something I knew only through other people&#8217;s stories.</p><p>Until a few years ago, I had never crossed the borders of Tamil Nadu. While children in my extended family were growing up with airport photographs and boarding passes, I had never even stood close enough to an aeroplane to hear its engines properly. We belonged to a generation that had inherited little except the determination to move forward. We were among the first generations born after independence, children of families that had learned to rise slowly, often by holding on to whatever hands were available.</p><p>For people like us, travel was not a way of life. It was a privilege.</p><p>When something seems permanently beyond your reach, you eventually stop yearning for it.</p><p>Or at least, you learn to pretend that you have.</p><p>Perhaps that is why the idea of travel has always fascinated me.</p><p>Because in India, travel rarely means simply going somewhere.</p><p>It usually has a purpose.</p><p>We travel to work. We travel to visit relatives. We travel for weddings and funerals. We travel to see temples, often with an itinerary carefully planned around three famous ones and two unexpected ones discovered on the way.</p><p>We travel because we have somewhere to be.</p><p>Very rarely do we travel simply because we want to disappear for a while.</p><p>I have always liked the idea that a journey can strip a person of everything he thinks he is.</p><p>S. Ramakrishnan once wrote about this beautifully: when you board a bus or train and begin travelling, you are no longer somebody&#8217;s son, somebody&#8217;s father, a graduate, a writer or a person with a particular status. You are simply a passenger.</p><p>I think that is one of the most beautiful things about travelling.</p><p>For a few hours, nobody knows who you are.</p><p>And when the familiar labels that define us begin to fall away, we are given the rare chance to meet the person underneath them.</p><p>A foreign country does this even more intensely. The language is unfamiliar. The streets have different names. Nobody knows your history. Nobody cares what you do for a living.</p><p>You arrive stripped of identity.</p><p>And perhaps it is only when we are no longer surrounded by the people and places that constantly remind us who we are that we begin to discover what else there is inside us.</p><p>That was the feeling with which I set out for the Netherlands.</p><p>I woke before sunrise on a Saturday.</p><p>I had thought about visiting the Netherlands many times. Like many things we genuinely want to do, it had remained on the list for far too long.</p><p>That morning, however, I was finally going.</p><p>The journey had been organised by an Indian travel company called See-Eu(<a href="https://see-eu.info/">https://see-eu.info/</a>), operating in Belgium. Their idea was simple and slightly amusing: to experience Europe without entirely leaving India behind.</p><p>The moment I stepped onto the bus, I knew exactly what they meant.</p><p>Hindi conversations.</p><p>Indian snacks.</p><p>Masala tea.</p><p>Indian food.</p><p>And, naturally, an argument over which Bollywood film we should watch.</p><p>Europe, for a moment, smelled like home.</p><p>The bus picked up passengers in Mechelen and Antwerp before turning towards the Netherlands. I had woken up far too early and was still carrying the weight of sleep in my eyes.</p><p>Eventually, I surrendered.</p><p>For most of the journey, I was asleep, waking only now and then to the movement of the bus and the occasional conversations around me.</p><p>The last thing I remember was Aamir Khan&#8217;s PK wandering around Earth trying to understand human beings.</p><p>When he finally returned to his spaceship, we had arrived in Giethoorn.</p><p>Giethoorn did not look like a place that belonged to the modern world.</p><p>It looked as though someone had taken an old European painting, removed the roads and replaced them with water.</p><p>Our guide led us towards a boat waiting at the edge of the village.</p><p>An elderly Dutchman greeted us.</p><p>His name was Alex.</p><p>He had a smile that suggested he had told this story hundreds of times and still enjoyed telling it.</p><p>Once everyone had boarded, the boat slipped quietly into the canal.</p><p>Then Alex began speaking.</p><p>His voice was enormous.</p><p>He paused every few minutes, not because he had forgotten what to say, but to make sure that even those sitting at the back could hear him.</p><p>Then he began telling us how Giethoorn came to be.</p><p>The village had been shaped by necessity.</p><p>Centuries ago, settlers arrived in this marshy landscape and began cutting peat, the accumulated remains of dead vegetation beneath the wetlands, which they dried and used as fuel.</p><p>But extracting peat changed the landscape.</p><p>The digging created pits.</p><p>Water filled them.</p><p>The pits became channels.</p><p>The channels gradually became a network of waterways.</p><p>What began as a way to survive eventually created the very landscape for which Giethoorn is now famous.</p><p>There is something deeply human about that.</p><p>We often imagine that people shape the world around them.</p><p>But sometimes survival works in the opposite direction.</p><p>The world shapes us.</p><p>The people of Giethoorn could not make their land into something it was not. So they adapted themselves to it.</p><p>They built small wooden bridges over the canals where other places would have built roads.</p><p>They learned to live with water rather than fight it.</p><p>Their geography became their culture.</p><p>Their limitation became their identity.</p><p>Their difficulty became their beauty.</p><p>Alex&#8217;s stories reminded me of something that had happened years earlier in Tamil Nadu.</p><p>I was travelling with my father and my elder brother Ramu when we passed through the salt pans of Vedaranyam.</p><p>Ramu looked at the endless white landscape and asked, with genuine curiosity, what people could possibly do with all that salt.</p><p>When I explained that salt was being produced there, he began reasoning aloud.</p><p>“If the groundwater is salty, how do they farm? Look at how differently God has created different places. In our region people farm. Here they can&#8217;t, so they make salt and survive.”</p><p>My father and I immediately responded together.</p><p>“People simply build their lives around what their land allows them to do. What does God have to do with it?”</p><p>That conversation stayed with me.</p><p>Because perhaps that is the story of every human settlement.</p><p>People do not wait for perfect circumstances.</p><p>They negotiate with whatever the world gives them.</p><p>Where the sea shapes the land and leaves its water behind, people learn to turn that abundance into a livelihood.</p><p>If there is fertile soil, they farm.</p><p>If the land offers something else, they find another way to make a living from it.</p><p>Civilisation is perhaps nothing more than humanity learning how to turn obstacles into occupations.</p><p>For centuries, Giethoorn remained almost completely enclosed within itself.</p><p>The village had its own church, its own little bridges, its own boats and its own rhythm of life.</p><p>The canals wound through the village like streets, while the boats became the natural way of moving from one home to another.</p><p>The houses stood quietly beside the canals, surrounded by trees, ducks, chickens and an astonishing amount of water.</p><p>The people lived within this small world and, for generations, had little reason to leave it.</p><p>They married within the community.</p><p>They lived among people they had known all their lives.</p><p>While the rest of Europe moved through centuries of change, Giethoorn seemed to remain suspended somewhere in the past.</p><p>Then something unexpected happened.</p><p>The outside world discovered it.</p><p>In 1958, a Dutch film called Fanfare was shot in Giethoorn.</p><p>People came to see the place where the film had been made.</p><p>And then more people came.</p><p>And more.</p><p>The village that had spent centuries isolated from the world suddenly became a place the world wanted to see.</p><p>The irony was beautiful.</p><p>Giethoorn did not have to leave its isolation to discover the world.</p><p>The world came looking for it.</p><p>Restaurants appeared.</p><p>Shops appeared.</p><p>Tourists arrived from different countries.</p><p>The village slowly became one of the Netherlands&#8217; most recognisable destinations.</p><p>Even the offspring of migratory birds travelling from Africa began arriving seasonally, adding splashes of colour to a place that already seemed to have been designed for a postcard.</p><p>As we moved through the canals, Alex pointed towards the houses.</p><p>Most had beautiful thatched roofs.</p><p>Then he pointed out a few houses with tiled roofs.</p><p>Those, he explained, traditionally belonged to people such as the mayor, teachers and priests.</p><p>He rubbed his fingers together.</p><p>Money.</p><p>Even in a village where roads had been replaced by canals, the language of wealth needed no translation.</p><p>But Alex&#8217;s relationship with Giethoorn was more complicated than that of a guide simply selling its beauty.</p><p>He was proud of the village.</p><p>He was also worried about it.</p><p>Wealthy outsiders had begun buying houses there, not to become part of the community, but to spend a few weeks or months enjoying the village during summer.</p><p>Those houses remained empty for much of the year.</p><p>Land prices rose.</p><p>The people who had always lived there found it increasingly difficult to remain part of the place they called home.</p><p>Tourism had brought prosperity.</p><p>But prosperity, Alex seemed to suggest, could also quietly destroy the very thing people had come to see.</p><p>Recent regulations limiting property purchases by people who do not actually live in the village gave him some satisfaction.</p><p>Perhaps Giethoorn had finally realised that a village cannot survive merely by becoming beautiful for other people.</p><p>It must remain a home for the people who belong to it.</p><p>At one point, the canal opened into a lake.</p><p>In the middle of the water was a tiny boat.</p><p>A young boy was selling water and ice cream.</p><p>As our boat approached, he pulled himself towards us with surprising strength.</p><p>He asked everyone what they wanted, collected the orders and hurried back and forth, delivering everything with the energy of someone who had discovered that even a lake could become a workplace.</p><p>I asked Alex how deep the water was.</p><p>He took the small stick he was carrying, pushed it into the lake and measured.</p><p>“About a metre.”</p><p>I looked at the enormous expanse of water around us.</p><p>A metre.</p><p>It seemed almost ridiculous.</p><p>But perhaps that was Giethoorn in miniature.</p><p>Everything looked deeper than it really was.</p><p>Everything looked more complicated than it needed to be.</p><p>Alex eventually brought us back to where we had started and suggested that we rent our own boat.</p><p>We took his advice.</p><p>The price of a boat was too much for me alone, so I found four others willing to share one.</p><p>A couple.</p><p>An elderly man travelling with them.</p><p>Another young man.</p><p>And me.</p><p>Five people who had met because of a bus journey, now entrusted with a boat in a village where getting lost was surprisingly easy.</p><p>At first, the husband took control of the boat.</p><p>The other young man and I were far more interested in taking photographs.</p><p>Eventually the controls came to me.</p><p>That was when Giethoorn discovered my lack of boating experience.</p><p>I bumped into one side.</p><p>Then another.</p><p>I managed to make the boat behave after some time, but by then I had already gained the attention of several passing boats.</p><p>We had two hours.</p><p>So we continued.</p><p>The canals twisted and turned.</p><p>Wooden bridges appeared one after another.</p><p>Houses looked familiar.</p><p>Trees looked familiar.</p><p>Every corner seemed as though I had already passed it.</p><p>But there was one problem.</p><p>We could not find where we had started.</p><p>For a moment, I understood the desperation of someone lost at sea.</p><p>I remembered Papillon and its lonely protagonist drifting without knowing where the world had disappeared.</p><p>We were not in the middle of an ocean.</p><p>We were in a tourist village in the Netherlands.</p><p>Yet the feeling was strangely similar.</p><p>Fortunately, I had saved our starting location on my phone.</p><p>Eventually, we found our way back.</p><p>We returned the boat within the two hour limit.</p><p>Alive.</p><p>Unarrested.</p><p>And, most importantly, still in possession of the boat.</p><p>After lunch, I left the others behind and wandered through the village alone.</p><p>There was no schedule left to follow.</p><p>No guide.</p><p>No bus.</p><p>No instructions.</p><p>Only the quiet rhythm of my own footsteps.</p><p>I crossed wooden bridges, wandered beside the canals, watched boats glide silently across the water and paused before houses that seemed almost too peaceful to belong to the hurried world outside.</p><p>For the first time that day, I was not travelling with a group.</p><p>I was simply walking.</p><p>And perhaps that was when I experienced Giethoorn most completely.</p><p>Not through Alex&#8217;s stories.</p><p>Not through the boat.</p><p>Not through the camera.</p><p>But through silence.</p><p>The village seemed to ask for nothing.</p><p>It did not demand that I see another attraction, reach another landmark or take another photograph.</p><p>It simply existed.</p><p>And for a while, so did I.</p><p>As the afternoon slowly surrendered to evening, I made my way back towards the bus.</p><p>I looked back at Giethoorn one last time.</p><p>For centuries, this little village had lived almost as though the rest of the world did not exist. Then the world discovered it, turned it into a destination and began travelling thousands of kilometres just to experience the quiet life it had once been forced to live.</p><p>Perhaps that is the strange fate of beautiful places.</p><p>They become desirable precisely because they have remained untouched by the things from which people are trying to escape.</p><p>As the bus pulled away, the canals, bridges and thatched houses slowly disappeared behind me.</p><p>For a few hours, I had stepped outside the ordinary rhythm of life and entered a world where water replaced roads, silence replaced urgency and getting lost was almost a pleasure.</p><p>Now I was leaving that little world behind.</p><p>Giethoorn had given me a few hours of escape, and the familiar world was waiting patiently at the end of the road.</p><p>The quiet life of the waterways was fading behind me; the noise and routine of everyday life were beginning to return.</p><p>The little island of solitude had said its goodbye and I was returning to the mainland of ordinary life.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/giethoorn/">Giethoorn (கீத்தோர்ன்)</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கண் மூடுங்கள் ஜானகி அம்மா!</title>
		<link>https://kavirasan.com/janaki-amma/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jul 2026 21:11:50 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<category><![CDATA[#katturaigal #கட்டுரைகள் #tamil #தமிழ் #தமிழ்_கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4715</guid>

					<description><![CDATA[<p>&#8220;குயில்கள்மெளனத்தைச் சுவைத்துக்கொண்டிருக்கின்றன புல்லாங்குழற் காட்டில்யாருமில்லை வீணையின் மீதுஒரு பூவிழுந்து கிடக்கிறது எங்கிருந்தோமேகங்களை விலக்கிவழியும் ஒளிமஞ்சளில்மிதக்கிறது காற்றுஉன் முகமாகஅனைத்துக்குமானஉன் குரலாக அன்பிசைக்குயில்எஸ்.ஜானகி அம்மாவுக்குஆழ்ந்த இரங்கல்&#8221; &#8211; பழநிபாரதி பள்ளி நாட்களில் ஒரு பாடலைக் கேட்ட உடனே பாடகர்கள் பெயரைச் சொல்லும் பிரகாஷைப் பார்த்தால் எங்களுக்கு அதிசயமாகவே இருக்கும். சுசீலாவா ஷைலஜாவா என்று நாங்கள் குழம்பிக் கொண்டிருக்கும் நொடிப் பொழுதில் சுசிலாம்மா டா என்பான். சித்ராவா சுஜாதாவா என்று யோசிக்கவே இடம் கொடுக்காமல், கீச்சுன்னு பாடுறாங்க பாரு, ஸ்வர்ணலதாம்மா என்பான். [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/janaki-amma/">கண் மூடுங்கள் ஜானகி அம்மா!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4715" class="elementor elementor-4715">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-f627cae elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="f627cae" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-139919a" data-id="139919a" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-4df2da3 elementor-widget elementor-widget-image" data-id="4df2da3" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="971" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/07/c4fb6e54-8ef7-47e5-9ef1-477ee422cd82-971x1024.png" class="attachment-large size-large wp-image-4723" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/07/c4fb6e54-8ef7-47e5-9ef1-477ee422cd82-971x1024.png 971w, https://kavirasan.com/wp-content/uploads/2026/07/c4fb6e54-8ef7-47e5-9ef1-477ee422cd82-284x300.png 284w, https://kavirasan.com/wp-content/uploads/2026/07/c4fb6e54-8ef7-47e5-9ef1-477ee422cd82-768x810.png 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/07/c4fb6e54-8ef7-47e5-9ef1-477ee422cd82-200x211.png 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/07/c4fb6e54-8ef7-47e5-9ef1-477ee422cd82-300x316.png 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/07/c4fb6e54-8ef7-47e5-9ef1-477ee422cd82.png 1221w" sizes="(max-width: 971px) 100vw, 971px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-12f76f2 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="12f76f2" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-847b827" data-id="847b827" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-77914c4 elementor-widget__width-initial elementor-widget elementor-widget-text-editor" data-id="77914c4" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p><em><strong>&#8220;குயில்கள்</strong></em><br /><em><strong>மெளனத்தைச் </strong></em><br /><em><strong>சுவைத்துக்கொண்டிருக்கின்றன</strong></em></p><p><em><strong>புல்லாங்குழற் காட்டில்</strong></em><br /><em><strong>யாருமில்லை</strong></em></p><p><em><strong>வீணையின் மீது</strong></em><br /><em><strong>ஒரு பூ</strong></em><br /><em><strong>விழுந்து கிடக்கிறது</strong></em></p><p><em><strong>எங்கிருந்தோ</strong></em><br /><em><strong>மேகங்களை விலக்கி</strong></em><br /><em><strong>வழியும் ஒளிமஞ்சளில்</strong></em><br /><em><strong>மிதக்கிறது காற்று</strong></em><br /><em><strong>உன் முகமாக</strong></em><br /><em><strong>அனைத்துக்குமான</strong></em><br /><em><strong>உன் குரலாக</strong></em></p><p><em><strong>அன்பிசைக்குயில்</strong></em><br /><em><strong>எஸ்.ஜானகி அம்மாவுக்கு</strong></em><br /><em><strong>ஆழ்ந்த இரங்கல்&#8221;</strong></em></p><p><em><strong>&#8211; பழநிபாரதி</strong></em></p><p>பள்ளி நாட்களில் ஒரு பாடலைக் கேட்ட உடனே பாடகர்கள் பெயரைச் சொல்லும் பிரகாஷைப் பார்த்தால் எங்களுக்கு அதிசயமாகவே இருக்கும். சுசீலாவா ஷைலஜாவா என்று நாங்கள் குழம்பிக் கொண்டிருக்கும் நொடிப் பொழுதில் சுசிலாம்மா டா என்பான். சித்ராவா சுஜாதாவா என்று யோசிக்கவே இடம் கொடுக்காமல், கீச்சுன்னு பாடுறாங்க பாரு, ஸ்வர்ணலதாம்மா என்பான். எப்படி இவனால் மட்டும் இப்படி வேறுபாடு காண முடிகிறது என்று நாங்கள் வியந்து கொண்டிருந்த நாட்களில், என்னாலும் கேட்ட உடனே சொல்ல முடிந்த குரல்களில் முதன்மையானவர் ஜானகி அம்மா தான். ஏனோ தெரியவில்லை அவர் பெயரைச் சொல்லும் போதெல்லாம் &#8216;அம்மா&#8217;வைத் தவிர்க்க முடிவதில்லை. சில முறை &#8216;ஜானகி&#8217; என்று மட்டும் சொல்ல முயன்றதும் உண்டு, ஆனால் ஏனோ அது மரியாதைக் குறைவாகவே தோன்றியது.</p><p>இன்று உறங்கி எழுந்து அவர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டதும் மனம் ஒருவாறு சஞ்சலத்தோடே தான் இருக்கிறது. ஒரு சில பிரபலங்களின் இறப்பு தான் தனிப்பட்ட இழப்பாய்த் தோன்றுகிறதோ என்னவோ. சோகத்தை வெளிப்படுத்தும் வண்ணம் பலர் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதைக் காண முடிந்தது. அதில், &#8216;அடுக்குமல்லி எடுத்து வச்சி&#8217;, &#8216;பூத்தது பூந்தோட்டம்&#8217;, &#8216;அம்மா அம்மா&#8217;, &#8216;நிலவே முகம் காட்டு&#8217;, &#8216;இஞ்சி இடுப்பழகி&#8217;, &#8216;சாமிக்கிட்ட சொல்லி வச்சி&#8217;, &#8216;அழகு மலர் ஆட&#8217; என எத்தனை எத்தனை வகையான பாடல்கள்?</p><p>இளைய தலைமுறைக்கு அவரை எந்தப் பாடலை வைத்து அறிமுகம் செய்வது?</p><p>சதீஷிடம் கேட்டால், &#8216;சின்னத்தாயவள் தந்த ராசாவே&#8217; என்பான். மதனிடம் கேட்டால், &#8216;தென்றல் வந்து தீண்டு போது&#8217; என்பான். என்னிடம் கேட்டால், &#8216;மார்கழித் திங்கள் அல்லவா&#8217; என்பேன். &#8216;அவள் அப்படிதான் திரைப்படத்தில்&#8217; மஞ்சுவின் தோழியிடம் பின்னணி பாடகி எஸ்.ஜானகியைப் பேட்டி எடுக்கப் போவதாகக் கமல் சொல்லிக் கொண்டிருப்பார். உடனே அந்தப் பெண் &#8220;மச்சான பார்த்தீங்களா ஜானகியவாங்க?&#8221; எனக் கேட்பார். &#8220;எனக்கு சிங்காரவேலனே ஜானகியைத் தான் தெரியும்&#8221; என்பார் கமல்.</p><p>&#8220;குழந்தைகளுக்கான பாடகி, முழுக்க முழுக்க கர்நாடக இசை சார்ந்த பாடல்கள் பாடும் பாடகி, கிராமியப் பாடல்கள் பாடும் பாடகி, சரசப் பாடல்கள் பாடும் பாடகி என எஸ்.ஜானகியம்மாவை அவரவர்க்கு தக்கவாறு நினைவில் வைத்திருப்பர் அதுவே அவரது தனித்துவம்&#8221;, என்று யாத்திரி சொன்னது போல், இது தான் அவர் என்று எடுத்துரைக்கவே முடியாத இடம் அவருடையது. தமிழ் மட்டுமல்ல, தென்னிந்தியா கண்ட ஆகப்பெரும் அதிசயம் அவர்.</p><p>அவர் இறப்பின் இரங்கலுக்காக மனுஷ் எழுதிய கவிதையில்,</p><p><em><strong>&#8220;ஜானகியின் குரலோடு</strong></em><br /><em><strong>ஆண் குரல்கள்</strong></em><br /><em><strong>போட்டியிட்டுத் தத்தளித்தன</strong></em><br /><em><strong>எஸ்.பி.பி மட்டும் </strong></em><br /><em><strong>அந்தச் சவாலைச் சரி சமமாகச்</strong></em><br /><em><strong>சந்தித்தார்&#8221;</strong></em>, என்று எழுதியிருந்ததில் ஓரளவு உண்மை இருக்கிறது. கல்லூரி நாட்களில் எஸ்.பி.பியா யேசுதாஸா என்று பட்டிமன்றம் வைத்த நாட்களில் எந்த இடத்திலும் எஸ்.பி.பியை விட்டுக் கொடுக்காத பிள்ளை மனம், ஜானகி அம்மா என்று வந்துவிட்டால் மட்டும் சரி அவர் தானே என்று தோற்றுப்போகச் சம்மதிக்கிறது. ஜானகி அம்மா எவ்வளவு சிறந்த பாடகி என்று எடுத்துக்காட்ட ஒரே ஒரு பாடல் போதும். &#8216;சாமிக்கிட்ட சொல்லி வச்சி&#8217; பாடலின் முதல் சரணத்தைத் தொடங்கும் பாலு,</p><p><strong>&#8220;கூவாத குயில் ஆடாத மயில் </strong><br /><strong>நானாக இருந்தேனே!</strong><br /><strong>பூவோடு வரும் காற்றாக எனை&#8221;</strong> என்ற இடத்தில் சின்னதாய்க் கொஞ்சம் இளைப்பாறிய பின்னே, <strong>&#8220;நீ சேரத் தெளிந்தேனே&#8221;</strong> என்று முடிப்பார். மிக நீண்ட வரி தான். அடுத்த சரணத்தில் அதே இடத்தை இராஜா ஜானகி அம்மாவுக்கு வழங்க,</p><p><strong>&#8220;காவேரி அணை மேலேறி நதி </strong><br /><strong>ஓடோடி வரும் வேகம் </strong><br /><strong>பூவான எனை நீ சேரும் விதி</strong><br /><strong>மாறாத இறை வேதம்&#8221;</strong> என்று ஒற்றை அடியில் அடித்திருப்பார்.</p><p>&#8216;தீராத விளையாட்டுப் பிள்ளை&#8217; படத்தில் வரும் &#8216;ஜன்னல் வந்த காற்றே&#8217; பாடலில் ஒரே இசையை மெலடி, பாப் மற்றும் குத்துப் பாடல் என மூன்று பாடகர்களை வைத்து மூன்று விதமாகப் பாடவைத்திருப்பார் இசையமைப்பாளர் யுவன். ஆனால் இதை அந்நாட்களிலேயே ராஜா ஜானகி அம்மாவை வைத்துச் செய்திருக்கிறார் என்று சொன்னால் அதில் வியப்பென்ன இருக்கிறது? மகளிர் மட்டும் படத்தில் வரும் &#8216;கரவ மாடு மூனு&#8217; பாடலில், மெலடியை வெளிப்படுத்தும் ரேவதிக்கு, &#8216;நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சும் நேரம் இன்பம் இன்பம் ஆரம்பம்&#8217; என்ற வரிகள் வரை, ஜானகி அம்மா தன் இயல்பு குரலிலேயே பாடியிருப்பார். அடுத்ததாக வரும் ஊர்வசி தன் சேலையை ஐயர் வீட்டுப் பெண் போல் இழுத்துப் போர்த்த, அங்கே, &#8216;அடிச்சா பாரு கண்ணு அய்யராத்துப் பொன்னு&#8217; என்று வரும் வரிகளில், தன் குரலையும் அதற்கு ஏற்றாற்போல் மாற்றும் ஜானகி அம்மா, ஒவ்வொரு சொல்லிலும் கொஞ்சம் நெளிவு சுளிவைக் கூட்டி ஐயர் ஆத்து மொழியை அங்கே அழகாகக் கடத்தியிருப்பார். இறுதியாக, &#8216;வயசுப் பொண்ண மாமா வளைச்சுக் கட்டுப் பார்ப்போம், தேங்கா பாலத் தேடி வந்த இந்த ஆப்பம்&#8217; என்று குப்பத்துப் பெண்ணாக வரும் ரோஹிணி பாடத் தொடங்கிய கணம், அப்படியே கீரை(Gear) மாற்றியிருப்பார் ஜானகி அம்மா. அதில், &#8216;அழக எண்ணி&#8217; என்ற சொல் எப்போதும் &#8216;அயக எண்ணி&#8217; என்று அழகிய சென்னைத் தமிழில் தான் ஒலிப்பது ஜானகி அம்மா செய்த கூடுதல் அழகியல்.</p><p>திரைப்பாடலை வெறும் பொழுதுபோக்கு என்று கருதாமல், அதைப் பாத்திரங்களின் இயல்பையும் காட்சியின் உணர்வையும் கடத்தும் ஒரு சாதனம் எனக் கருதி ஒவ்வொரு பாடல்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வரிகளுக்கும் நியாயம் செய்த ஒரு ஆகச் சிறந்த பாடகி எஸ். ஜானகி அம்மா. அவர் பாடிய பாடலை இன்னொருவர் பாடிக் கேட்பது அந்தப் பாடலின் உணர்வுக்கு ஜானகி அம்மா எவ்வளவு உண்மை செய்திருக்கிறார் என்று விளக்கம் ஏதுமின்றி எவருக்கும் எளிதாய் விளங்க வைக்கும்.</p><p>96 திரைப்படத்தில், திரிஷாவின் பின்னணிக் குரலாய் ஒலிக்கும் சின்மயி, ஜானகி அம்மா முன் அமர்ந்து பாடும் காட்சியில், மிக இயல்பாய் (வேண்டும் என்றே) சங்கதி அற்ற கீதமாய், பூமாலையே பாடலைப் பாடுவார். அதைத் திருத்தும் ஜானகி அம்மா, &#8216;கோடையில் வாடாத கோவில் புறா&#8217; என்ற வரியில் &#8216;கோவில்&#8217; என்ற சொல்லைக் கொஞ்சம் இழுத்து சங்கதியோடு பாடச் சொல்லுவார். சின்மயி அதை அப்படியே பாடிய போதும், ஏனோ ஜானகி அம்மாவின் இனிமை அதில் துளியும் இருக்காது. சின்மயி எங்கள் தலைமுறையின் ஆகச் சிறந்த பாடகி என்ற போதிலும், ஜானகி அம்மா பாடலை பாடும் போது, நாம் நம்மை எவ்வளவு சிறுமையாய் உணரக் கூடும் என்று சொல்வது போல் அமைந்திருக்கும் அந்தக் காட்சி. அது உண்மையும் கூட. ஆம்! அவர் பாடலை நாம் பாட முயற்சி செய்யும் போது தான், அவர் பாடிய சங்கதி இன்றி நம்மால் அந்த வரிகளைக் கடந்து செல்லவே முடியாது என்று தோன்றும்.</p><p>அதிசயப் பிறவி படத்தில் வரும் &#8216;தானந்தன கும்மிக்கொட்டி&#8217; பாடலில், இரண்டாம் சரணத்தில் உணர்வுகளைக் கூட்டிக் கொண்டே செல்லும் இசைஞானி, இறுதி வரியை மலேசியா வாசுதேவனிடம் ஒப்படைத்திருப்பார்.</p><p><strong>&#8220;காதலென்னும் ஆட்சிதனை</strong><br /><strong>வானமும் கூட வாழ்த்துதம்மா&#8221;</strong> என்று உச்சத்தில் கொண்டு அவர் நிறுத்த, அங்கே &#8216;தானந்த கும்மிக்கொட்டி&#8217; என்று கீழிருந்து தொடங்கும் ஜானகி அம்மாவின் குரல், &#8216;தா&#8217;வைக் கொஞ்சம் நீட்டித்துப் பாடும். என்னைப் போல் அந்த நீட்டலில் விழுந்தவர்கள் நிறையப் பேர் இருக்கக்கூடும்.</p><p>&#8216;மணியே மணிக்குயிலே&#8217; பாடல் கூட அப்படித்தான். பாடலின் முடிவில்,</p><p><strong>&#8220;மணியே மணிக்குயிலே</strong><br /><strong>மாலை இளம் கதிரழகே&#8221;</strong>, என்ற வரியை இரண்டு முறைப் பாடும் ஜானகி அம்மா, இரண்டாம் முறையில் அந்த மாலையை மட்டும் கொஞ்சம் நீட்டித்துப் பாடுவார். எத்தனை முறை அந்த நீட்டலின் சுகத்தோடு நான் நித்திரைக்குச் சென்றதுண்டு?</p><p>எஜமான் திரைப்படத்தில் சோகத்தைக் கடத்தும் விதமாக அமைந்த &#8216;நிலவே முகம் காட்டு&#8217; பாடலில், வரிகள் ஒவ்வொன்றும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தேற்றும் படியாக அமைந்திருக்கும். தேற்றும் நெஞ்சம் மட்டும் தேம்பாதா என்ன? பாடலின் இறுதியில்,</p><p><strong>&#8220;அலை போல் சுதி மீட்டு </strong><br /><strong>இனிதான மொழி பேசு&#8221;</strong>, என்ற வரிகளைப் பாடும் ஜானகி அம்மா, &#8216;இனிதான&#8217; என்ற சொல்லை அழும் தொனியில் முழுமையாக உச்சரிக்காமலேயே ஒரு கடந்து செல்வார். அந்த அழும் குரலில் விழுந்து எளிதாய் எழும் மனங்கள் எத்தனை?</p><p>கைதி திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ் படியில் இறங்கி வரும்போது பின்னால் மெல்ல, &#8216;ஆசை அதிகம் வச்சி&#8217; பாடலில் பின்னணி இசை ஒலிக்கத்தொடங்கும். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும், பாடலின் ஜதிக்கேற்ப வைப்பது போல் காட்சிப் படுத்தியிருப்பார் லோகி. மெல்லக் கீழிறங்கி வந்த அர்ஜுன் தாஸ், போதை வஸ்து ஒன்றை தன் கைகளில் கொட்டி மூக்கால் இழுக்க, அப்போது பாடத் தொடங்குவார் ஜானகி அம்மா. அர்ஜுன் தாஸோடு சேர்ந்து நமக்கும் போதை ஏறத் தொடங்கும். இதே காட்சியை ஹிந்தி டப்பிங்கில் பார்க்க நேர்ந்தது. அங்கே ஜானகி அம்மாவின் குரல் இன்றி வெறும் பின்னணி இசை மட்டும் தான் வரும். அவர் இல்லாத இடம் எவ்வளவு வெறுமையைக் கொடுக்கும் என்பதற்கு அந்த ஒற்றைக் காட்சியே உலகுக்கு உரைக்க வல்லது.</p><p>மானசீகன் எழுதிய &#8216;எங்கே இருக்கிறாய் கேத்ரின்&#8217; சிறுகதையில், கேத்ரினைப் படிக்கும் போது, &#8217;96&#8217; படத்தில் வரும் ஜானு தான் நினைவில் வந்து போவார். பெரும்பாலும் ஜானகி பாடல்களைப் பாடும் கேத்ரின் என்று தான் அவரை மானசீகன் அறிமுகம் செய்வார். அப்பா இல்லாமல், அம்மாவின் முந்தானைப் பிடியில் வளர்ந்த மணிகண்டன் ஒரு கட்டத்தில் அம்மாவையும் இழக்க, அழுது கொண்டிருப்பவனுக்கு ஆறுதலாய் பள்ளி பாட்டுப் போட்டியில் ஒலிக்கும், கேத்ரினின் &#8216;உன்னை நான் அறிவேன்&#8217; பாடல். அவள் பாடத்தொடங்கிய ஹம்மிங்கை விளக்கிக் கொண்டு வரும் மானசீகன், &#8216;தேவனென்றால் தேவனல்ல தரை மேல் உந்தன் ஜனனம்&#8217; என்ற வரியில் அவள் பிரபஞ்சத்தையே தன் குரலில் வைத்துத் தூறிக் கொண்டிருந்தாள் என்று எழுதி இருப்பார். அந்த இடத்திலேயே படிப்பதை நிறுத்திவிட்டு நான் ஜானகி அம்மாவிடம் சரணடைந்து மொத்த பாடலையும் கேட்டு விட்டுத் தான் மீண்டும் கதைக்குள்ளேயே நுழைந்தேன். மணிகண்டனும் கேத்ரினும் அந்தப் பாடலில் தொடங்கி காதலில் தொடர, கதை அங்கு தான் திருப்பமெடுக்கும். கேத்ரினை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் சாலையில் ஓடிய மணிகண்டனை ஒரு பேருந்து இடித்து அங்கேயே அவன் இறந்தும் விடுவான். பின் குறிப்பாக, அவனை அடித்துப் போட்ட பேருந்திலும் உள்ளே மேரி மாதா படம் இருந்திருக்கிறது என்று எழுதி இருப்பார்.</p><p>மணிகண்டன் இறந்த சோகத்தில், இவரிடம் வந்த கேத்ரின், எதுவும் பேசாமல் நின்று கொண்டே இருப்பார். பேச எத்தனிக்கும் இவரை வாயடைக்கும் வண்ணம், &#8216;மாதா உன் கோவிலில்&#8217; என்று பாடத் தொடங்குவார். அதுவரை எல்லோருக்காகவும் இரங்கி இரங்கிப் பாடிய கேத்ரின், முதல் முறையாய் இரண்டாம் சரணத்தில் தன்னையும் மீறி தாய் முலைக்கு ஏங்கும் சிசுவைப் போல கேவி அழுவாள் என்று கதைத் தொடரும். அதற்குப் பின், &#8216;மாதா உன் கோவிலில்&#8217; பாடலைக் கேட்கும் துணிவு எனக்கு வந்ததே இல்லை. ஒவ்வொரு முறை அதை ஒலிக்க விடும்போதெல்லாம் வெண்ணிற உடையோடு கண்ணீர் சிந்தும் கேத்ரினின் முகம் தான் நினைவில் எனக்கு வந்து போகும். கேத்ரின் அழுததற்கே இப்படி என்றால், ஜானகி அம்மாவின் இறந்த சேதியினைக் கேட்ட அடுத்த கணம், தாய் முலைத் தேடும் சிசுவென்றே கேவ விரும்பியது மனம். பாடத் தொடங்கி பாதியோடு நிறுத்தி அழுது கொண்டே ஓடிய கேத்ரினைப் போலவே, பாடலை இசைக்கத் தொடங்கி அதைப் பாதியிலேயே நிறுத்திய மனம், மீண்டும் மீண்டும்,</p><p><strong>&#8220;கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே</strong><br /><strong>காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே&#8221;</strong></p><p>ஒற்றை வரிகளிலேயே உன்மத்தம் பிடித்தவனைப் போல் நின்று கொண்டு நீங்க மறுக்கிறது. மூப்பு, இயற்கை என்று என்ன சொன்னாலும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது என்பது, கலைத்துறைக்கு வெறும் கனவாகத் தான் இருக்கும். மனுஷ் தன் கவிதையில், இன்னொரு இடத்தில்,</p><p><em><strong>&#8220;எல்லா இரவுகளும்</strong></em><br /><em><strong>நிசப்தமானவை தான்!</strong></em><br /><em><strong>ஆனால் இந்த இரவின் நிசப்தம்</strong></em><br /><em><strong>நாற்பதாயிரம் இசைத்தட்டுகள்</strong></em><br /><em><strong>ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்ட</strong></em><br /><em><strong>அச்சுறுத்தும் நிசப்தம்&#8221;</strong></em> என்று எழுதியிருப்பார்.</p><p>அறுபது ஆண்டுகளாய் ஒலித்த குரல், இன்று இரவு நிசப்தங்களைக் கொடுத்து நிரந்தரமாய் உறங்கச் சென்றிருக்கிறது. இனி அந்த, இரவுகளின் மௌனத்தை அவர் இன்னிசை நிரப்பக்கடவது.</p><p>அஞ்சலி!</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/janaki-amma/">கண் மூடுங்கள் ஜானகி அம்மா!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சரஸ்வதி பெரியம்மா!</title>
		<link>https://kavirasan.com/periyamma/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Sun, 17 May 2026 10:10:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4673</guid>

					<description><![CDATA[<p>புவி மிசை மரபில் &#8211;பொதுவாக &#8211;இன்னொருவர் படும்இன்னலுக்கெல்லாம்உதவிட மக்கள்உடன்படுவதில்லை; பிறரதுகண்ணீர்க்கெல்லாம்கடன்படுவதில்லை; ஆம்!மண் வாழ்க்கை வாழும்மக்களிலே பலபேர்தன் வாழ்க்கை ஒன்றே &#8211;தழைக்கட்டும் என்றே &#8211;வாழ்வதுவே இங்குவழமை ஆயிற்றே; அதுபெற்றவர் ஆயினும்பிறந்தவர் ஆயினும்மற்றவர் போலேமாறியதாலேபற்றெல்லாம் இன்றுபழமை ஆயிற்றே; இப்படி இங்கே &#8211;எல்லோரும் இருக்க &#8211; துயர் &#8211;உறவுக்கு என்றதும்ஓடோடிச் சென்றந்தமரபுக்கு ஒரு கரம்மண்ணள்ளிப் போட்டது; அப்படி &#8211;மரபினை எல்லாம்மறந்திருந்து &#8211;மற்றவர்க்காய்ச் செவிமடல் திறந்து &#8211;நீளும் கரங்களேநித்தியம் காணும்;வாழும் வரையிலும்வாழ்வுக்குப் பின்னும்சரித்திரத்தில் இடம்சத்தியம் காணும்; ஏன் எனக் கேட்கஎவருமின்றி &#8211; இருமீனென [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/periyamma/">சரஸ்வதி பெரியம்மா!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4673" class="elementor elementor-4673">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-e44a03b elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="e44a03b" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-bbedaab" data-id="bbedaab" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-f75d6c5 elementor-widget elementor-widget-image" data-id="f75d6c5" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="675" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/05/WhatsApp-Image-2026-05-17-at-11.25.15-AM-1024x675.jpeg" class="attachment-large size-large wp-image-4675" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/05/WhatsApp-Image-2026-05-17-at-11.25.15-AM-1024x675.jpeg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/05/WhatsApp-Image-2026-05-17-at-11.25.15-AM-300x198.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/05/WhatsApp-Image-2026-05-17-at-11.25.15-AM-768x506.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/05/WhatsApp-Image-2026-05-17-at-11.25.15-AM-200x132.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/05/WhatsApp-Image-2026-05-17-at-11.25.15-AM.jpeg 1156w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-b418f3f elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="b418f3f" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-7ec81d7" data-id="7ec81d7" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-c7d8f1f elementor-widget elementor-widget-text-editor" data-id="c7d8f1f" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>புவி மிசை மரபில் &#8211;<br />பொதுவாக &#8211;<br />இன்னொருவர் படும்<br />இன்னலுக்கெல்லாம்<br />உதவிட மக்கள்<br />உடன்படுவதில்லை; பிறரது<br />கண்ணீர்க்கெல்லாம்<br />கடன்படுவதில்லை;</p><p>ஆம்!<br />மண் வாழ்க்கை வாழும்<br />மக்களிலே பலபேர்<br />தன் வாழ்க்கை ஒன்றே &#8211;<br />தழைக்கட்டும் என்றே &#8211;<br />வாழ்வதுவே இங்கு<br />வழமை ஆயிற்றே; அது<br />பெற்றவர் ஆயினும்<br />பிறந்தவர் ஆயினும்<br />மற்றவர் போலே<br />மாறியதாலே<br />பற்றெல்லாம் இன்று<br />பழமை ஆயிற்றே;</p><p>இப்படி இங்கே &#8211;<br />எல்லோரும் இருக்க &#8211;</p><p>துயர் &#8211;<br />உறவுக்கு என்றதும்<br />ஓடோடிச் சென்றந்த<br />மரபுக்கு ஒரு கரம்<br />மண்ணள்ளிப் போட்டது;</p><p>அப்படி &#8211;<br />மரபினை எல்லாம்<br />மறந்திருந்து &#8211;<br />மற்றவர்க்காய்ச் செவி<br />மடல் திறந்து &#8211;<br />நீளும் கரங்களே<br />நித்தியம் காணும்;<br />வாழும் வரையிலும்<br />வாழ்வுக்குப் பின்னும்<br />சரித்திரத்தில் இடம்<br />சத்தியம் காணும்;</p><p>ஏன் எனக் கேட்க<br />எவருமின்றி &#8211; இரு<br />மீனென மழலைகள்<br />மிதந்து வர &#8211;<br />காலம் தன்னோடு<br />காத்திருக்கும் கண்ணோடு<br />கொத்த நேரம் பார்த்துக்<br />கொக்காயிருந்தது!<br />நல்லதாய்ப் போனது<br />நலிந்த வாழ்வுக்கும்<br />ஆதரவு கொடுக்க ஓர்<br />அக்காயிருந்தது!</p><p>இளமை வயதில்<br />இமைக்கும் பொழுதில் &#8211; இரு<br />மொக்குள் வாழ்க்கை<br />முறைக்கெட்டுப் போக &#8211; அது<br />சிக்குள் விழுந்து<br />சிறைப்பட்டு நோக,<br />வாழ்வுக்கு &#8211;<br />வசைமாரி பொழிய<br />வாய்ப்பளிக்காமல்<br />திசைமாறிச் செல்லும்<br />சிசுக்களுக்கு &#8211;<br />இடமளிக்கப் பெரியம்மா<br />முடிவெடுத்தார்; <br />அவ்விடமே &#8211;<br />அவர்களுக்கு &#8211;<br />இன்னொரு அன்னையாய்<br />வடிவெடுத்தார்;</p><p>ஈன்ற பிள்ளைக்கு<br />மத்தியில் வந்தது<br />இன்னும் இரண்டு பிள்ளை; அப்படி<br />ஆதரவளிப்பது<br />அற்றை நாளில் <br />அவ்வளவெளிதாய் இல்லை;</p><p>பெற்றோரை நினைத்துப்<br />பிள்ளைகள் மனது<br />ஏங்காதிருக்க &#8211;<br />பெரியப்பா அவர்களை<br />வளர்ப்பதிலே பின்<br />வாங்காதிருக்க &#8211;<br />பெரியம்மா &#8211;<br />மழலைகட்காய்ப் போட்டார்<br />மனதிற்குத் திரை; <br />மடி கொடுத்தார் அவர்கள்<br />மணம் முடிக்கும் வரை;</p><p>அக்கணம் ஈட்டிய<br />ஆதாரம் அனைத்தையும்<br />சிக்கனம் மூலம்<br />சேமித்தார்;<br />மெய்ப்பொருள் வாழ்வில்<br />மேம்பட &#8211; சேமிக்கும்<br />கைப்பொருள் போதுமென<br />காமித்தார்;</p><p>பெரியம்மா!</p><p>அயற்சிப் பிடியில்<br />அகப்படாமல் &#8211;<br />முயற்சிப் பாதையில்<br />முறை கெடாமல் &#8211;<br />நில்லாமல் ஓடும்<br />சத்ய நதி;<br />நிஜப்பெயர் என்ன?<br />சரஸ்வதி;</p><p>அவதாரம்<br />ஆனை மலை<br />அடிவாரம்;</p><p>பேசும் போதே &#8211;<br />புன்னகை ஊடே &#8211;<br />கொஞ்சலிலே குழைப்பார்<br />கொங்கு நடையை; அவரிடம்<br />தமிழ்மொழிக் காணாது<br />தங்கு தடையை;</p><p>சொல்லும் சொற்களைச்<br />சூழும் நயம்; பிறர்<br />வரவை நம்பாமல்<br />வாழும் சுயம்;</p><p>பிள்ளைகள் வளரும் முன்<br />பெரியப்பா &#8211;<br />வானழைத்த உடனே<br />வையம் நீங்க&#8230;<br />தலைவனின் கடமையைத்<br />தலைவியும் &#8211;<br />தான்கொண்ட பொறுப்பெனத்<br />தலைமேல் தாங்க&#8230;<br />கொழுநனுக்குப் பின்னும் &#8211; கொழு<br />கொம்பிழந்த முல்லை &#8211; தான்<br />கொண்டிருந்த கொள்கையிலே<br />பின்வாங்கவில்லை;</p><p>ஆம்!<br />இயல்பாகவே &#8211;<br />இடை விடாது &#8211; உறுதி<br />இடர்ப்படாது &#8211; இறுதி<br />எட்டிவிடும் அவர்<br />எடுத்த பணி;<br />எடுத்தது முடிவு &#8211;<br />எட்டிய பின்பே &#8211;<br />ஆரம்பம் ஆகும்<br />அடுத்த பணி;</p><p>தீர்க்கமே அவரைத்<br />தீயாய் இயக்கும்; அவர்<br />திடத்தை அவையோ<br />தினமும் வியக்கும்;</p><p>வியப்பு வலையில்<br />வீழ்ந்து விடாமல், <br />எவரேனும் கருத்து &#8211;<br />எடுத்துரைத்தால் அவர் &#8211;<br />அகவை அறிவை<br />ஆய்ந்து விடாமல்,<br />செருக்கை வைப்பார்<br />சிரிப்புச் சிறையில்; அங்குத்<br />தலைக்கனம் போகும்<br />தானாய்த் தரையில்;</p><p>வாழும் வரையில் &#8211;<br />நாளும் உரையில் &#8211;<br />கன்னித் தமிழைக் &#8211;<br />கற்பிக்கும் முறையில் &#8211;</p><p>வியந்து இயற்கையை &#8211;<br />வேண்டிக் கொள்கிறேன் &#8211;<br />அதிகரிக்க வேண்டும் அவர்<br />அகவை எண்களில்; ஒருவர்<br />மூப்பதைக் கொன்று &#8211; தனைக்<br />காப்பதைக் கண்டு &#8211; சுனைத்<br />தானாய் ததும்பு என்<br />தமிழ்த்தாய்க் கண்களில்;</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/periyamma/">சரஸ்வதி பெரியம்மா!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சநாதனம்!</title>
		<link>https://kavirasan.com/sanatana-dharma/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 20:56:58 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<category><![CDATA[#katturaigal #கட்டுரைகள் #tamil #தமிழ் #தமிழ்_கட்டுரைகள் #kallacharayam]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4655</guid>

					<description><![CDATA[<p>  &#8220;எனக்குக் கடவுள் மேல் பயமில்லை. கடவுளை நம்புகிறவர்கள் மேல் தான் பயம்&#8221; &#8211; ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் &#8216;மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்&#8217; என்று உதயநிதி சொன்னது தான் இன்று வலதுசாரிகள் அனைவருக்குமான பேசுபொருள். அவர் என்ன சொன்னார், சொன்னது சரியா தவறா என்றெல்லாம் ஆராயாமல், அவர் மீது அவதூறு பரப்பத் தொடங்கியாயிற்று. அவர் தேர்ந்தெடுத்த சொற்களை ஆராய்ந்தால் அவர் சொல்ல வந்த கருத்தின் பொருள் புரியும். அதற்கு முன் சனாதனம் என்றால் என்ன? நம் [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/sanatana-dharma/">சநாதனம்!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4655" class="elementor elementor-4655">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-429109c elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="429109c" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-bdcfcb5" data-id="bdcfcb5" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-b17e2ef elementor-widget elementor-widget-image" data-id="b17e2ef" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="771" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/05/file_00000000837471f49d94d1a9066fc4b5-1024x771.png" class="attachment-large size-large wp-image-4666" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/05/file_00000000837471f49d94d1a9066fc4b5-1024x771.png 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/05/file_00000000837471f49d94d1a9066fc4b5-300x226.png 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/05/file_00000000837471f49d94d1a9066fc4b5-768x578.png 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/05/file_00000000837471f49d94d1a9066fc4b5-200x151.png 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/05/file_00000000837471f49d94d1a9066fc4b5.png 1445w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-ae3bbe0 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="ae3bbe0" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-1247547" data-id="1247547" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-f8394bd elementor-widget elementor-widget-text-editor" data-id="f8394bd" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p> </p><p><em><strong>&#8220;எனக்குக் கடவுள் மேல் பயமில்லை. கடவுளை நம்புகிறவர்கள் மேல் தான் பயம்&#8221;</strong></em></p><p><em><strong>&#8211; ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ்</strong></em></p><p>&#8216;மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்&#8217; என்று உதயநிதி சொன்னது தான் இன்று வலதுசாரிகள் அனைவருக்குமான பேசுபொருள். அவர் என்ன சொன்னார், சொன்னது சரியா தவறா என்றெல்லாம் ஆராயாமல், அவர் மீது அவதூறு பரப்பத் தொடங்கியாயிற்று. அவர் தேர்ந்தெடுத்த சொற்களை ஆராய்ந்தால் அவர் சொல்ல வந்த கருத்தின் பொருள் புரியும்.</p><p>அதற்கு முன் சனாதனம் என்றால் என்ன?</p><p>நம் ஊரில் அன்றாடம் கோவிலுக்குச் செல்லும் சக இந்துக்களிடம் கேட்டால், &#8216;தெரியாது&#8217; என்பதே அவர்கள் சொல்லும் பதிலாய் இருக்கும். மூச்சுக்கு முந்நூறு முறை அதைப் பயன்படுத்தும் வடக்கிடம் கேட்டால் கூட, &#8216;அழிக்க முடியாத ஒன்று&#8217;, &#8216;நிலைத்திருப்பது&#8217;, &#8216;வாழ்வியல் முறை&#8217; என்றெல்லாம் ஓரிரு சொற்களில் அருஞ்சொற்பொருள் சொல்வார்களேயன்றி, அதை விளக்க முற்படமாட்டார்கள். காரணம் அவர்களுக்கும் அது அவ்வாறே சொல்லப்பட்டிருக்கும். எப்படி வேதம் ஐயாயிரம் ஆண்டுகள் செவி வழி சொல்லப்பட்டது என்று ஆதாரமின்றிப் பரப்புகிறார்களோ அப்படித்தான் இதுவும்.</p><p>‘சனாதன தர்மம்’ என்னும் பதமே பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் உருவானது என்று கூறுகிறார் இந்து மத ஆய்வாளர் பேராசிரியர் ஆட்ரே ட்ரஷ்கே(Audrey Truschke). வேதங்களிலோ அல்லது உபநிடதங்களிலோ சனாதனம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், வேத காலங்களில் அதற்கு ஆதரவாக அல்லது எதிராகச் செயல்பட்ட எந்தத் தத்துவப் பிரிவிலும் கூட அதைப்பற்றிக் கூறப்படவில்லை என்றும் விளக்குகிறார். ஆக, அந்தச் சொல் அண்மையிலேயே புழக்கத்தில் உள்ளது என்பது தெளிவாய்ப் புலப்படுகிறது.</p><p>இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு மொழிகளால், இனங்களால், நம்பிக்கை முறைகளால் நிறைந்தது. ஒவ்வொரு இனக் குழுவுக்கும், ஒவ்வொரு மொழிகளுக்கும் வெவ்வேறு வாழ்க்கை முறை, வெவ்வேறு குறுந்தெய்வங்கள். வைணவம், சிவம், சக்தி மார்க்கம், சூரிய மார்க்கம் என்று எத்தனையோ பிரிவுகள் இங்கே தனித் தனியாய் இயங்க, எல்லோருக்கும் ஓரிரு பொதுப் பழக்கம் மட்டுமே இருந்தது. இந்தியத் துணைக்கண்டத்தை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள், ஆபிரஹாமிய மதங்கள், புத்த மதம், ஜைன மதம் அன்றி இதர எல்லாப் பிரிவுகளையும்(சிறு தெய்வ வழிபாட்டினர் உட்பட) ஒரு கட்டத்திற்குள் அடைத்து அதற்கு இந்து மதம் என்று பெயரிட்டனர். இந்நாளில் கிறுத்துவத்திற்கு மதம் மாறும் இந்துக்கள் சிலர் எப்படி இயேசுவுக்குக் காவடித் தூக்குகிறார்களோ, அப்படித் தான் இரு வேறு இனங்களிடம் பொதுப்பழக்கங்கள் பரவத் தொடங்கியது. நம் கொற்றவை காளி ஆனாள். நம் முருகன் ஸ்கந்தன், சுப்ரமணியன், ஸ்வாமிநாதன் ஆனான். மெல்ல மெல்ல எல்லாப் பிரிவுகளும் இந்து மதம் என்னும் ஒற்றைக் குடைக் கீழ் உட்காரத் தொடங்கியது. நாமும் வைணவத்தின் வர்ணங்களுக்குள் வாழப் பழகிக் கொண்டோம். அண்மையில் யூட்யூபில் பேசிய ரங்கராஜ் பாண்டே கூட இந்து மதம் தான் சனாதனம், சனாதனம் தான் இந்து மதம் என்று குறிப்பிட்டார். சனாதனம் என்னும் சொல் எல்லா இந்துக்களுக்கும் ஏற்புடையதானதா? சனாதனம் இந்து மதத்தில் ஒரு பங்கு. இந்து மதம் முழுவதும் சனாதனத்தால் ஆனதன்று. வைணவர்களால் மட்டுமே மிகுதியாய்ப் பயன்படுத்தப்பட்டு இன்று எல்லோருக்குமான சொல்லாகி நிற்கிறது.</p><p>சனாதனத்திற்கு ஆதரவாய்க் களமிறங்கி, உதயநிதிக்கு எதிராகப் போராடிய கூட்டம் எல்லாம், &#8216;வேரூன்றி இருக்கும் ஒரு பண்பாட்டைப் பற்றி எப்படி அவதூறு பேசலாம்&#8217; என முழங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். வேரூன்றி இருக்கும் பண்பாடு என்று உலகில் எதுவுமே இல்லை. பண்பாடு என்பதே காலத்திற்கு ஏற்றாற்போல் மாறும் ஒன்று தான். ஆதியில் சரியென்று சொல்லி, பின் தவறென்று ஒப்புக் கொண்ட கதைகளின் வரலாறுகளைச் சொன்னால் வாய் வலிக்கும். பூமியே சூரியக் குடும்பத்தின் மையம் என்ற கிறுத்துவ மதக் கூற்றை எதிர்த்து, &#8216;சூரியனே மையம்&#8217; என்று முழங்கி ரோம் நகர வீதியில் தீக்கு இரையானார் ஜியர்டீனோ புருனோ(Giordano Bruno). அறிவியலின் வளர்ச்சியால் அவர் சொன்னது சரியென்று மெய்ப்பிக்கப்பட, செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த கிறுத்துவ மதகுருமார்கள் அதே ரோம் நகர மையத்தில் புருனோவுக்கு சிலை ஒன்றை எழுப்பினார்கள்.</p><p>மதங்களைப் போல அறிவியலிலும் இப்படித் தவறான கருத்துகள் சொல்லப்பட்டுப் பின் சரியான கூற்றைக் கண்டுபிடிப்பதுண்டு. ஆனால் இரண்டுக்கும் ஒரே ஒரு வேறுபாடு தான். அறிவியல் சான்றுகளால் ஆனது(Science is based on facts). தான் கண்டுபிடித்த ஒன்றையே பின்னாளில் தவறென்று நிறுவும் அறிவியல், அந்தத் தவறின் மீது ஏறித் தான், சரி என்ற நிலையை அடைந்திருக்கும். இன்றைய சரி, நாளை தவறாகலாம். ஆனால் இரண்டிற்குமான இடைவெளி மிகவும் குறைவு. சரியை அடைய உதவியதே இந்தத் தவறு தான். புருனோ சொன்ன கருத்தின் மீது ஏறி நின்றதனால் தான் விசையூர்ப்பு நியூட்டனுக்கு விளங்கி இருக்கும். இப்படி ஒவ்வொரு படியாய் ஏற்றி விடும் அறிவியல் ஒரு படிநிலை முறை. ஆனால், மதங்கள் அப்படி அல்ல, நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட கட்டிடம்(Religion is based on faith).</p><p>இந்து மதத்தில் கூட, சதி, குழந்தைத் திருமணம், தேவதாசி முறை, நரபலி, தீண்டாமை, கைம்பெண் மறுமணம் என எத்தனை எத்தனை முறைகள் காலத்திற்கு ஒவ்வாததெனக் கைவிடப்பட்டுள்ளன? வேரூன்றி இருக்கும் பண்பாடு இவையனைத்தையும் விடாமல் கடைப்பிடித்திருக்கல்லவா வேண்டும்? காலத்திற்கு ஏற்றார்போல் மாறாத மொழியோ மதமோ பண்பாடோ கரை காணாது.</p><p>சரி தலைப்புக்கு வருவோம். சனாதனம் என்றால் வேரூன்றி இருக்கும் பண்பாடு அல்ல, பிறகென்ன? சுற்றி வளைத்து அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்று தான். அடிமைத்தனத்தால் அடித்தளம் இடப்பட்ட &#8216;வர்ணாசிரமம்&#8217;. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை வகுத்துத் தொழில் முறைக்குள் தள்ளும் ஒரு முறையை எப்படி இக்காலத்திலும் ஏற்க முடியும்?</p><p>தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என ஒரு கட்டமைப்பை உருவாக்கி முன்பொரு காலத்தில் ஏய்த்துக் கொண்டிருந்த கூட்டம், இக்காலத்திலும் அதை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. முடியாது என்று முரண்படுவோர் மேல் அவதூறுச் சேற்றை அள்ளி இரைக்கிறது. பிறப்பின் அடிப்படையில் வரும் பிரிவினையை, பெருமை என்று வடக்கு நினைக்கலாம். ஆனால் அதை எதிர்ப்பதில் தெற்கு மிகவும் தெளிவாய் இருக்கிறது. சாதிய முறையை, ஸ்மிருதியை, &#8216;சனாதன தர்மம்&#8217; &#8216;இந்து மதம்&#8217; என்று வெவ்வேறு பெயர்களில் விதைக்க முற்பட்டாலும் மூலம் என்னவோ பிரிவினையும், தகுதி என்பது திறமையால் அல்ல பிறப்பால் தான் அளக்கப்படுகிறது என்பதும் தான். அவர்களுக்கெல்லாம் பதிலாய் ஐயனின் குறளைத் தான் சொல்ல வேண்டும்.</p><p>பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா<br />செய்தொழில் வேற்றுமை யான் (972)</p><p>பிறப்பு எல்லோர்க்கும் ஒன்று தான். செய்யும் தொழிலில் உள்ள வேறுபாடுகளாலும் சிறப்பு ஒவ்வாது. அவரவர் செய்யும் தொழிலில் காட்டுகிற &#8216;திறமையில்&#8217; மட்டுமே வேறுபாடு காண முடியும் என்கிறது குறள். ஏனைய மதங்களில் சாதிகள் இல்லையா என்றால், அங்கும் பிரிவினைகள் இருக்கிறது. ஆனால் பிறமதங்களில் எந்த மதநூலும் இப்படி ஒருவர் மேலே ஒருவர் கீழே என்று உரைப்பதில்லை. ஆண்டவன் பார்வையில் அனைவரும் சமம். பிரிவினைகள் எல்லாம் மனிதன் ஏற்படுத்தியது. அதிலும் அவை வெவ்வேறு முறைகளைப் பின்பற்றும் பிரிவுகள்(இந்து மதத்தில் உள்ள சைவ வைணவ அமைப்புகளைப் போல). ஆனால் வேதம் சொல்லும் வர்ணாசிரமமோ ஒருவர் மேலே, ஒருவர் கீழே எனச் சொல்லும் படிநிலை. அது தான் இங்கே உடைக்கப்பட வேண்டும். இந்து என்று சொல்வதில் இங்கே எவருக்கும் எந்த வருத்தமோ வெறுப்போ இல்லை, சிக்கல் எல்லாம் மேல் கீழ் என மக்களைப் பிரிக்கும் சனாதனத்தில் தான். பெரும்பாலும் இப்பதத்தையே பயன்படுத்துவது வைணவ முறையைப் பின்பற்றும் சிலர் தான். சைவர்களிடம் இதைக் காண்பது அரிதிலும் அரிது.</p><p>விருப்பம் இருப்பவர்கள் இதைப் பின் பற்றற்றும் என விலக்களித்தால் எந்தக் குழப்பமும் இல்லை. நாம் அனைவரும் ஒரே மதம், நீயும் என் முறையைப் பின் பற்று எனக் கட்டளையிடும் போது தான் கலவரங்கள் வெடிக்கிறது. &#8216;ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்&#8217; என உரைத்து, ஊடுருவி நம்மோடு கலந்த ஒரு பிரிவு, படையலுக்காக நாம் பலியிடும் முறையை முதலில் கேள்வி கேட்டது. நாட்களில் சைவத்தை வலியுறுத்தி அசைவத்தை மெல்ல அன்னியம் ஆக்கியது. முதலில் வழிபட வேண்டிய முதன்மைக் கடவுள் என்று தங்கள் கடவுளைக் கைகாட்டி நம் நாட்டார் தெய்வங்களைச் சிறு தெய்வம் என்றது. கடவுளர்கள் சமஸ்கிருத மந்திரங்களால் தான் வலிமை பெறுவார் என்று கட்டுக்கதைகளால் நம் கண்களைக் கட்டியது. நாகரிகப் படுத்துகிறோம் என்ற பெயரில் வழிபாட்டு முறைக்குள் வரைமுறைகளை வகுத்தது. புனிதம் என்ற சொல்லைப் புழக்கத்தில் புகுத்தியது. அவர்கள் நம்பிக்கையில் கடவுளர்களைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் நம் வழக்கம் அப்படியா என்ன? இதற்குப் பதிலாய் கண்மணி ராசாவின் கவிதை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும்.</p><p><em><strong>&#8216;செங்கமலத்திற்கு</strong></em><br /><em><strong>எல்லாமே</strong></em><br /><em><strong>மாரியாத்தாதான்.</strong></em></p><p><em><strong>அஞ்சாயிரம் அசலுக்கு</strong></em><br /><em><strong>ஆறு வருசமா</strong></em><br /><em><strong>மாசா மாசம் அஞ்சு வட்டி</strong></em><br /><em><strong>கட்டுற கதைய</strong></em><br /><em><strong>பேச்சியப்பன் சொல்லக்கேட்டவ</strong></em><br /><em><strong>&#8220;கலங்காதடா</strong></em><br /><em><strong>அவன மாரியாத்தா கேப்பா..&#8221;</strong></em><br /><em><strong>என்றாள்.</strong></em></p><p><em><strong>டி.வி.யில</strong></em><br /><em><strong>வந்த செய்தியைப் பாத்துட்டு</strong></em><br /><em><strong>&#8220;நாசமா போறவனுக</strong></em><br /><em><strong>சனங்க</strong></em><br /><em><strong>குடிக்கிற தண்ணியிலயா</strong></em><br /><em><strong>பீயக் கலப்பானுக&#8230;</strong></em><br /><em><strong>அவனுகள மாரியாத்தா கேப்பா..&#8221;</strong></em><br /><em><strong>என்றாள்.</strong></em></p><p><em><strong>வீட்ட எழுதி வாங்கிட்டு</strong></em><br /><em><strong>பெத்த அப்பன</strong></em><br /><em><strong>வெளிய தள்ளுனவன</strong></em><br /><em><strong>காறித் துப்பி</strong></em><br /><em><strong>&#8220;பேதியில போவ</strong></em><br /><em><strong>உன்ன</strong></em><br /><em><strong>மாரியாத்தா கேப்பா.&#8221;</strong></em><br /><em><strong>என்றாள்.</strong></em></p><p><em><strong>காசு குடுத்தாதேன்</strong></em><br /><em><strong>கையெழுத்து போடும்</strong></em><br /><em><strong>விஏஓ வ</strong></em><br /><em><strong>&#8220;கட்டையில போவ</strong></em><br /><em><strong>மாரியாத்தா கேப்பா..&#8221;</strong></em><br /><em><strong>என்றாள்.</strong></em></p><p><em><strong>ஒரு</strong></em><br /><em><strong>மத்தியான வெயில்ல</strong></em><br /><em><strong>மாரியாத்தா பீடத்துல</strong></em><br /><em><strong>தாயக்கட்டம் போட்டவளிடம்</strong></em><br /><em><strong>&#8220;ஏந்தா</strong></em><br /><em><strong>எதுக்கெடுத்தாலும்</strong></em><br /><em><strong>மாரியாத்தா கேப்பாங்கிறியே..</strong></em><br /><em><strong>அவ கேட்கலன்னா&#8230;?</strong></em><br /><em><strong>என்றவனிடம்</strong></em><br /><em><strong>சடாரென</strong></em><br /><em><strong>உக்கிரமாகி&#8230;</strong></em></p><p><em><strong>&#8220;கேட்காம</strong></em><br /><em><strong>போவட்டும்</strong></em><br /><em><strong>மானங்கெட்ட</strong></em><br /><em><strong>மாரியாத்தாவ</strong></em><br /><em><strong>நான் கேட்பேன்..&#8221;</strong></em><br /><em><strong>என்றாள்&#8230;.</strong></em><br /><em><strong>ஒரு காயை வெட்டிய படி&#8217;</strong></em></p><p>இப்படித் துக்கத்தில் கேள்வி கேட்கும் துணிவோ, உளைச்சலில் எதிர்க்கும் உரிமையோ, வசை பாடும் வழக்கமோ சத்தியமாய் சனாதனத்தில் சாத்தியமே இல்லை. அங்கே, இட்டக் கட்டளைக்கு இசைவு மட்டும் பதில்.</p><p>&#8216;இவையெல்லாம் சனாதனம் இல்லை, சனாதனம் என்றால் இன்னது தான்&#8217; என்று போதிய விளக்கம் கொடுக்கும் பட்சத்தில் அதை ஏற்பதில் நமக்கும் இடரொன்றும் இல்லை. ஆனால் இன்னும் இந்து மதமே சனாதனம் என இட்டுக்கட்டி இதிகாசத்தின் பின் இழுக்கும் கதையே இங்குத் தொடருமாயின், எள்ளளவும் அதை ஏற்க மறுப்போம். ஏனெனில் நாம் சனாதானம் விரும்பும் இந்துத்துவா அல்ல, சமாதான விரும்பும் இந்துக்கள்.</p><p>தமிழ்ச் சமூகம் சாதி, மதம், இனம், மொழி என அனைத்தும் கடந்த பொதுநெறியை நம்பியது. அதைத் தான் வள்ளலார் &#8216;சன்மார்க்கம்&#8217; என்றார். சன்மார்க்கம் சனாதனத்தின் எதிர்முனை. வாழ்வியல் முறை என்று ஒன்று இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம் வேண்டுமானால் சனாதனத்தின் கைப்பிடித்து சந்தோசமாய் நடக்கட்டும். சன்மார்க்கத்தைப் பின்பற்றி ஒரு வாழ்வியல் முறைக்குள் வாழும் நமக்கெல்லாம் சனாதனம் தேவையே இல்லை. ஆம்! தேவ பாசைக்குச் செவி சாய்க்கும் தெய்வங்கள் எல்லாம் வடக்கிலேயே வாசம் செய்யட்டும், நமக்குக் கூப்பிட்டால் குரல் கொடுக்கும் முனியனும், ஐயனாரும், சுடலை மாடனும் கருப்பனும் போதும்.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/sanatana-dharma/">சநாதனம்!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டார்ட்மண்ட்</title>
		<link>https://kavirasan.com/dortmund-diary/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Apr 2026 21:03:37 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<category><![CDATA[#katturaigal #கட்டுரைகள் #tamil #தமிழ் #தமிழ்_கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4631</guid>

					<description><![CDATA[<p>இந்த வாரம் சனிக்கிழமை டார்ட்மண்ட் செல்லலாமா என அறையில் தங்கி இருக்கும் விக்னேஷ் கேட்ட பொழுது அரை மனதுடன் தான் சம்மதித்தேன். ஊர் சுற்றிப் பார்க்கப்போவதில் உள்ளப் பெருந்தொல்லையே அதிகாலை எழுவது தான். முந்தைய நாள் எவ்வளவு முயன்றும் படுக்க மணி பன்னிரண்டு ஆனது. காலை நான்கு மணிக்கே பாலாஜி அழைத்து எழுப்பிவிட, குளித்துக் கிளம்பும் போது மணி ஐந்தரை. செல்லும் வழியில் நிறுத்தக்குறியீட்டுக்காகத் தேநீர் தயாரித்து ப்ளாஸ்கில்(flask) ஊற்றி எடுத்துக் கொண்டோம். ராம் அண்ணாவை ஏற்றிக் [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/dortmund-diary/">டார்ட்மண்ட்</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4631" class="elementor elementor-4631">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-a28644a elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="a28644a" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-ac40997" data-id="ac40997" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-9747fa7 elementor-widget elementor-widget-image" data-id="9747fa7" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230402296-1024x1024.jpg" class="attachment-large size-large wp-image-4641" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230402296-1024x1024.jpg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230402296-300x300.jpg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230402296-150x150.jpg 150w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230402296-768x768.jpg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230402296-1536x1536.jpg 1536w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230402296-2048x2048.jpg 2048w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230402296-200x200.jpg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230402296-100x100.jpg 100w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-0ac6b43 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="0ac6b43" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-fdad66e" data-id="fdad66e" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-be713f5 elementor-widget elementor-widget-image" data-id="be713f5" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230439417-1-1024x1024.jpg" class="attachment-large size-large wp-image-4640" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230439417-1-1024x1024.jpg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230439417-1-300x300.jpg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230439417-1-150x150.jpg 150w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230439417-1-768x768.jpg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230439417-1-1536x1536.jpg 1536w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230439417-1-2048x2048.jpg 2048w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230439417-1-200x200.jpg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230439417-1-100x100.jpg 100w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-1a0c0ff elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="1a0c0ff" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-0caf3bd" data-id="0caf3bd" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-b59b1fd elementor-widget elementor-widget-image" data-id="b59b1fd" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_231235409-1024x1024.jpg" class="attachment-large size-large wp-image-4634" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_231235409-1024x1024.jpg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_231235409-300x300.jpg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_231235409-150x150.jpg 150w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_231235409-768x768.jpg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_231235409-1536x1536.jpg 1536w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_231235409-2048x2048.jpg 2048w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_231235409-200x200.jpg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_231235409-100x100.jpg 100w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-ff28739 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="ff28739" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-8460b26" data-id="8460b26" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-a32f12c elementor-widget elementor-widget-text-editor" data-id="a32f12c" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>இந்த வாரம் சனிக்கிழமை டார்ட்மண்ட் செல்லலாமா என அறையில் தங்கி இருக்கும் விக்னேஷ் கேட்ட பொழுது அரை மனதுடன் தான் சம்மதித்தேன். ஊர் சுற்றிப் பார்க்கப்போவதில் உள்ளப் பெருந்தொல்லையே அதிகாலை எழுவது தான். முந்தைய நாள் எவ்வளவு முயன்றும் படுக்க மணி பன்னிரண்டு ஆனது. காலை நான்கு மணிக்கே பாலாஜி அழைத்து எழுப்பிவிட, குளித்துக் கிளம்பும் போது மணி ஐந்தரை. செல்லும் வழியில் நிறுத்தக்குறியீட்டுக்காகத் தேநீர் தயாரித்து ப்ளாஸ்கில்(flask) ஊற்றி எடுத்துக் கொண்டோம். ராம் அண்ணாவை ஏற்றிக் கொண்டு பாலாஜி எங்கள் வீட்டிற்கு வருவதற்குள் வானம் வெளுத்திருந்தது. ஆறு மணி வெளிச்சம் எல்லாம் கோடை தொடக்கத்தின் அறிகுறி. நான், விக்னேஷ், பாலாஜி, ராம் அண்ணா, நால்வரையும் ஏற்றிக் கொண்டு கார் ஜெர்மனியை நோக்கி விரைந்தது. முந்தைய நாள் இரவுத் தூக்கமின்மை, அதிகாலை வயிற்றுப் பிரட்டல் காரணமாக நானும் விக்னேஷும் ஏறிய அடுத்த நொடியே உறங்கிப் போக, ஜெர்மனி வந்து தான் எழுந்தோம். இடையில் இருநூறு வேகம் தொட்டதெல்லாம் பாலாஜி சொல்லி செவி வழி கேட்டுக் கொண்டாலும், ஒரு முறையாவது அதை நேரில் காண வேண்டும் என்று ஏக்கம் உள்ளுக்குள் எழுந்தது. ஜெர்மனியில் முந்நூறு கிலோமீட்டர் சாலைகள் இப்படி வேகக்கட்டுப்பாடின்றி இயங்கும் என விக்னேஷ் சொன்னது கூடுதல் தகவல்.</p><p>நாங்கள் வந்து வாசலில் வண்டியை நிறுத்திய போது மணி எட்டு ஐம்பது. முந்தைய நாள் கோவில் நிர்வாகத்தை அழைத்துக் கேட்ட பொழுது ஒன்பது மணிக்குக் கோவில் திறக்கப்படும் என்று கூறியிருந்தார். அதைக் கோவில் என்று சொல்வதற்கே மனம் வரவில்லை. தகரத்தால் ஆன ஆள் நடமாட்டமில்லாத பழைய ஆலையைப் போலத்தான் காட்சி அளித்தது. ஆலையை ஆலயமாக்க அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒரு சிகப்பு வெள்ளை வண்ணப்பூச்சு மட்டும் தான். முன்னால் எழுப்பப்பட்டிருந்த ஒரு சிறு கட்டிடத்தைக் கழித்தால் அதை ஆலயம் என்று நம்புவது மிகவும் கடினம். நேற்று அழைத்த எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள, இன்னும் சில நிமிடங்களில் வருவதாய் சொன்னது அந்த இலங்கைக் குரல். அயல்நாடுகளில் இருக்கும் பல கோவில்கள் இலங்கைத் தமிழர்களால் எழுப்பப்பட்டது தான் எனச் சென்ற முறை சென்றிருந்த ஹாம்(Ham) கோவில் நிர்வாகம் கூறியதை எண்ணிக் கொண்டிருக்க, ஒன்பது பத்துக்கு உள்ளே நுழைந்த காரிலிருந்து ஓர் ஐம்பது வயதுக்காரர் கீழிறங்கி, &#8216;ஹலோ&#8217; என்று என்னை நோக்கி வந்தார்.</p><p>நான், &#8216;வணக்கம்&#8217; என்று தமிழில் தொடங்க,</p><p>&#8220;வணக்கம் , வணக்கம்&#8221;, என்று தமிழுக்கு மாறினார். அருகி வந்தவரிடம் நான் பெயரைச் சொல்லி அறிமுகம் ஆனதும், அவரும் &#8216;சபாரத்தினம்&#8217; என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். &#8220;எங்கிருந்து வார்றீங்க, பெல்ஜியமா?&#8221; என்றார்.</p><p>&#8220;ஆமா, நீங்க?&#8221;</p><p>&#8220;நான் இங்க தான். சொந்த ஊர் இலங்கை&#8221;, என்று மற்றவர்களோடும் கை குலுக்கி அறிமுகமாகி, உள்ளே சென்று கோவிலைத் திறந்தார். அவர் வந்த சில நிமிடங்களில் இன்னொருவரும் வந்து கருவறையைச் சுத்தம் செய்யத் தொடங்க, அவர் தான் ஐயராக இருக்கக் கூடும். வந்தவர் உடைமாற்றி சபாரத்தினத்திடம் பேசிக் கொண்டிருக்க, நாங்கள் அங்கிருந்த அட்டவணையை நோட்டமிட்டோம். அதில் திருமணம் நாள் என்று எழுதியிருப்பதைக் குறிப்பிட்ட விக்னேஷ்,</p><p>&#8220;இங்க திருமண நாள்னு எல்லாம் தனி நாள் இருக்கு பாரேன். இங்கயே கல்யாணம் எல்லாம் செய்வாங்க போல&#8221; என்றான்.</p><p>&#8220;நமக்கு தான இது வந்த நாடு. இலங்கையிலருந்து வந்து இங்கயே செட்டில் ஆனவங்களுக்கு இனி இது தானத் தாய்நாடு&#8221;, என்று சொல்லி முடிக்கும் முன் அவன் அதை ஆமோதிக்க, ஜூன் மாதம் வரப்போகும் தேர்த் திருவிழாவிற்கு வரமுடியுமா எனக் கணக்கிடத் தொடங்கினோம். சபாரத்தினமும் ஐயரும் எல்லாவற்றையும் எடுத்து வைக்கும் பொழுது, அதைப் பார்த்துக் கொண்டே இருப்பது ஏதோ போல் இருப்பதாகக் கருதி வெளியே வந்து, கொண்டு வந்த தேநீரைப் பகிர்ந்துண்டோம். தேநீர் குளிருக்குக் கொஞ்சம் இதமாய் இருந்தது. நாங்கள் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த நேரம், ஒருவர் பின் ஒருவராகக் கூட்டமும் வரத் தொடங்கியது. எங்கோ கிளம்பிச் சென்ற சபாரத்தினம் செல்லும்முன் எங்களிடம், &#8216;உள்ளே செல்லுங்கள். பூசைத் தொடங்கப் போகிறது&#8217; என்றார். நாங்கள் வேகவேகமாக உள்ளே செல்ல, ஓர் இருபது பேர் கருவறைத் திறக்கப் போவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும் கூட்டத்துடன் எங்களை இணைத்துக் கொள்ள, வழிபாடு தொடங்கியது. ஒவ்வொரு கடவுளையும் ஐயர் சுற்றி வர அவர் பின்னாலேயே மொத்தக் கூட்டமும் சென்றது. வரிசை மாறாமல் நானும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல, எல்லோர்க்கும் போல எனக்கும் திருநீறு பூச வந்த ஐயர், நெற்றியில் விழுந்த முடியை வலக்கையின் கடைசி விரலால் தூக்கி, கட்டை விரலால் பூசிவிட்டார். நம்பிக்கையின்மையில் வளர்ந்த நாத்திக எண்ணம், அதை அழிக்கச் சொல்லி எனக்கு ஆணையிட,</p><p><em><strong>&#8216;மழை வேண்டி</strong></em><br /><em><strong>மாரியம்மனுக்கு</strong></em><br /><em><strong>1008 இளநீர் அபிஷேகம்.</strong></em><br /><em><strong>காலி இளநீர்க் காய்களை</strong></em><br /><em><strong>வீட்டுக்குக் கொண்டு போகும் சிறுமி</strong></em><br /><em><strong>என் காலில் </strong></em><br /><em><strong>இளநீர் சிந்திப் போகிறாள்</strong></em><br /><em><strong>ஜில் என்று&#8217;</strong></em></p><p>முகுந்த் நாகராஜனின் கவிதையை உடனழைத்து, அவர் பூசிய விதத்தில் பூரித்த மனம், வேண்டாம் என்றதற்கு விதிவிலக்கு வாங்கியது. கோவிலை மெல்ல நோட்டமிட்டேன். ஒவ்வொரு கடவுளிடமும் ஒரு சிலர் கூட்டம் கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் முகத்திலும் அத்தனை வேண்டுதல்கள். ஒவ்வொரு கரத்திலும் ஆயிரம் கோரிக்கைகள். நம்பிக்கையை எல்லாம் கடந்து எல்லோரும் வேண்டி நிற்பதைப் பார்க்கவே வியப்பாக இருந்தது. கடல் கடந்து வந்த எத்தனை இதயங்களுக்கு இந்தக் கோவில் இளைப்பாறக் கொஞ்சம் இடம் கொடுக்கிறது?</p><p>உடன் வந்த மூவரும் உள்ளே அமர்ந்திருந்த கணம், பூசை ஒருவாறு புழுக்கத்தைக் கொடுக்க, கொஞ்சம் நடக்கலாம் என முடிவு செய்து வெளியேறினேன். ஒவ்வொரு முறை ஜெர்மனி வரும்பொழுதும் தவிர்க்க முடியாமல் தானாய் வரும், &#8216;ஜெர்மனியின் செந்தேன் மலரைப்&#8217; பாடலை நான் கொஞ்சம் சத்தமாகவே பாட, அங்கே களைகளை நீக்கி பூச்செடிகளைச் சுத்தம் செய்பவர் என்னைப் பார்த்து ஒரு சிறு புன்னகையைச் சிந்திவிட்டு மீண்டும் தன் பணியில் ஆழ்ந்தார். அவர் அருகில் சென்று,</p><p>&#8220;தமிழா?&#8221;, என்ற என்னை ஏறெடுத்துப் பார்த்தவர்,</p><p>&#8220;இங்கு எல்லோரும் தமிழ் தான்&#8221;, என்றார். ஐம்பது வயதிருக்கும். இலங்கைக்காரர். &#8220;இந்தியாவா? இலங்கையா?&#8221;, என்று பதில் கேள்வி வந்தது.</p><p>&#8220;தமிழ்நாடு&#8221;</p><p>&#8220;தமிழ் நாட்டுல எங்க?&#8221;</p><p>&#8220;கும்பகோணம்&#8221;</p><p>&#8220;இந்தக் கோவிலக் கட்டுனது உங்க ஊர்க்காராவங்க தான்&#8221;, என்று கோபுரத்தைக் காட்டினார். அப்படியா எனக் கோபுரத்தை ஒரு முறைப் பார்த்துவிட்டு,</p><p>&#8220;நீங்க?&#8221;, என்று அறிவினா ஒன்றை எறிந்தேன்.</p><p>&#8220;நான் இலங்கை&#8221;</p><p>&#8220;வந்து எத்தன ஆண்டு ஆச்சி?&#8221;</p><p>&#8220;முப்பத்தைந்து ஆண்டுகள்&#8221;, என்றார் அழுத்தம் திருத்தமாக.</p><p>&#8220;எண்பது போர் அப்ப வந்தீங்களா?&#8221;, பதில் சொல்லாமல் ஆம் என்பது போல் தலை அசைத்தார். இருவருக்கும் இடையில் ஒரு மௌனம்.</p><p>&#8220;படிக்கிறீங்களா வேலை பாக்குறீங்களா?&#8221;, என்று அவரே மீண்டும் தொடங்க,</p><p>&#8220;வேல பாக்குறேன். பெல்ஜியம்ல&#8221;</p><p>&#8220;அங்க இருந்து இங்க கோவிலுக்காக வந்துருக்கீங்களா?&#8221;, என்று வியப்பானவரிடம், ஆம் என்று தலையசைக்க, &#8220;தனியாவா?&#8221;, என்றார். இல்லை என்று காத்திருந்து, உடன் வந்தவர்களை கைக்காட்டினேன், விக்னேஷை மட்டும் அறிமுகம் செய்தேன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின்,</p><p>&#8220;இங்க எதாச்சும் தமிழ் கடை எதாச்சும் இருக்குமா?&#8221;</p><p>&#8220;ஓஹ், ரெனிச்சே ஸ்ட்ரா&#8230; போங்கோ&#8221;, என்றவர் சொன்னதில், ரெனிச்சே புரிந்தது. போங்கோ புரிந்தது. இடையில் உள்ள சொல் புரியாமல் நான் விழித்துக் கொண்டே இருக்க, ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தார். அவர் சொன்னதைத் தேடினால், Rheinische Straße Dortmund என்றது கூகுள். அந்த இரண்டாம் சொல்லின் உச்சரிப்பு எனக்குப் புரியாமலேயே இருக்க, மீண்டும் அவரிடம், &#8220;இங்க நல்ல ஹோட்டல் இருக்குமா?&#8221;, என்றேன்.</p><p>&#8220;இங்க எல்லாமே இருக்கு. சாப்பாட்டுக் கடை, துணிக்கடை, பள்ளிக் கூடம்&#8230;&#8221;, என்றவர் பேசிக் கொண்டே போக, கிளம்பும் வேகத்தில் அவர் சொன்னதை எளிதாகக் கடந்து அவருக்கு நன்றி சொல்லிப் புறப்படோம். &#8220;யூன் மாதம் வாருங்கள். உற்சவம் நடக்கும். மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்&#8221;, என்று எனக்கும் விக்னேஷுக்கும் விடைகொடுத்தார். அங்கிருந்து கிளம்ப மணி மதியம் பன்னிரண்டானது. பசி வேறு. ஒருவழியாக அவர் சொன்ன முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து வந்தால் அந்தத் தெருவே தமிழ் கோலம் பூண்டிருந்தது. வாசலிலேயே போர்டில் எழுதி வைக்கப்பட்ட தமிழ் உணவு வகைகள், சதீஸ் நகைப்பட்டறை, தமிழ அரங்கம், பொன் மஹால், சக்தி டெக்ஸ்டைல்ஸ், காந்தன் நகைமாடம், முடிதிருத்தக் கடை, அன்னம் உணவகம் என எங்கு நோக்கினும் தமிழ். பாரீஸில் பார்த்தது போலவே ஜெர்மனியிலும் ஒரு தமிழ் தெரு. எல்லாக் கடைகளையும் பார்க்கும் ஆர்வத்தில், தெருமுனை வரை செல்ல, முடிவில் போதி தர்மரைப் போல் காட்சி அளித்தது ஒரு சிலை. ஆனால் தாடி இருந்தது. அருகே சென்று பார்த்ததில் வியப்பிலும் வியப்பு. அது &#8216;அய்யன் திருவள்ளுவர்&#8217; சிலை. சொல்லவொண்ணா மகிழ்ச்சி. எல்லாக் கோணங்களிலும் அய்யனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு, கூகுளில் அதிக மதிப்பீடு பெற்ற ஒரு தமிழ் உணவகத்திற்குள் சென்று சாப்பிட்டோம்.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-71cfb21 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="71cfb21" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-7767569" data-id="7767569" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-d73fa0d elementor-widget elementor-widget-image" data-id="d73fa0d" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230254545-1024x1024.jpg" class="attachment-large size-large wp-image-4646" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230254545-1024x1024.jpg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230254545-300x300.jpg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230254545-150x150.jpg 150w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230254545-768x768.jpg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230254545-1536x1536.jpg 1536w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230254545-2048x2048.jpg 2048w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230254545-200x200.jpg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230254545-100x100.jpg 100w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-e48c144 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="e48c144" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-a8be111" data-id="a8be111" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-32f198d elementor-widget elementor-widget-image" data-id="32f198d" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230306016-1024x1024.jpg" class="attachment-large size-large wp-image-4645" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230306016-1024x1024.jpg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230306016-300x300.jpg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230306016-150x150.jpg 150w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230306016-768x768.jpg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230306016-1536x1536.jpg 1536w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230306016-2048x2048.jpg 2048w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230306016-200x200.jpg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230306016-100x100.jpg 100w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-24ef61b elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="24ef61b" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-8d3a4fd" data-id="8d3a4fd" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-f906c89 elementor-widget elementor-widget-image" data-id="f906c89" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230315869-1024x1024.jpg" class="attachment-large size-large wp-image-4644" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230315869-1024x1024.jpg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230315869-300x300.jpg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230315869-150x150.jpg 150w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230315869-768x768.jpg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230315869-1536x1536.jpg 1536w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230315869-2048x2048.jpg 2048w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230315869-200x200.jpg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/04/InShot_20260419_230315869-100x100.jpg 100w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-5c4c9c0 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="5c4c9c0" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-80dce1f" data-id="80dce1f" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-edaca3d elementor-widget elementor-widget-text-editor" data-id="edaca3d" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>&#8220;இந்தத் தெருல இருக்குறதே ஒரு மாரி செய்யிதுல்ல. ஏதோ நம்ம ஊருலயே இருக்க மாரி&#8230;&#8221;, என்றவனை ஆமோதித்த விக்னேஷ்,</p><p>&#8220;ஆமா. நம்ம ஊர்ல இருக்க மாரியே இருக்கு. எங்க பார்த்தாலும் தமிழ்&#8221;, என்றான். வெளியே வந்தும் அதே வியப்போடே பேசிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த முடிதிருத்தக் கடையில், &#8220;கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா?&#8221; பாடல் மிகச் சத்தமாக ஒலித்தது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று, அந்தப் பாடல் ஒலிப்பதைக் காணொளியாக்கி, &#8216;எங்கும் இளையராஜா&#8217; என்று குழுக்களில் எல்லாம் இன்பத்தைப் பகிர்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் ஸ்ரீதரன் மாமா, &#8216;இது தேவேந்திரன் இசை அமைத்த பாடல், இளையராஜா இல்லை&#8217; என்று தனிச்செய்தி அனுப்பினார். லப்பர் பந்து படத்தில், &#8220;ச்சே ராஜா ராஜா தான்ல&#8221;, என்று மெச்சிக் கொள்ளும் ஒருவனிடம், &#8220;ராஜா ராஜா தான், ஆனா இது தேவா&#8221; எனத் திருத்தும் காட்சி தான் நினைவுக்கு வந்தது.</p><p>தெருவில் கொஞ்சம் காலாற நடக்க, ஒரு கடையில் வெளியே எழுதியிருந்த சாப்பாட்டு வரிசையைச் சுட்டி, &#8220;&#8216;ர&#8217; தப்பாப் போட்டுருக்காங்க பாரு&#8221; என்றான் விக்னேஷ்.</p><p>அங்கே &#8216;பிறியாணி&#8217; என்று எழுதியிருந்தது. நம்மூர் கடைகளில் அது &#8216;பிரியாணி&#8217; தான் ஆனால் இலங்கையில்? முத்துலிங்கம் பயன்படுத்தும் &#8216;றொறன்றோ'(Toronto) நினைவில் வந்து போனது.</p><p>&#8220;இல்லடா, இது தப்பு இல்ல. இலங்கைல வல்லின றகரத்தோட பயன்பாடு அதிகமா இருக்கும். அவங்க ஒருவேளை இப்படித் தான் எழுதுவாங்களோ என்னமோ&#8221; என்றேன்.</p><p>&#8220;ஆமாண்டா. ஒருவாட்டி எங்க தமிழ் ஆசிரியர் கூட சொல்லிருக்காரு&#8221;, என்றான்.</p><p>&#8220;தமிழ் ஆசிரியர் என்ன வள்ளுவரே அப்படி தான் சொல்லிருக்காரு. ஒருவர்க்கு &#8211; இத எப்படி எழுதுவ? என்ன ரகரம் பயன்படுத்துவ&#8221;</p><p>&#8220;சின்ன ரகரம் தான். ஒருவர்க்கு&#8221;, என்று ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தான்.</p><p>&#8220;ஆனா திருவள்ளுவர் &#8216;ஒருவற்கு&#8217; அப்படின்னு தான் எழுதிருக்காரு&#8221;, என்று ஒரு திருக்குறளைக் கூகுளில் எடுத்துக் காட்டினேன்.</p><p><em><strong>&#8216;செயற்பால தோரும் அறனே ஒருவற்கு</strong></em><br /><em><strong>உயற்பால தோரும் பழி (40)&#8217;</strong></em></p><p>இருவரும் பேசிக் கொண்டே காரில் ஏற, கார் பெல்ஜியம் நோக்கிப் புறப்பட்டது.</p><p>&#8220;சாப்பாடு நல்லா இருந்துச்சு. எப்படிடா இந்த எடத்தக் கண்டு புடிச்சீங்க?&#8221;, என்ற பாலாஜியிடம்,</p><p>&#8220;வெளிய நின்னு ஒருத்தர்க்கிட்டப் பேசிட்டு இருந்தோம்ல அவரு தான் சொன்னாரு&#8221;, என்றேன்.</p><p>&#8220;ஆமா. இலங்கைத் தமிழ்ல அழகா பேசுனாரு. என்ன கதைக்கிறீர்கள். எனக்கு ஒன்றும் விளங்க இல்லா&#8221;, என்று இலங்கைத் தமிழைப் பேச முயன்ற விக்னேஷ், &#8220;கடைசியா அவரு சொன்னத கவனிச்சியா?&#8221;, என்றான். ஒன்றும் புரியாமல் நான் விழிக்க, அவர் சொன்னதை, அவர் மொழியிலேயே கூறினான்.</p><p>&#8220;இங்க எல்லாமே இருக்கு. சாப்பாட்டுக் கடை, துணிக்கடை, பள்ளிக் கூடம், ரயில் நிலையம் எல்லாம் இருக்கு, ஆனா சொந்தமா நாடு மட்டும் இல்ல&#8221;</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/dortmund-diary/">டார்ட்மண்ட்</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனிக்கிழமை சந்தை!</title>
		<link>https://kavirasan.com/sanikizhamai-sandhai/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Mar 2026 20:51:29 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<category><![CDATA[#katturaigal #கட்டுரைகள் #tamil #தமிழ் #தமிழ்_கட்டுரைகள் #kallacharayam]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4615</guid>

					<description><![CDATA[<p>இந்திய நேரப்படிக் கணக்கிட்டால் எழுந்ததே மிகத் தாமதமாகத்தான். இந்நேரம் அங்குச் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நேரம், நண்பகலுக்கும் காலைக்குமான இடைப்பட்ட பொழுது. பதினொரு மணி. ஆனால் பெல்ஜியத்தில் அது வெறும் அதிகாலை தான். காலை ஆறரை மணி. பெல்ஜியத்தில் இருந்தாலும் இந்திய நேரத்திற்கே பழகி இருந்த மனது எழச் சொல்லிக் கட்டளை இட்டது. சனிக்கிழமை விடுமுறை நாள் தான், இன்னும் சற்று நேரம் தூங்கலாம் ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் அக்காவுக்கு இந்நேரம் மதியம் ஒன்றரை ஆகி [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/sanikizhamai-sandhai/">சனிக்கிழமை சந்தை!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4615" class="elementor elementor-4615">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-09e12dc elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="09e12dc" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-4c6e584" data-id="4c6e584" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-5f973c0 elementor-widget elementor-widget-text-editor" data-id="5f973c0" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>இந்திய நேரப்படிக் கணக்கிட்டால் எழுந்ததே மிகத் தாமதமாகத்தான். இந்நேரம் அங்குச் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நேரம், நண்பகலுக்கும் காலைக்குமான இடைப்பட்ட பொழுது. பதினொரு மணி. ஆனால் பெல்ஜியத்தில் அது வெறும் அதிகாலை தான். காலை ஆறரை மணி. பெல்ஜியத்தில் இருந்தாலும் இந்திய நேரத்திற்கே பழகி இருந்த மனது எழச் சொல்லிக் கட்டளை இட்டது. சனிக்கிழமை விடுமுறை நாள் தான், இன்னும் சற்று நேரம் தூங்கலாம் ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் அக்காவுக்கு இந்நேரம் மதியம் ஒன்றரை ஆகி இருக்கும். பெல்ஜியத்திற்கும் அதற்கும் ஏழு மணி நேர இடைவேளை. மதிய உணவு முடித்து உறங்கச் சென்றுவிட்டால் மீண்டும் மாலை தான் பேசலாம் என அரக்கப் பறக்க எழுந்து முகம் கழுவி காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பால் காய்ச்ச ஆயத்தம் ஆகிக் கொண்டே, அம்மாவுக்கு அழைப்பு விடுத்தேன், அம்மாவும் அக்காவோடு சிங்கப்பூரில் சில நாட்கள் வசிக்கச் சென்றிருப்பதால். பாத்திரம் கழுவும் நேரம், பால் காய்ச்சும் நேரம் தான் என் அழைப்புகளுக்கான நேரம். தேநீர் தயாராகி விடும் அல்லது அழுக்குப் பாத்திரங்கள் கழியும், அதோடு வீட்டிற்குப் பேச வேண்டிய வேலையும் முடிந்துவிடும், ஒரே வேளை இரண்டு வேலை. இந்தியாவைப் போல் பால்கார அம்மா அதிகாலையே வந்து மதில் மேல் வைத்துவிட்டுச் செல்லும் பசும்பாலை எல்லாம் பெல்ஜியத்தில் எப்படி எதிர்பார்ப்பது? கேன் ஒன்றைப் பிரித்து தேநீருக்காக பாலைக் கொதிக்க வைத்தேன். தமிழர்கள் தேநீருக்குத் தான் காலைக் கடன் என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும். அதவன்றித் தொடங்கும் நாள் ஏனோ அவ்வளவு இனிதாய் இருப்பதே இல்லை. தேநீர் தனிமையைப் போக்க வல்லது என சாம்ராஜ் சொன்னதில் துளியும் மிகை இல்லை. பாப்பாக்கள் இருவரும் பேருக்குப் பேசிவிட்டு விளையாடுவதில் தான் மும்மரமாய் இருந்தனர். அம்மாவிடம் சிறிது உரையாடும் பொழுது இந்தியாவில் தனியாய் இருக்கும் அப்பாவும் அழைக்க, தேநீர் தயார் ஆவதற்குள் இருவருடனும் ஒரே நேரத்தில் பேசி முடித்து விடலாம். சீட்டுப் பணம் அனுப்பச் சொன்ன அப்பாவிடம்,</p><p>&#8220;ஒன்னாந்தேதி தான. என்ன இப்பவே கேக்குற&#8221;, என்று பதில் கேள்வி கேட்க</p><p>&#8220;ஒன்னாந்தேதி தான். அனுப்பு அனுப்பு&#8221;, என்று மழுப்பினார். அப்பா வைத்த அடுத்த கணம், &#8216;இப்பவே அனுப்பாத. தம்பிக்கு எதாச்சும் செய்யும்&#8217; என்று எச்சரித்த அம்மாவிடம் சரி சரி என்று தலையாட்டிவிட்டு, தேநீருடன் நாஞ்சில் நாடனின் மிதவை வாசிப்புத் தொடங்க, ஓர் அத்தியாயம் தாண்டுவதற்குள் சந்தைக்குத் தாமதம் ஆனதெனக் குளித்துப் புறப்பட்டேன். பசி வயிற்றைக் கிள்ளியது. அவக்காடோ(Avocado) ஒன்றை எடுத்து ஜீஸ் அடித்தால் இரண்டு கோப்பை வந்தது. அறையில் தங்கி உறங்கிக் கொண்டிருக்கும் விக்னேஷுக்கு வைக்காமல் இரண்டு கோப்பையையும் குடித்த பின்பே பசி கொஞ்சம் தணிந்தது போல் இருந்தது. ஏனோ ஒருவாறு தனிமைக்குள் செல்வது போல் தோன்ற மீண்டும் அக்காவுக்கு அழைத்துப் பேசிக் கொண்டே சந்தைக்குக் கிளம்பினேன். செல்லும் வழியெல்லாம் இன்ஸ்டாகிராம் துணை வந்தது. வழித் துணை இல்லாத சமயம், விழித் துணை தானே உடன் வருவது.</p><p>குளிரும் என நினைத்து உடல் முழுவதையும் மறைக்க ஜெர்க்கினுடன் கிளம்ப, வெளியே வந்த சில நிமிடங்களில் புழுக்கம் உள்ளுக்குள் இறுக்கியது. கட்டிடங்களையும் தாண்டி அங்கங்கே வெயிலின் நிழல். ஜெர்க்கினைக் கழற்றி வெறும் சட்டையோடு நடப்பதே கொஞ்சம் இதமாய் இருந்தது. வழமைபோல் சந்தை மக்களால் நிரம்பி வழிந்தது. நான் வசிக்கும் மெக்கல்லன் நகரத்தின் மையத்தில் நடக்கும் இந்த வாராந்திரச் சந்தையில், சமைத்த சமைக்காமல் சமைக்க ஆயத்தமாய் இருக்கும் பொருட்கள், காய், பழம், கறி, மீன், முட்டை, உடைகள், உபகரணங்கள் என எல்லாப் பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கும். அனைத்தும் வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கும் தள்ளு வண்டிக் கடைகள். பன்னிரண்டு மணிக்கு ஒவ்வொரு வண்டியாய் நடையைக் கட்டும். மொத்த நகரும் நண்பகல் பன்னிரண்டு மணிக்குள் நகரின் மையத்தில் குழுமியிருக்கும். தெரிந்த தெரியாத இந்திய முகங்களைக் காணும் இடம், இந்தியர்களை மட்டுமல்ல எல்லா நாட்டினரையும். படிப்பதற்கு ஐபாட் ஒன்றை வாங்கலாம் எனப் பழைய பொருட்கள் விற்கும் ஆப்கானியன் கடைக்குள் நுழைந்தேன். அவன் காட்டியது அனைத்தும் முந்நூறு நானூறு யூரோவிலேயே இருக்க, நூறு இருநூறு ரூபாய்க்கு எதாவது தேருமா என்று தேடினால் ஒன்றும் அகப்படவில்லை. வெளியே மழைத் தன் தூறலைத் தொடங்கி இருந்தது. சில நொடிகளில், சற்று முன் அடித்த வெயிலின் தடையமே இல்லாமல் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது. இது தான் பெல்ஜியம். எப்போது என்ன வரும் என்று எவராலும் சொல்ல முடியாத ஓர் அதிசய நாடு. மழையின் தாக்கம் உள்ளே கடைக்குள் புகுந்து உடலை நெருக்க, குளிர் தன் வேலையைக் காட்டியது. இந்தியன் என்று அறிந்து கொண்ட கணம் என்னைக் கவர்வதாய் நினைத்து அவன் இடை இடையே பேசிய இந்தி வேறு இன்னும் எரிச்சலூட்டியது. என்ன செய்ய, &#8216;இந்தி தெரியாது போடா&#8217; அவனுக்குத் தெரியாதே. நூறு, இருநூறு ரூபாய்க்கானது அடுத்த வாரம் வருமென்று சொன்னவனை நம்பி, வெளியே வருவதற்குள் மழை நின்று மீண்டும் வெயில். சமைத்த கோழிக்கறி சிலவற்றை எனக்கும் விக்கிக்கும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன். போகும் வழியில் இருக்கும் பொறித்த மீன் கடை, வாசனையை அனுப்பி வாவென்று அழைக்க, &#8216;ஒரு நாள் மட்டும்&#8217; என்று அங்குச் சென்று, தானாய் வில்லை(டோக்கன்) கொடுக்கும் இயந்திரத்தின் முன் நிற்கும் வரிசையில் சென்று காத்திருந்தேன். ஒரு பொத்தானைத் தட்டினால் வில்லை வரும். வாங்கிக் கொண்டு, கடைக்காரர்கள் நம்மை அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும். தெரியாமல் இரண்டு முறைத் தட்ட, இயந்திரம் வெளியே துப்பிய இரண்டு வில்லைகளில் ஒன்றைப் பின்னால் இருக்கும் வெள்ளைக்கார அம்மாவிடம் கொடுத்தேன். நன்றியையும் புன்னகையையும் மாற்றி மாற்றிக் கொடுத்த அவரிடம், வில்லை பெற்றுக் கொடுத்ததற்குக் கைம்மாறாக,</p><p>&#8220;அவர்கள் என் எண்ணை அழைக்கும் போது எனக்குத் தெரிவிக்க முடியுமா. அவர்கள் எண்ணை டச்சு மொழியில் சொல்வார்கள். எனக்கு டச்சு மொழித் தெரியாது&#8221;, என்றேன்.</p><p>&#8220;ஓஹ் கண்டிப்பாக&#8221;, என்று மீண்டும் புன்னகைத்தார். அவர் கையோடு பிடித்திருந்த அவருடைய பெண் குழந்தை அங்கும் இங்கும் அவரை இழுக்க, அவர் என் கோரிக்கையை மறந்து விடாதிருக்க, அவரை விட்டு நீங்கி நிற்காமல் கண் பார்வை படும்படி அருகிலேயே நின்றேன். &#8220;இப்போது நாற்பத்து நான்கு&#8221;, என்றார். என் எண்ணைத் தானே மொழிபெயர்க்கச் சொன்னேன், எல்லா எண்ணையுமா சொல்லச் சொன்னேன் என மனதிற்குள் நினைத்தபடி, நன்றி என்றேன். நாற்பத்து ஐந்து, நாற்பத்து ஆறு, நாற்பத்து ஏழு, இறுதியாக நாற்பத்து எட்டு என எல்லாவற்றுக்கும் நன்றி நன்றி எனச் சொல்லிமாளவில்லை. எனக்கு முன் எண் கொண்ட பெண்மணியின் &#8216;நாற்பத்து ஏழு&#8217; என்று அழைத்ததும் &#8216;பிங்கோ&#8217; என்று உரக்கச் சொல்ல, மொத்தக் கடையும் சிரிப்பில் ஆழ்ந்தது. இங்கிருக்கும் இளையவர் முதல் முதியவர் வரை பெரும்பாலானோர் இப்படி அவ்வப்போது ஏதாவது சிரிப்பூட்டும் செயல்களை மிக இயல்பாகச் செய்துவிடுகின்றனர். அவர் வயதை ஒத்திருக்கும் நம் ஊர் பெருசுகளிடம் இது போன்ற நகைச்சுவைகளை எதிர்பார்க்க முடியுமா என்ன? பொறித்த மீன்களை வாங்கிக் கொண்டு இறுதியாக ஒரு நன்றி நவிலலோடு, கையில் இருந்த குழந்தைக்குக் கையசைத்துப் புறப்பட்டேன். வரும் வழியெல்லாம் பாடலின் துணை. வீட்டிற்கு வந்ததும் வெளியே சென்றதை நினைவூட்டும் வண்ணம் வாசலில் நின்றபடி நான்கைந்துப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்க, என்னைக் காத்திருப்பவனாய் நினைத்து, உள்ளே சென்று கொண்டிருந்த ஒருவர் வேகமாக வந்து எனக்கு வெளிக்கதவைத் தாண்டி இருக்கும் உள் கதவைத் திறந்து விட்ட வண்ணம் காத்திருந்தார். நமக்குப் பின்னால் வருபவர்களுக்குக் கதவினைத் திறந்து அவர்கள் வரும்வரை காத்திருப்பது ஒரு மாண்பாக இங்கே கருதப்படுகிறது. இதே பழக்கத்தில் இந்தியா சென்றிருந்த போது, உணவகம் ஒன்றில் எனக்குப் பின்னால் வந்தவருக்குக் கதவினைத் திறந்துவிட, அவர் என்னை உணவகத்தில் வேலை செய்பவர் போல் ஒரு பார்வைப் பார்த்துக் கடந்தார்.</p><p>கதவு திறந்து விட்டவருக்கு நன்றி கூறி உள்ளே நுழைந்து இருவரும் மின்தூக்கிக்காகக் காத்திருந்தோம்.</p><p>&#8220;சாவியை மறந்து வைத்துவிட்டு வந்தாயா?&#8221;, என்றார் அவர். ஐம்பது அறுபது வயதிருக்கும். ஆனால் உடல், இருபது வயது பையனை ஒத்திருந்தது.</p><p>&#8220;இல்லை, வெளியே இருக்கும் கண்ணாடி புகைப்படம் எடுக்க அழகாக இருக்கும். அதனால் தான், அங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்&#8221;, என்று எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டினேன்.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-26ad8d8 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="26ad8d8" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-3d99a8d" data-id="3d99a8d" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-7c5b86d elementor-widget elementor-widget-image" data-id="7c5b86d" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="736" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631072.jpg-736x1024.jpeg" class="attachment-large size-large wp-image-4617" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631072.jpg-736x1024.jpeg 736w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631072.jpg-216x300.jpeg 216w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631072.jpg-768x1069.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631072.jpg-1104x1536.jpeg 1104w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631072.jpg-1472x2048.jpeg 1472w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631072.jpg-200x278.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631072.jpg-300x417.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631072.jpg-scaled.jpeg 1840w" sizes="(max-width: 736px) 100vw, 736px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-e2a69e2 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="e2a69e2" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-5911656" data-id="5911656" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-1bdb988 elementor-widget elementor-widget-image" data-id="1bdb988" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="683" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631142.jpg-683x1024.jpeg" class="attachment-large size-large wp-image-4618" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631142.jpg-683x1024.jpeg 683w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631142.jpg-200x300.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631142.jpg-768x1151.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631142.jpg-1025x1536.jpeg 1025w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631142.jpg-1367x2048.jpeg 1367w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631142.jpg-300x450.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1631142.jpg-scaled.jpeg 1708w" sizes="(max-width: 683px) 100vw, 683px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-87701cc elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="87701cc" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-3b54e1c" data-id="3b54e1c" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-dff01f4 elementor-widget elementor-widget-image" data-id="dff01f4" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="473" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1629322.jpg-473x1024.jpeg" class="attachment-large size-large wp-image-4619" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1629322.jpg-473x1024.jpeg 473w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1629322.jpg-139x300.jpeg 139w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1629322.jpg-768x1662.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1629322.jpg-710x1536.jpeg 710w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1629322.jpg-947x2048.jpeg 947w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1629322.jpg-200x433.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1629322.jpg-300x649.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1629322.jpg-scaled.jpeg 1183w" sizes="(max-width: 473px) 100vw, 473px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-f7744d8 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="f7744d8" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-3e2a993" data-id="3e2a993" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-bde78c9 elementor-widget elementor-widget-image" data-id="bde78c9" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="554" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1630142.jpg-554x1024.jpeg" class="attachment-large size-large wp-image-4620" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1630142.jpg-554x1024.jpeg 554w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1630142.jpg-162x300.jpeg 162w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1630142.jpg-768x1420.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1630142.jpg-831x1536.jpeg 831w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1630142.jpg-1108x2048.jpeg 1108w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1630142.jpg-200x370.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1630142.jpg-300x555.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/20260328_1630142.jpg-scaled.jpeg 1384w" sizes="(max-width: 554px) 100vw, 554px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-f6f2db6 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="f6f2db6" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-c995bb9" data-id="c995bb9" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-59857fb elementor-widget elementor-widget-text-editor" data-id="59857fb" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>&#8220;எவ்வளவு அழகான புகைப்படங்கள். உன்னையும் உன்னோடு புகைப்படத்தில் இருக்கும் பூவையும் கொண்ட புகைப்படம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது&#8221;, என்றார். நான் நன்றியைப் புன்னகை வழியாய்ச் சொல்ல, &#8220;தினமும் எடுப்பாயா?&#8221;, என்றார். மின்தூக்கி நகராமலேயே இருப்பதைக் கவனிக்காமலேயே இருவரும் பேசிக்கொண்டிருக்க, சில நிமிடங்களுக்குப் பின்னே அதைக் கவனித்தவர், சரியாக மூடப்படாத கதவினை ஒருமுறைத் திறந்து மீண்டும் மூடினார்.</p><p>&#8220;தினமும் இல்லை. அவ்வப்போது. நான் இந்த நாட்டில் இருந்ததற்கான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்&#8221;, என்றதும் சத்தமாகச் சிரித்தார்.</p><p>&#8220;இங்கே எத்தனை ஆண்டுகளாய் இருக்கிறாய்&#8221; பதிலுரைக்காமல் மூன்று என்று விரல்களால் நான் சமிக்ஞை செய்ய, &#8220;என்னென்ன நகரங்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறாய்?&#8221;, என்றார்.</p><p>&#8220;ஆண்ட்வார்ப்(Antwerp), பிரஸல்ஸ்(Brussels), கெண்ட்(Ghent), லூவன்(Leuven)&#8221;, என்று பட்டியலிடும் போதே, என்னுடைய ஏழாவது மாடி வந்தடைந்தது. அவர் பன்னிரண்டாம் மாடி எண்ணை அழுத்தி இருந்தார். சற்று நேரம் கதவைப் பிடித்தபடி உரையாடியவன், பேசுவதைத் தொடர்வதற்காய் கதவை மூடி பன்னிரண்டாம் மாடி வரை அவரோடே சென்றேன்.</p><p>&#8220;நீ அர்டீன்(Ardennes) நகரத்திற்குச் செல்ல வேண்டும்&#8221;, என்றார். புரிந்தது போல் நான் தலையசைக்க, எனக்குப் புரியவில்லை என்பதை உணர்ந்து கொண்டவர், லிஃப்டில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடியில், &#8220;நாம் இங்கிருக்கிறோம், நமக்குக் கீழே பிரஸல்ஸ் இங்கே இருக்கிறது. அதற்கும் கீழே அர்டீன் இருக்கிறது&#8221;, என்று விரலால் வரைந்து காட்டினார். &#8220;அது ஒரு மலைப்பகுதி. இயற்கைக் காட்சிகள் காண்பதற்கு அவ்வளவு அழகாய் இருக்கும். பெல்ஜியத்தில் கடல், சம நிலம், மலை என அனைத்தும் இருக்கிறது&#8221; என்றவர் முடிப்பதற்குள் பன்னிரண்டாம் வர, &#8220;இன்னும் நினைவுகளையும் ஆதாரங்களையும் சேகரி&#8221;, என்று வெளியேறியவரிடம்,</p><p>&#8220;நீங்களும் உறுதியாக இந்தியா வரவேண்டும்&#8221;, என்று நட்பின் குறியீடாய் கை முட்டிகளை நீட்டினேன்.</p><p>&#8220;இந்தியா பெரிய நாடு. பார்க்க வேண்டிய நாடு. ஆனால் எனக்கு எங்கிருந்து தொடங்குவது என்று தான் தெரியவில்லை. உறுதியாக வருகிறேன்&#8221; என்று தன் கை முட்டிகளால் என் கை முட்டிகளைத் தட்டி விட்டுக் கதவடைத்தார்.</p><p>வீட்டிற்கு வந்ததும் அவர் சொன்ன நகரத்தைக் கூகுளில் தேடினேன். அர்டீன் மலைகளாலும் காடுகளாலும் ஆன நகரம். பெல்ஜியம் பிரான்ஸ் என இரு தேசங்களாலும் பகிரப்பட்ட நகரம். அந்நகரில் உள்ள மலைத் தொடர்ச்சி, லக்சம்பர்க், ஜெர்மனியிலும் நீண்டிருப்பதெனச் சில தகவல்களைத் துப்பியது கூகுள். அப்படியே தேடலிலேயே சில கணம் ஆழ்ந்திருக்க, நேரம் போனதே தெரியவில்லை.</p><p>எத்தனை விதமான மனிதர்கள். நிகழ்ந்ததனைத்தையும் நினைத்த பொழுது மனமெங்கும் ஒருவிதமான அன்பின் கதகதப்பு. அதே உணர்வோடு சாப்பிட உட்கார, கதகதப்பாவது கருமமாவது, கோழிக் கறியும் மீனும் ஆறி ஊறிப் போயிருந்தது.</p><p>28, மார்ச், 2026</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/sanikizhamai-sandhai/">சனிக்கிழமை சந்தை!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இறைவனிடம் கையேந்துங்கள்!</title>
		<link>https://kavirasan.com/iraivanidam-kaiyendhungal/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Mar 2026 21:05:57 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<category><![CDATA[#katturaigal #கட்டுரைகள் #tamil #தமிழ் #தமிழ்_கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4607</guid>

					<description><![CDATA[<p>&#8220;வள்ளல் நபி கதையைவரைகின்றேன் &#8211; காவியத்தின்உள்ளே நீ நிறைந்து ஒளியேற்ற மாட்டாயா? தெரியாமல் நான் இந்ததீன் நெருப்பைத் தொட்டுவிட்டேன்;கருகாமல் சுடர் வீசக்கருணையினைக் காட்டாயா? எனக்காக இல்லையெனினும்இறைதூதர் ஏந்தல் நபிதனக்காக இங்கெனக்குத்தமிழெடுத்து நீட்டாயா?&#8221; &#8211; முகமது மேத்தா &#8220;இந்த வாட்டியாச்சும் நாகூர் போயி ஒரு தென்னம்பிள்ளை வாங்கி வச்சிருப்பா&#8221;, என்று அம்மா சொன்ன போது தான் மாமாவின் வேண்டுதல் நினைவுக்கு வந்தது. மாமா மாமி என்று மட்டுமே அழைத்ததனால் என்னவோ அவர் பெயர் கூட எங்களுக்குத் தெரியாமலேயே போனது. [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/iraivanidam-kaiyendhungal/">இறைவனிடம் கையேந்துங்கள்!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4607" class="elementor elementor-4607">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-d36b2d7 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="d36b2d7" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-297954d" data-id="297954d" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-5778426 elementor-widget__width-initial elementor-widget elementor-widget-text-editor" data-id="5778426" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p><em><strong>&#8220;வள்ளல் நபி கதையை</strong></em><br /><em><strong>வரைகின்றேன் &#8211; காவியத்தின்</strong></em><br /><em><strong>உள்ளே நீ நிறைந்து </strong></em><br /><em><strong>ஒளியேற்ற மாட்டாயா?</strong></em></p><p><em><strong>தெரியாமல் நான் இந்த</strong></em><br /><em><strong>தீன் நெருப்பைத் தொட்டுவிட்டேன்;</strong></em><br /><em><strong>கருகாமல் சுடர் வீசக்</strong></em><br /><em><strong>கருணையினைக் காட்டாயா?</strong></em></p><p><em><strong>எனக்காக இல்லையெனினும்</strong></em><br /><em><strong>இறைதூதர் ஏந்தல் நபி</strong></em><br /><em><strong>தனக்காக இங்கெனக்குத்</strong></em><br /><em><strong>தமிழெடுத்து நீட்டாயா?&#8221;</strong></em></p><p><em><strong>&#8211; முகமது மேத்தா</strong></em></p><p>&#8220;இந்த வாட்டியாச்சும் நாகூர் போயி ஒரு தென்னம்பிள்ளை வாங்கி வச்சிருப்பா&#8221;, என்று அம்மா சொன்ன போது தான் மாமாவின் வேண்டுதல் நினைவுக்கு வந்தது. மாமா மாமி என்று மட்டுமே அழைத்ததனால் என்னவோ அவர் பெயர் கூட எங்களுக்குத் தெரியாமலேயே போனது. சிறு வயதில் தலையில் கட்டியோடு பிறந்த எனக்குக் கட்டி வற்ற வேண்டும் என்று நாகூர் ஆண்டவருக்கு வேண்டிக் கொண்ட, எப்போதும் லுங்கி, தொப்பி அணிந்திருக்கும் எதிர்த்த வீட்டு முஸ்லிம் மாமாவின் முகம் மட்டும் கிணற்றில் விழுந்து நிழலாடும் நிலவாய் மனதை விட்டு நீங்காமல் இன்னும் இருக்கிறது.</p><p>இந்தியாவிலேயே அதிக கோவில்களைக் கொண்டிருந்தும் மதவாதக் கட்சிகளுக்கு இடம் கொடுக்காத மாநிலமாய் தமிழ்நாடு திகழ்வதன் காரணம் இன்று நேற்று தோன்றியதா என்ன?</p><p>அண்மையில் மத நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசிய நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில், திருப்பூர் மங்கலத்தில் இந்து கோவில்களுக்குச் சீர் வைக்கும் இஸ்லாமியர்களும், தஞ்சையில் மூன்று குடும்பங்களுக்காக முகரம் கொண்டாடும் மொத்த சிற்றூரும், எல்லோரையும் சித்தப்பா பெரியப்பா என்று உறவு முறை சொல்லி அழைக்கும் மற்ற சிலரும் பார்க்கும் நம்மை நெகிழ்ச்சியுற வைத்தனர்.</p><p>&#8216;இதெல்லாம் ஏன் செய்றீங்க?&#8217; என்று கோபி கேட்டதற்கு, &#8216;எப்ப ஆரம்பிச்சதுன்னு தெரியல, இன்னும் செஞ்சிட்டு இருக்கோம்&#8217; என்று சொல்லும் பதில் அழகிலும் அழகு.</p><p>பிரிவினை என்னும் சொல்லின் பொருளையே உணராத சமூகமாய்த் தானே நம் மண் இத்தனை ஆண்டுகளாய் இருந்து வந்திருக்கிறது. இல்லையென்றால் எதிர்த்த வீட்டு மாமா எனக்காக நாகூர் ஆண்டவருக்கு வேண்டிக் கொண்டிருப்பாரா?</p><p>அதே நிகழ்ச்சியில் ஒருவர் குறிப்பிடும், &#8216;அல்லாக் கோயில்&#8217; எனும் சொல்லைக் கேட்டதும், கடைசிப் படி தாண்டி இன்னொரு படியை எதிர்பார்த்து தரையில் இடறி நிற்கும் பாதங்களைப் போல, மனம் ஒரு கணம் தடுமாறி நிற்கிறது. எவ்வளவு அழகான சொல்? பள்ளி நாட்களில் &#8220;மாதா கோயில் எறங்கணுமா? மாதா கோயிலு?&#8221;, எனக் கத்தி கத்தி கூப்பிடும் சூரியன் மினி பஸ் நடத்துநரின் நினைவில் பதியாத முகம் ஒருமுறை மின்னல் கீற்றாய் எண்ண வானில் மின்னி மறைகிறது. நம் மண்ணில் திகழும் மத நல்லிணக்கத்திற்கு இந்த ஒற்றைச் சொல்லே உரைகல்லாய் நிற்கும் என்றால் மிகை என்று சொல்வீர்களா?</p><p>அரபிய மொழியில் இருக்கும் தன் பெயரை, தமிழில் &#8216;மொய்ம்பன்&#8217; என்று மாற்றிக் கொண்ட அண்ணனை முதன்முதலில் சந்தித்த பொழுது வியப்பின் விளிம்பிற்கே சென்றேன். &#8216;ராமசாமி மரக்காயர்&#8217;, &#8216;குப்புசாமி மரக்காயர்&#8217; என்றுத் தமிழ்ப் பெயர்கள் கொண்ட இசுலாமியர்களைக் கண்ட கடைசித் தலைமுறை நாமாகத் தான் இருப்போம் என்று நினைக்கிறேன்.</p><p>&#8220;எங்கப் புள்ளைங்களுக்கு எல்லாம் தமிழ் அவ்வளவு வராது. அதனாலயே பாதி புள்ளைங்கப் படிப்ப விட்டுடும்&#8221;, என்று ரேஷ்மா சாச்சி சொன்ன போது உமறுப்புலவர் தொடங்கி</p><p><em><strong>&#8216;இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழே எங்கள் மொழி&#8217;</strong></em> என்று பாடிய காயிதே மில்லத்தாய் இருக்கட்டும்,</p><p><em><strong>&#8216;அகம் நீ! புறம் நீ! எம்</strong></em><br /><em><strong>ஆருயிரும் நீ! எங்கள்</strong></em><br /><em><strong>முகம் நீ! முகவரி நீ!</strong></em><br /><em><strong>முடியாத புகழும் நீ!&#8217;</strong> </em>என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமானாய் இருக்கட்டும், நபிகளுக்கு ஒரு காவியமே பாடிய முகமது மேத்தாவாய் இருக்கட்டும், தமிழ் எத்தனை எத்தனை இசுலாமிய ஆளுமைகளை நமக்குக் கொடுத்திருக்கிறது என்று மனம் ஒரு கணம் பட்டியலிடத் தொடங்கியது.</p><p>கீழ் வீட்டில் குடி வந்த முதல் ஆண்டே ரம்ஜானுக்கு வகை வகையாய் காலை உணவு செய்து எடுத்து வந்த அசீமா அம்மாவிடம், &#8216;தீபாவளிக்குக் கூட நான் அத்தனை வகையாய் சாப்பிட்டதில்லை&#8217; எனச் சொல்ல நினைத்ததை சொல்லியாவது இருக்கலாம்.</p><p>&#8220;இன்னைக்கும் ஜொரம் குறையலன்னா அல்லா கோயில்ல போயி மந்திரிச்சு தாயத்து ஒன்னக் கட்டு&#8221; என்று சொன்ன விக்கிப் பாட்டியும், மாலையில் மறக்காமல் சென்று வாங்கும் நோம்பு கஞ்சியை எங்களுக்கும் கொஞ்சம் கொண்டு வந்து கொடுக்கும் குலாம் கவுஸ் தாத்தாவும் இப்போது நடக்கும் வெறுப்பு அரசியலைப் பார்க்காமலேயே இறந்து போனார்கள் என்பதே சற்று நிம்மதியைக் கொடுக்கிறது.</p><p>பம்பாய்த் திரைப்படத்தில் நாராயணப் பிள்ளையாய் நடித்த நாசரும், பஷீராக நடித்த கிட்டியும் படம் முழுக்க என் மதம் பெரிதா உன் மதம் பெரிதா என வாதத்திலேயே ஈடுபட்ட வண்ணம் இருப்பார்கள். ஒரு காட்சியில் இஸ்லாமிய மதத்தவர்கள் கத்தியும் கையுமாக நாசரைச் சூழ்ந்து கொள்ள, அங்கே ஓடி வரும் கிட்டி ஏதோ சமாதானம் சொல்லி அவர்களை அனுப்பி வைப்பார்.</p><p>&#8220;நீ வரலனா கொன்னுருப்பாங்க&#8221;, என்று பதற்றத்துடன் பேசும் நாசர், &#8220;அவங்கக்கிட்ட என்ன சொன்ன பஷீர்&#8221;, என்று கேட்பார்.</p><p>&#8220;ஒன்னுமில்ல&#8221;, என்று தட்டிக்கழிப்பார் கிட்டி.</p><p>விடாமல், &#8220;சொல்லு பஷீர் என்ன சொன்ன&#8221;, என்று நாசர் கொஞ்சம் மன்றாடும் குரலில் கேட்க,</p><p>&#8220;உன்ன என் அண்ணன்னு சொன்னேன் யா&#8221;, என்பார் மிக இயல்பாக. பின்னால் ஓடும் ரகுமானின் இசை எவரையும் இரங்கச் செய்யும். இதில் ஒரு பெரும் வியப்பு, அந்தப் படத்தில் நாராயண பிள்ளையாய் நடித்த நாசர் ஒரு உண்மையில் ஒரு இசுலாமியன். பஷீராய் நடித்த கிருஷ்ணமூர்த்தி எனப்படும் கிட்டி உண்மையில் ஒரு இந்து. மணிரத்னம் இதைத் தெரிந்தே வைத்தாரா என்பது அறியா வினா தான்.</p><p>வடக்குக்கு இசுலாம் வன்முறை வழியாய்த் தான் அறிமுகம் ஆனது. அதனால் அவர்களைப் பொறுத்த வரை அது ஒரு அந்நிய மதம், இல்லை தங்கள் அடையாளங்களை அழித்த மதம். ஆனால் நமக்கு இசுலாம் வணிகம் வழியாய் தான் வந்தது. அதனால் தானோ என்னவோ அவர்களால் நம் மண்ணில் இசுலாமிய வெறுப்பை அவ்வளவு எளிதாய் நிகழ்த்த முடிவதில்லை.</p><p>நீயா நானாவில் கலந்து கொண்டவர்களைப் போல, பஷீர் சொன்னது போல எல்லோரும் எல்லோரையும் உறவு முறையோடு பார்க்கத் தொடங்கினால் போதும் பிரிவினை மறைந்து பிரியம் இந்தப் பிரபஞ்சத்தை ஆளத் தொடங்கிவிடும்.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-ddb6432 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="ddb6432" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-0b1a8af" data-id="0b1a8af" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-07da544 elementor-widget elementor-widget-video" data-id="07da544" data-element_type="widget" data-e-type="widget" data-settings="{&quot;youtube_url&quot;:&quot;https:\/\/www.youtube.com\/watch?v=RE9XTaWr7A8&amp;list=RDRE9XTaWr7A8&amp;start_radio=1&quot;,&quot;video_type&quot;:&quot;youtube&quot;,&quot;controls&quot;:&quot;yes&quot;}" data-widget_type="video.default">
				<div class="elementor-widget-container">
							<div class="elementor-wrapper elementor-open-inline">
			<div class="elementor-video"></div>		</div>
						</div>
				</div>
				<div class="elementor-element elementor-element-16cf770 elementor-widget elementor-widget-text-editor" data-id="16cf770" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>அண்மையில் &#8216;இறைவனிடம் கையேந்துங்கள்&#8217; பாடலை விட்டல் தாஸ் மஹராஜ் குழு பாடக் கேட்க நேர்ந்தது. அதில் ஓரிடத்தில் &#8216;அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்&#8217; என்ற வரியை அவர்கள் &#8216;ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்&#8217; என்று மாற்றிப் பாடியிருப்பது கூட கேட்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அரபு மொழியில் &#8216;அல்லாஹ்&#8217; என்னும் சொல்லுக்கு ஆண்டவன் என்பதே பொருள். அவர்கள் அதை மாற்றிப் பாடியது அழகாய் இருந்தாலும் பொருள் என்னவோ ஒன்று தான். அந்தப் பாடலை ஒவ்வொரு முறைக் கேட்கும் பொழுதும், அதை எனக்கு முறைப்படி சொல்லிக் கொடுத்தது வைதீக வழியில் பிறந்து வளர்ந்த ராஜேஷ் மாஸ்டர் தான் என்பதும் நீக்கமறு உண்மையாய் நினைவில் நிற்கிறது. மதங்களைக் கடந்து மனிதர்களின் அன்புக்கு அப்பால் வேறொன்றும் இல்லை என அறியும் இடம் வெகு தொலைவில் இல்லை. அதுவரை ஆண்டவன் இருக்கிறார் என நம்புகிறவர்களிடம் நான் கேட்பது ஒன்று தான்.</p><p><strong>அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்</strong><br /><strong>ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்</strong><br /><strong>அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்</strong></p><p><em><strong>&#8216;அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்&#8217;</strong></em></p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/iraivanidam-kaiyendhungal/">இறைவனிடம் கையேந்துங்கள்!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது</title>
		<link>https://kavirasan.com/por-odungum-pugazh-odungadhu/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2026 17:38:36 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<category><![CDATA[#katturaigal #கட்டுரைகள் #tamil #தமிழ் #தமிழ்_கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4589</guid>

					<description><![CDATA[<p>&#8220;ஓடுவது, துரத்துவதுவீசி எறிவது,குறி பார்த்து அடிப்பது,பிடிப்பது, தப்பிப்பது,மறைந்து கொள்வது,சுற்றுவது, சறுக்குவது,மூச்சு வாங்குவது எனவிளையாடி வாழ்க்கைக்குத்தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்சிறுவர், சிறுமியர்&#8221; &#8211; முகுந்த் நாகராஜன் வளர்தலும் வளர்தல் நிமித்தமும் வன்முறையை நோக்கி மட்டும் தான் என்று நினைக்கும் போதே இந்த உலகம் குழந்தைகள் உலகமாக மட்டுமே இருந்திருந்தால் எவ்வளவு அமைதியாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஜெர்மானியக் கவிஞர் கதே படைத்த சாத்தான் கதாபாத்திரம், கடவுளை விடவும் நான் நல்லவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும். அதில், &#8220;நீங்களே [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/por-odungum-pugazh-odungadhu/">போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4589" class="elementor elementor-4589">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-f4e0545 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="f4e0545" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-86c495b" data-id="86c495b" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-a2a0c77 elementor-widget elementor-widget-image" data-id="a2a0c77" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="960" height="640" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykhailo-Dianov.jpeg" class="attachment-large size-large wp-image-4602" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykhailo-Dianov.jpeg 960w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykhailo-Dianov-300x200.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykhailo-Dianov-768x512.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykhailo-Dianov-200x133.jpeg 200w" sizes="(max-width: 960px) 100vw, 960px" />															</div>
				</div>
				<div class="elementor-element elementor-element-a61a5e0 elementor-widget elementor-widget-image" data-id="a61a5e0" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="768" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykahilo-Dianov-1024x768.jpeg" class="attachment-large size-large wp-image-4603" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykahilo-Dianov-1024x768.jpeg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykahilo-Dianov-300x225.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykahilo-Dianov-768x576.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykahilo-Dianov-200x150.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/Mykahilo-Dianov.jpeg 1280w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-b989495 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="b989495" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-6dcfce3" data-id="6dcfce3" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-5b7cb6a elementor-widget elementor-widget-text-editor" data-id="5b7cb6a" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p><em><strong>&#8220;ஓடுவது, துரத்துவது</strong></em><br /><em><strong>வீசி எறிவது,</strong></em><br /><em><strong>குறி பார்த்து அடிப்பது,</strong></em><br /><em><strong>பிடிப்பது, தப்பிப்பது,</strong></em><br /><em><strong>மறைந்து கொள்வது,</strong></em><br /><em><strong>சுற்றுவது, சறுக்குவது,</strong></em><br /><em><strong>மூச்சு வாங்குவது என</strong></em><br /><em><strong>விளையாடி வாழ்க்கைக்குத்</strong></em><br /><em><strong>தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்</strong></em><br /><em><strong>சிறுவர், சிறுமியர்&#8221;</strong></em></p><p><em><strong>&#8211; முகுந்த் நாகராஜன்</strong></em></p><p>வளர்தலும் வளர்தல் நிமித்தமும் வன்முறையை நோக்கி மட்டும் தான் என்று நினைக்கும் போதே இந்த உலகம் குழந்தைகள் உலகமாக மட்டுமே இருந்திருந்தால் எவ்வளவு அமைதியாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஜெர்மானியக் கவிஞர் கதே படைத்த சாத்தான் கதாபாத்திரம், கடவுளை விடவும் நான் நல்லவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும். அதில்,</p><p>&#8220;நீங்களே யோசித்துப் பாருங்கள். கடவுளை நீங்கள் தேடிப் போயாக வேண்டும். நானோ உங்களைத் தேடி வருவேன். ஆனால், நான் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டும் தான். உங்களுடைய இதயம். அது தான் உங்களுக்குத் தேவையற்றது. இதயம் மிகப்பெரிய பாரம். அது உங்களைப் போட்டு அழுத்திக் கொண்டே இருக்கும். அன்பு, கருணை, நன்மை, உண்மை என்று ஏதேதோ பேசி உங்களைக் குழப்பிக் கொண்டே இருக்கும். உங்களை ஆசைப் பட விடாது. பணம் சம்பாதிக்க அனுமதிக்காது. எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.</p><p>என்னிடம் ஓர் அரசியல்வாதியின் இதயம் இருக்கிறது. அதைக் கழற்றிக் கொடுத்த மறுநாளே அவர் ஊரின் மிகப்பெரிய பணக்காரர் ஆகிவிட்டார். என்னிடம் ஒரு வணிகரின் இதயம் இருக்கிறது. ஒரு சிறிய ஓட்டு வீட்டில் இருந்தவர் தன் இதயத்தை இழந்த பிறகு கடகடவென்று மாடி மேல் மாடி கட்டி இன்பமாக இருக்கிறார். என்னிடம் ஒரு மருத்துவரின் இதயம் இருக்கிறது. ஒரு கவிஞரின் இதயம் இருக்கிறது. விளையாட்டு வீரர், விஞ்ஞானி, ஆய்வாளர், பெண்ணின் இதயம் என எல்லாம் இருக்கிறது ஆனால் எனக்குத் தேவை எல்லாம் ஒரு குழந்தையின் இதயம் தான். மிகச் சிறியதாக, பூ போல இருக்கும். என்ன கொடுத்தாலும் அவர்கள் தங்கள் இதயத்தை என்னிடம் கொடுக்க மறுக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் உலகம் இனிமையாக இருக்கிறதோ என்னவோ?&#8221;, என்று எழுதியிருப்பார். எவ்வளவு ஆழமான கதை? குழந்தைகளின் உலகம் அப்பழுக்கற்றது. வன்மமும் வன்முறையும் அங்கே வாழத் தகுதியற்றவை. போர் தொடர்புடைய சொற்கள் எல்லாம் அங்கே புரியாத மொழி தான்.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-ed3a49a elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="ed3a49a" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-56bc37d" data-id="56bc37d" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-27f6a89 elementor-widget elementor-widget-text-editor" data-id="27f6a89" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>2016 சிரியா போரில், வலி தாங்க முடியாமல் இறப்பின் தறுவாயில் இருக்கும் குழந்தை ஒன்று, &#8216;நிகழ்வதனைத்தையும் கண்டிப்பாக நான் கடவுளிடம் சொல்லப் போகிறேன்&#8217; என்று அழுது கொண்டே பேசும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளம் எங்கும் வலம் வந்தது. அதைப் பார்க்கும் பொழுதே மனம் பதைபதைத்தது. 2020-ல் கொரோனா காலங்களில், அழிவின் பிடி நம் அனைவரையும் ஆட்டிப்படைக்க, உண்மையிலேயே அந்தச் சிறுவன் அல்லாவிடம் அனைத்தையும் சொல்லி இருப்பானோ என்று நாத்திகரையும் ஒரு நொடி நம்ப வைத்தது உலகம் பட்ட பாடு.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-9c77526 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="9c77526" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-18c91bd" data-id="18c91bd" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-4ba2526 elementor-widget elementor-widget-image" data-id="4ba2526" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="610" height="360" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/BkbZjelCcAA38Ku.jpg" class="attachment-large size-large wp-image-4591" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/BkbZjelCcAA38Ku.jpg 610w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/BkbZjelCcAA38Ku-300x177.jpg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/BkbZjelCcAA38Ku-200x118.jpg 200w" sizes="(max-width: 610px) 100vw, 610px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-3e07726 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="3e07726" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-3f04c0f" data-id="3f04c0f" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-efb7282 elementor-widget elementor-widget-text-editor" data-id="efb7282" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>புரட்சியைப் பெரிதாக நம்பும் மனங்கள் கூட ஏன் போர்களை அதுபோல் விரும்புவதில்லை? புரட்சி தானாய் நிகழ்வது. போர், தலைமை ஒருவரின் ஏவலால் எழுவது. எந்தச் சண்டைக்கும் வன்முறை தீர்வாகாது என்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழனின் தார்மீகக் கருத்தாக இருக்குமென்றே நம்புகிறேன். உலகம் தன்னுடைய எல்லைகளுக்காக, அல்லைகளைப் பிளந்த நாட்களில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும், மகுடங்களைச் சூட மக்களை மறந்த மன்னர்கள் ஆட்சிக்கு மத்தியில், ‘போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது’ என்றும் மொழிந்த தமிழ்ப் புலவர்கள் குருதியின் ஒரு துளி என் உடம்பிலும் ஓடும் காரணத்தாலோ என்னவோ, ரத்தம் குடிக்கும் யுத்தம் எனக்கு விருப்பமானதாய் இருந்ததே இல்லை. ஆதிக்கத் திமிரில், அத்தனை நாடுகளை வதைத்த, அமெரிக்கக் கொட்டத்தை, ஒசாமா ஒடுக்க நினைத்ததைக் கூட, முட்டாள்தனம் என்றே என் மூளை சொல்லியது. தினப்பசியை மறந்து இனப்பசியில் கிடந்த எத்தனையோ நாட்களில் கூட, பிரபாகரன் வாழ்வை நினைத்தும் அந்த மக்கள் பட்ட வேதனைகளை நினைத்தும், வருத்தம் என்னை வதைத்ததுண்டு. தின்றால் போச்சு என்று என்னை நானே தேற்றிக் கொண்டாலும், கறிக்கடையில் நிகழும் கழுத்தறுப்பு வேளைகளில், ஒருநாள் கூட உணர்ச்சிவசப்படாமல் இருந்ததில்லை. இப்படி இருக்க, போர்களை எப்படிப் போற்றும் மனம்?</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-28dfad4 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="28dfad4" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-4f3e5c3" data-id="4f3e5c3" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-4804c08 elementor-widget elementor-widget-image" data-id="4804c08" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="592" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/the_pianist_hd_no_icon-1024x592.png" class="attachment-large size-large wp-image-4592" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/the_pianist_hd_no_icon-1024x592.png 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/the_pianist_hd_no_icon-300x173.png 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/the_pianist_hd_no_icon-768x444.png 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/the_pianist_hd_no_icon-1536x888.png 1536w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/the_pianist_hd_no_icon-2048x1184.png 2048w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/the_pianist_hd_no_icon-200x116.png 200w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-f4f447f elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="f4f447f" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-3dc5164" data-id="3dc5164" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-0c6c869 elementor-widget elementor-widget-text-editor" data-id="0c6c869" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எத்தனையோ படங்களில் &#8216;தி பியானிஸ்ட்&#8217; ஒரு முக்கியமான படம். போர் வேண்டாம் என்று நம் புத்திக்குச் சொல்ல எத்தனையோ நல்ல காட்சிகளை இத்திரைப்படங்களில் காணமுடியும். ஜெர்மனியின் பிடியில் சிக்காமல் ஒரு பாழடைந்த வீட்டில் தஞ்சம் புகுந்து, தப்பிக்கும் ஒரு யூதனின் கதை. தஞ்சமடைந்த வீட்டில் கிடைத்ததை உண்டு உயிர் வாழ்பவன், இறுதிக் காட்சியில் ஒரு ஜெர்மானிய அதிகாரியிடம் சிக்கிக் கொள்ள, அந்த அதிகாரி அவன் ஓர் இசை மேதை என்று அறிந்த பின், பியானோ ஒன்றை வாசிக்கச் சொல்லிப் பணிக்கிறான். அவன் வாசிப்பில் லயித்துப் போன அதிகாரி, அடுத்த நாளும் வந்து அவனைக் காண்கிறான்.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-b313128 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="b313128" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-c1c37e1" data-id="c1c37e1" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-710beb0 elementor-widget elementor-widget-image" data-id="710beb0" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="854" height="601" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/THE_PIANIST_slideshow_3.png" class="attachment-large size-large wp-image-4593" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/THE_PIANIST_slideshow_3.png 854w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/THE_PIANIST_slideshow_3-300x211.png 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/THE_PIANIST_slideshow_3-768x540.png 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/THE_PIANIST_slideshow_3-200x141.png 200w" sizes="(max-width: 854px) 100vw, 854px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-8f7a740 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="8f7a740" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-daa2d7c" data-id="daa2d7c" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-727f928 elementor-widget elementor-widget-text-editor" data-id="727f928" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>&#8220;உன் பேர் என்ன?&#8221;</p><p>&#8220;ஸ்பில்மேன்&#8221;</p><p>&#8220;ஸ்பில்மேன், உருசியா நெருங்கி வந்துவிட்டது. போர் முடியப் போகிறது கொஞ்சம் பொறுத்துக் கொள்&#8221; என்று ஆறுதல் கூறி உணவும் அளிக்கிறான். இறுதிக் காட்சியில், உருசியா படையிடம் சிக்கி சிறைக் கைதியாக அமர்ந்திருக்கும் அதே ஜெர்மானிய அதிகாரி, அவ்வழியாக மீண்டு நாடு செல்லும் யூத வயலின் வித்துவான் ஒருவரைக் கண்டு, &#8216;உனக்கு ஸ்பில்மேனைத் தெரியுமா&#8217; எனக் கேட்க, அவன் நன்கு தெரியும் என்பான்.</p><p>&#8220;அப்படியானால் அவனிடம் நான் இங்கு சிறைப்பட்டிருப்பதைச் சொல். நான் அவனைக் காப்பாற்றியிருக்கிறேன். என்னை வந்து காப்பாற்றச் சொல்&#8221;, என மன்றாடுவான்.</p><p>&#8220;உன் பெயர் என்ன?&#8221;, வயலின் வித்துவான். &#8216;ஹோசன்ஃபெல்ட்&#8217; என அவன் சொல்வது நமக்குக் கேட்கும், ஆனால் பேசிக் கொண்டே நடக்கும் அந்த வயலின் வித்துவான் ஒன்றும் புரியாமல் மீண்டும் கேட்க, அவனைச் சொல்ல விடாமல் ஓர் உருசிய அதிகாரி அடித்து இழுத்து அமர்த்தி விடுவார். தன் உயிரைக் காப்பாற்றிய அதிகாரி, கடைசி பொழுதுகளைக் கழித்த இடத்தினை வந்து பார்க்கும் ஸ்பில்மேன், &#8216;அவர் பெயரையாவது கேட்டிருக்கலாமே&#8217; என்று வருத்தமுறுவான். ஹோசன்ஃபெல்ட் தன் இறுதி நாட்களை உருசியச் சிறையிலேயே கழித்து மாண்டும் போவார். உண்மை நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், போர் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் இன்றி எந்தப் பக்கமும் இரக்கம் காட்டாத இயல்புடையது என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டியிருக்கும்.</p><p>எழுத்தாளர் இராபர்ட் கிரேவ்ஸ், பேனா காகிதங்களைப் பிடித்துப் பெருங்கனவோடு நின்ற காலத்தில், இங்கிலாந்து இருக்கும் நிலைமைக்கு இலக்கியம் தேவையா என்று நாடு அவர் கைகளில் துப்பாக்கியைத் திணித்து போர்க்களத்தில் நிறுத்திய அனுபவத்தை மிக அழகாக எழுதியிருப்பார்.</p><p>&#8220;ஒரு துப்பாக்கி எப்படி வெடிக்கும் என்பதை அன்று நான் கண்டேன். ஒரு மனிதன் என் கண் முன்னால் சரிந்து விழுவதை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன். அவன் கையிலிருந்த துப்பாக்கி தள்ளிப்போய் விழுந்தது. அவன் துடித்துக் கொண்டிருந்தான். அவனால் பேச முடியவில்லை. அவன் மொழி எனக்குத் தெரியாது. அநேகமாக அவன் தன் அப்பாவையோ, அம்மாவையோ அழைத்திருக்கலாம். அவன் கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. கிரேவ்ஸ் அவன் நம் பகைவன். நீ சுடுவதை நிறுத்தாதே என்று யாரோ என்னிடம் கத்தினார்கள். விழுந்து கிடந்த &#8216;பகைவன்&#8217; என்னைப் போலவே இருந்தான். என்னைப் போலவே பெருங்கனவோடு கவிஞனாகவோ ஓவியனாகவோ நினைத்தவனைப் போர் விட்டிருக்காது. விழுந்து கிடக்கும் இந்தத் துப்பாக்கியை அது தான் அவனிடம் திணித்திருக்கும்.</p><p>​என்னைப்போலவே அவனையும் இங்கே வந்து இறக்கிவிட்டிருப்பார்கள். அதோ பகைவன் சுடு என்று அவன் அதிகாரிகள் என்னைக் காட்டியிருப்பார்கள். நான் யார் என்றே தெரியாமல் என்னைப் பார்த்து அவனும், அவன் யார் என்றே தெரியாமல் நானும் சுட இப்போது அவன் காயமடைந்து கீழே விழுந்திருக்கிறான். ​எனக்குக் காயமில்லை என்றாலும் நானும் விழுந்துதானே கிடக்கிறேன்? நானும் அவனைப் போல் தவித்துக்கொண்டுதானே இருக்கிறேன்?</p><p>இவன் சீருடையின் நிறம் வேறு என்பதால் இவன் எனக்குப் பகைவன் ஆகிவிட்டானா? இவன் பெயர் என்ன? போர், ​முதலில் ஒருவனது கனவைக் கொல்கிறது. அதன்பின் அவனது உள்ளத்தை. இறுதியாக அவன் உடலை. துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டுக் குனிந்தேன். அவன் கையைப் பிடித்துக்கொண்டேன். அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் என் கண்களைப் போலவே இருந்தன. நிறம் மட்டுமே வேறு. என் கைகளை அவன் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். கவலைப்படாதே நீ என் நண்பன் என்று அவன் காதில் சொன்னேன். என் மொழி அவனுக்குப் புரிந்திருக்காது. புரிந்தாலும் இந்த இரைச்சலில் அவனுக்கு எதுவும் கேட்டிருக்காது&#8221;</p><p>இங்கிலாந்தைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளரான இராபர்ட் கிரேவ்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் போரை எதிர்த்து எழுதிக் கொண்டே தான் இருந்தார்.</p><p>பல ஆண்டுகளாக நடக்கும் உருசியா &#8211; உக்ரைன் போரில், பிடிபட்ட உக்ரைன் நாட்டு வீரர் ஒருவரை அண்மையில் தான் உருசியா அரசு விடுதலை செய்திருக்கிறது. அவர் புகைப்படத்தைப் பகிர்ந்த உக்ரைன் அரசு, கடும் கண்டனத்தைத் தெரிவித்த போதிலும், படத்தைப் பார்க்கும்பொழுது நமக்கே ஓர் இடைவெளி விட்டு இருதயம் துடிக்கிறது. அவர் பிடிபட்ட நாளில், உருசியா நாட்டில் அடிபட்ட நாளில், எப்படித் தவித்திருக்கும் அவர் குடும்பம்? உடலை வதைத்து உயிரை மட்டும் மிச்சம் விட்டிருக்கும் உருசியா, பொதுவுடைமை சித்தாந்தத்தின் பிறப்பிடம் என்று, சொல்லவே நாக் கூசுகிறது.</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-80fdc83 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="80fdc83" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-31e169b" data-id="31e169b" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-9b7fee0 elementor-widget elementor-widget-image" data-id="9b7fee0" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="1024" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Image-2026-03-07-at-6.38.36-PM.jpeg" class="attachment-large size-large wp-image-4594" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Image-2026-03-07-at-6.38.36-PM.jpeg 1024w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Image-2026-03-07-at-6.38.36-PM-300x300.jpeg 300w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Image-2026-03-07-at-6.38.36-PM-150x150.jpeg 150w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Image-2026-03-07-at-6.38.36-PM-768x768.jpeg 768w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Image-2026-03-07-at-6.38.36-PM-200x200.jpeg 200w, https://kavirasan.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Image-2026-03-07-at-6.38.36-PM-100x100.jpeg 100w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-54ad592 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="54ad592" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-b744f73" data-id="b744f73" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-703a676 elementor-widget elementor-widget-text-editor" data-id="703a676" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>1939 போர் ஒன்று இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த வேளை. இறந்த சிப்பாய் ஒருவரின் பையில், அவர் காதலிக்காக எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில்,</p><p>“போர் முடியப் போகிறது, உன்னைப் போன்ற பூக்கள், உலகம் எங்கும் பூக்கும். உன் கருவறை, ஒரு தேவதையைக் கருக்கொள்ளப் போகிறது” என்று எழுதியிருந்தது. ஈரம் காயாத எழுத்துகளிலிருந்த துடிப்பு, அவன் இதயத்தில் இல்லை. அவன் காதலியை, அந்தக் கடிதம் சென்றடைந்ததா தெரியவில்லை. அவள் காத்திருப்பின் வலிக்குக் காலம் என்ன பதில் சொல்லும்? அண்டன் செகாவ் எழுதிய ஒரு சிறுகதையில், அடிமையாக விற்கப்பட்ட சிறுவன், கொடுமை தாங்க முடியாமல், அவன் தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதுவதைப் போல, ஒரு காட்சி அமைத்திருப்பார். அதில், ‘இங்கே கொடுமை தாங்க முடியவில்லை. நாளை கிறிஸ்துமஸ். மறக்காமல் வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். உங்கள் வரவுக்காகக் காத்திருப்பேன்’ என்று கண்ணீரில் சொற்களை நனைத்து எழுதியிருப்பான். ஆனால் கடிதத்தின் அனுப்புநர் முகவரியில், ‘தாத்தாவிற்கு’ என்று மட்டும் எழுதி அஞ்சல் அனுப்புவான். வராத தாத்தாவின் வருகைக்குக் காத்திருக்கும் அந்தச் சிறுவனின் மனநிலையிலிருந்து சற்றும் மாறுபடாதா மனநிலை தான் இறந்து போன சிப்பாயின் காதலிக்கும் இருந்திருக்கும். இரண்டிற்கும் என்ன முடிவென்று நமக்குத் தெரியும், ஆனால் காத்திருப்போருக்கு? இப்படி, போர்களால், காத்திருக்கும் இதயங்கள் எத்தனை? தனித்து விடப்பட்ட குடும்பங்கள் எத்தனை எத்தனை? போரில் மட்டும் தான், வென்றவர்கள் கூட தோற்றவர்கள் ஆகிறார்கள். இனியாவது, இரவின் உயிர் குடித்து விடியும் வானம், இன்பமாய் விடியட்டும். உலகில் இனிமேல் பூக்கும் பூக்கள், கோபங்களைக் குறைக்கட்டும். போர்களில் இறந்த குடும்பத்தில், புன்னகைக் குறையாதிருக்கட்டும். பிரபஞ்சம், பிணங்களால் அல்ல, பிரியங்களால் நிறையட்டும்.</p><p>இஸ்ரேல் யூ.எஸ் சரியா, ஈரான் சரியா என்ற கேள்விக்கு, எப்போதோ படித்து என் இதய அறைகளிலெல்லாம் எழுதி வைத்திருக்கும் ஆங்கிலச் சொற்றொடர் ஒன்றைத் தான் பதிலாகச் சொல்ல வேண்டும் என்று விழைகிறது மனது.</p><p>War is not about who is right!<br />War is all about who is left!</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/por-odungum-pugazh-odungadhu/">போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முப்பாலுக்கு அப்பால்!</title>
		<link>https://kavirasan.com/elementor-4571/</link>
		
		<dc:creator><![CDATA[Marudhu Pandiyan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Dec 2025 22:58:33 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[நடப்புகள்]]></category>
		<category><![CDATA[#katturaigal #கட்டுரைகள் #tamil #தமிழ் #தமிழ்_கட்டுரைகள் #kallacharayam]]></category>
		<guid isPermaLink="false">https://kavirasan.com/?p=4571</guid>

					<description><![CDATA[<p>ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் படித்து முடித்ததாய் செருக்குக் கொஞ்சம் சிரம் தூக்கும் ஒவ்வொரு முறையும், &#8216;திருக்குறளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்&#8217; என இறையன்பு சொன்னதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்கிறேன். திருக்குறள் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல, வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும், ஒரு புதிய பொருளோடும், அதுவரை காணாத முகத்தோடும் காட்சியளிக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவம் ஒரு [&#8230;]</p>
<p>The post <a href="https://kavirasan.com/elementor-4571/">முப்பாலுக்கு அப்பால்!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="4571" class="elementor elementor-4571">
						<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-022042e elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="022042e" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-32c3e71" data-id="32c3e71" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-6819e5f elementor-widget elementor-widget-image" data-id="6819e5f" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="image.default">
				<div class="elementor-widget-container">
															<img loading="lazy" decoding="async" width="683" height="1024" src="https://kavirasan.com/wp-content/uploads/2025/12/ChatGPT-Image-Dec-26-2025-11_59_22-PM-683x1024.png" class="attachment-large size-large wp-image-4579" alt="" srcset="https://kavirasan.com/wp-content/uploads/2025/12/ChatGPT-Image-Dec-26-2025-11_59_22-PM-683x1024.png 683w, https://kavirasan.com/wp-content/uploads/2025/12/ChatGPT-Image-Dec-26-2025-11_59_22-PM-200x300.png 200w, https://kavirasan.com/wp-content/uploads/2025/12/ChatGPT-Image-Dec-26-2025-11_59_22-PM-768x1152.png 768w, https://kavirasan.com/wp-content/uploads/2025/12/ChatGPT-Image-Dec-26-2025-11_59_22-PM-300x450.png 300w, https://kavirasan.com/wp-content/uploads/2025/12/ChatGPT-Image-Dec-26-2025-11_59_22-PM.png 1024w" sizes="(max-width: 683px) 100vw, 683px" />															</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-1c59f9d elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="1c59f9d" data-element_type="section" data-e-type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-7da31ac" data-id="7da31ac" data-element_type="column" data-e-type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
						<div class="elementor-element elementor-element-4baf9b1 elementor-widget elementor-widget-text-editor" data-id="4baf9b1" data-element_type="widget" data-e-type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
									<p>ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் படித்து முடித்ததாய் செருக்குக் கொஞ்சம் சிரம் தூக்கும் ஒவ்வொரு முறையும், &#8216;திருக்குறளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்&#8217; என இறையன்பு சொன்னதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்கிறேன். திருக்குறள் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல, வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும், ஒரு புதிய பொருளோடும், அதுவரை காணாத முகத்தோடும் காட்சியளிக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.</p><p>வள்ளுவம் ஒரு புரியாத புதிர். எடுக்க எடுக்கக் குறையா புதையல். கால வெளிக்குள் கரையா தத்துவம். வாழ்வியல் அகராதி. வற்றாமல் ஓடும் ஜீவநதி. படைத்தவனுக்கு மட்டுமல்ல பாமரனுக்கும் இடமளிக்கும் வேத நிழல். நடை சார்த்தப் பட்டக் கோவிலின் வாசலில் காத்துக்கிடக்கும் ஒருவனின் கைப்பிடித்து முயற்சிப் பட்டரையின் முன் நிறுத்தியப் புரட்சிகரம்.</p><p>இளைய தலைமுறையும் அதை எடுத்து அருந்தும் வண்ணம், எத்தனையோ ஆசிரியர்கள் அதற்கு உரை எழுதியிருக்க, அந்த வரிசையில் அமர வேண்டும் என்ற ஆசையில் என் இள மனம் பல தினம் ஏங்கியதுண்டு. ஏதேனும் புதுமையை அதற்குள் புகுத்த நினைத்து, கவிதை உரையில் கால்பதித்தால், காவியக் கவிஞர் வாலி நமக்கு முன் அங்கே கடை போட்டிருக்கிறார். ஆனால், அவரிடம் இருப்பதென்னவோ அறத்துப்பால் மட்டும் தான். ஏனைய இருபால்களுக்கும் கவிதை உரை எழுத நினைத்து இருபத்தி ஆறாம் அகவையில் அதை எழுதியும் முடிக்க, அதில் எத்தனை எத்தனைப் பொருட்பிழை? பிழையைத் திருத்த நுழைந்த மனம், இரண்டாம் முறையில் இயன்றதைச் செய்தது. இருந்தும் அதில் ஏதோ குறை. மீண்டும் மீண்டும் படித்து, மிகினும் குறையினும் நோய் செய்வது சோறு மட்டுமல்ல சொற்களும் என்று வள்ளுவர் சொன்ன வாதத்தைத் துணையாய்க் கொண்டு மூன்றாம் முறை, மூழ்கி எழுந்தேன். இப்போதாவது வேட்கை ஈடேறியதா என்றால்? இல்லவே இல்லை. வள்ளுவம் தான் முடியா முற்றுப்புள்ளி ஆயிற்றே? நுரையீரலுக்குள் நுழையும் காற்று, நிற்கும் வரை இதைக் கற்கும் ஆசை, நிச்சயமாகக் குறையாது என்பதை நான், படித்து முடித்த பனுவல்கள் மேல் அடித்துச் செய்யும் சத்தியமாய்க் கொள்ளலாம்.</p><p>ஏனைய உரையாசிரியர்களோடு ஒப்பிடுகையில் இதில் ஏகப்பட்ட முரண்களைக் காணலாம். மதங்களின் மணிக் குடைக் கொடுக்கும் நிழல்களில் மட்டும் நிற்க மறுத்த மனம், மார்பின்றிப் பாலூட்டிய தந்தையை, மதச் சார்பின்றிக் கொடுக்கவே மல்லாடுகிறது. இன்ன மதமென்று வள்ளுவருக்குச் சாயம் பூசி, வள்ளுவத்தைக் காயப்படுத்த எனக்குச் சம்மதமில்லை. உறுதியாய்ச் சொல்லலாம், வள்ளுவம் நம் மதமில்லை. அதன் ஆதி அந்தத்தை ஓதி உணர்ந்தவர்கள், அது மார்க்கமாய் இயங்க மறுக்கும் என்பதைத் தீர்க்கமாய்ச் சொல்லி வாதாடலாம். கிடைத்த இடங்களிலெல்லாம் மதங்களுக்கு எதிரான அன்புக்கும் கருணைக்கும் மட்டும் தான் அதன் அரியாசனம் சரி ஆசனம் கொடுத்திருக்கிறது. ஆம்! மானுடத்தின் மீது அன்பாய் இருக்கச் சொன்ன போதி மரம் இந்த ஆதி மரம். ஆசுவாசம் அடைய அதன் அடியில் எவரும் அமரலாம். அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் உறைவிடம் கொடுத்த மரத்தை உரிமை கோரலாமா?</p><p>வள்ளுவருக்கு உரை எழுதிய பல ஆசிரியர்கள், வடக்கின் சாயலை வள்ளுவருக்கும் பூச முயன்றனர். அதன் நோக்கம், மதம் கொடுத்த அறிவின் நீட்சி தான் ஆசானின் குரல் என்று நிறுவ முயல்வதும், ஞாலம் போற்றும் ஞானத்தகப்பனின் மூலம் அவர்கள் மொழியென்று முழங்குவதும் அன்றி வேறெதுவும் இல்லை.</p><p>உண்மையில் வள்ளுவம், வடக்கின் வழி வந்த நூலா என்றால் இல்லை என்பதே என்னுடைய பதில். ஒன்றிப்போகும் பெயர்களை வைத்து, அவர்கள் உரிமைகோர முயன்றாலும், பல குறட்பாக்களில் வள்ளுவர் அவர்கள் கொள்கைக்கு எதிராய்க் கோலோச்சுவதை நம்மால் காண முடிகிறது.</p><p>பேதங்களை மூலமாய்க் கொண்டு, வேதங்களை வணங்கும் வடக்கின் முன், &#8216;எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும்&#8217; என்று ஒற்றைக் குறளால் உயர்ந்து நிற்கிறார் நம் வள்ளுவப் பேராசான்.</p><p>&#8216;அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்//உயிர் செகுத்து உண்ணாமை நன்று&#8217; என்று உயிர்களைப் பலி கொடுத்து, வேள்வி செய்வதைக் கேள்வி செய்யும், வள்ளுவர் எப்படி வடக்கின் வழித்தோன்றல் ஆகமுடியும்?</p><p>&#8216;அறம் பொருள் இன்பம் வீடு&#8217; என்பதை அடிப்படைத் தத்துவமாய்க் கொண்டு வடக்கு வலம் வர, &#8216;தர்மார்த்த காம மோட்ச&#8217;த்தை வாசலிலேயே வழி மறிக்கும் வள்ளுவர், &#8216;அறம் பொருள் இன்ப&#8217;த்தை மட்டும் அனுமதித்து, வீட்டை மட்டும் அதன் வீட்டிற்கே அனுப்பிவைக்கிறார். ஆம்! முப்பால் மொழிந்த முதற்பாவலர், முப்பொருளோடு முடித்துக் கொண்டு, முப்பாலுக்கு அப்பால் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார். அப்படியானால் வள்ளுவர், விண்ணியல் மீது நம்பிக்கை இல்லாதவரா என்று கேட்கலாம். அது காலத்திற்கே வெளிச்சம். அவர் வடித்த குறட்பாக்களில், அகம் புறம் இரண்டிலும் இடம்பெறும் &#8216;இகம் பரம்&#8217;, மடை மாற்றச் செய்யும் இடைச் சொருகலா இல்லை, நம்பிக்கையின் முதல் நாற்றாங்காளா தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம், அடக்குமுறையின் ஆதாரமாய்த் திகழும், வடக்கு முறையின் வழி நூல் அல்ல நம் வள்ளுவம்.</p><p>அவர் கொடுத்துச் சென்ற குறட்பாக்களெல்லாம், நடைமுறை வாழ்வின் நகலா இல்லை, எட்ட நினைக்கும் இலக்கின் கனவா தெரியவில்லை. ஆனால் அவர் கண்ட/காண நினைத்த உலகில், எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து வந்த வறுமைத் தொழிலான பிச்சைக்கும், பரத்தமைக்கும் இடமே இல்லை. அதுமட்டுமின்றி, கள், களவு, கள்ளம் போன்ற ஏனைய நெறியற்ற செயல்களுக்கும், முறத்தில் புலி விரட்டிய மூத்த குடியின் அறத்தில் இடமில்லை என ஆணைப் பிறப்பிக்கிறார் வள்ளுவர். மன்றம் அமைத்துக் கட்டளையிட அவர் மத போதகர் அல்லவே? அதனால் தான் தமக்குத் தெரிந்தவற்றைப் பட்டியலிட்ட வள்ளுவர், அதோடு நிறுத்தாமல், &#8216;அறத்தாறு இதுவென வேண்டா&#8217;, என்று ஓரளவு பொறுப்போடு ஒதுங்கிக் கொண்டு, ஓதிச் சென்றதில் உத்தமத்தை உணர்ந்து, நம்மையே, நீதிச் சொல்ல நிர்ப்பந்திக்கிறார்.</p><p>மதங்களின் முதன்மைப் பண்பே, தெரியாததை ஒப்புக்கொள்ளாமல் அதற்குக் கட்டுக்கதைகளைக் கட்டி விடுவது தான். ஏற்காததைத் தனக்கு ஏற்றார்போல் சொல்வது மதம். ஏற்புடையதாயின் அதை ஏற்றுக் கொள்வது தான் பகுத்தறிவு. தனக்குத் தெரிந்ததை ஆயிரத்துச் சொச்சக் குறள்களில் சொன்ன வள்ளுவரே தான், &#8216;அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்//கேடும் நினைக்கப் படும்&#8217; என்கிறார். அதாவது, மோசமானவன் வளர்ச்சியும், நல்லவர்களின் வீழ்ச்சியும் எண்ணத் தகுந்தது. ஏன் கெட்டவர்கள் வளர்கிறார்கள், நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதற்கு வள்ளுவரிடமே பதில் இல்லை. அதனால் தான் வள்ளுவர் அது எண்ணத் தகுந்தது என்பதோடு முடித்துக் கொள்கிறார். ஊழ் என்று அதை ஆசீவகத்திலோ, வினைக் கொள்கை என்று மற்ற மதத்திலோ அதைச் சேர்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள அவர் மதபோதகரா என்ன? புரட்சியாளன் தானே!</p><p>என்ன வள்ளுவர் புரட்சியாளனா என்று நகைக்கிறீர்களா?</p><p>புவியே மதங்களின் பிடியில் புழுங்கிக் கொண்டிருந்த காலம் அது. ஒரு மதம், மண்டையை மழித்திருக்க, இன்னொரு மதம், மயிர்க்கால்களை மார்பு வரை நீட்டியிருக்க, அவர் தானே, மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்றார். அது மட்டுமா? உண்பதைச் சரியாக்கினால் உடம்புக்கு மருந்தெதற்கு என, அவர் தானே மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்றவர்? கூடிப் பழகுவதற்கே பல குழுக்கள் இருக்க, அவர் தானே, புணர்ச்சி பழகுதல் வேண்டாம் என்றவர்? ஆண்டவனுக்கு அஞ்ச வேண்டும் என்று அரசர்கள் கூட அடங்கி ஒடுங்கி இருந்த காலத்தில், அவர் மட்டும் தானே, அஞ்சாமை அல்லால் துணை வேண்டாம் என்றவர்? உலகமே வேண்டும் என்பதில் விடாப்பிடியாய் இருந்த காலத்தில், ‘வேண்டாம்’ என்பதில் வேட்கை கொண்டு, இயல்பு வாழ்க்கைக்கே எதிர்த்திசை சென்று நிற்பவர் புரட்சியாளன் அன்றி வேறு யார்?</p><p>ஏழு வயதிலேயே திருக்குறள் வகுப்பில் சேர்த்துவிட்டு, எப்படியாவது எல்லாத் திருக்குறளையும் ஒப்பித்துக் கலைஞர் கையில் பரிசு வாங்குவதைக் கனவு கண்டிருந்த அப்பாவுக்கு, அழுது அடம்பிடித்து அதைப் பாதியில் நிறுத்திய என்னால், ஏமாற்றத்தைத் தவிர எதையுமே தரமுடியவில்லை. இதை எழுதி முடித்த இரவு அப்பாவிடம் சென்று காட்டியபோது, எப்போதோ அளித்த ஏமாற்றத்தை ஈடுசெய்யும் கைம்மாறாகத் தெரிந்தது, அவர் கண்களில் தென்பட்ட ஆச்சரியம்.</p><p>கவிஞர் வாலியின் சொல்லாடலோடு, ஓரிரு சொற்கள் ஒன்றி இருக்க, பழியின்றிப் படைக்க, வேறு வழியின்றி அதனை நீக்க வேண்டுமென்ற நிலையெடுத்தேன். அப்படியும் ஓரிரு வரிகள் அப்படியே இருப்பது அவர் தாக்கம் தானே அன்றி, எடுத்தாளும் நோக்கம் அதிலே நுண்ணளவும் இல்லை. உறக்கம் தொலைத்து எழுதிய ஒவ்வொரு குறளும் மனசாட்சிக்குப் பயந்து எழுதப்பட்டவை என்பதற்கு இதரப் பால் இரண்டும் எனக்காகப் பேசும் என்று நம்புகிறேன். இதில் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுக. காரணம் கேட்டுத் திருத்தப் பூரணச் சம்மதம்.</p><p>அரவிந்த் அண்ணாவுக்கும், காயத்ரி அக்காவுக்கும், மருத்துவர் செங்குட்டுவன் சாருக்கும், கலைச்செல்வி அம்மாவுக்கும், அன்றாடம் நடக்கும் திருக்குறள் கற்போம் கற்பிப்போம் அவைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், தமிழ் மாறனுக்கும், ஏறிய பேருந்தில் எல்லாம் எழுதப்பட்டக் குறட்பாவை எழுத்துக்கூட்டிப் படிக்க முயலும் ஏதோ ஒரு மழலைக்கும் இந்நூல் சமர்ப்பணம்.</p><p>சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்<br />தாழாது உஞற்று பவர்க்கு (1024)</p><p>தன் குடியை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயல்கின்றவர்க்கு, எந்தச் செயலிலும் தானாக வெற்றி கிடைக்கும்.</p><p>உற்றவர் உயர &#8211; <br />உழைக்கும் ஒருவனை &#8211;</p><p>சூறையாடாது <br />சோம்பற்படை; அவனுக்கே &#8211;<br />வெற்றி போடாது <br />வேகத்தடை;</p><p>நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்<br />பண்புள பாடறிவார் மாட்டு (௯௱௯௰௫ &#8211; 995)</p><p>விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவது துன்பத்தைத் தரும். அதை அறிந்த மேன்மையானவர்கள் பகைவரிடமும் பண்பு கெடாமல் நடந்து கொள்வார்கள்.</p><p>பகடிக்கும் பழி<br />பறிக்கும் குழி;<br />பண்பு சொல்லாது &#8211;<br />பகைமை இடத்திலும்<br />பழிக்கும் மொழி;</p><p>தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்<br />நோயளவு இன்றிப் படும் (947)</p><p>பசித் தீயின் அளவை உணர்ந்து கொள்ளாமல் அதிகமாக உண்டால், நோய்களும் அளவின்றி வரும்.</p><p>தீயெனப் பசியும்<br />திரண்டு &#8211; உணவை<br />மேயென நம்மை<br />மிரட்டும்; அவ்விடம் &#8211;<br />வாய்க் கட்டாமல்<br />வாழ்ந்தால் நம்மை<br />நோய் கட்டாயம்<br />விரட்டும்;</p><p>பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்<br />அலகுடை நீழ லவர் (1034)</p><p>பல அரசுகளின் நிழல்களைத் தமது குடை நிழல் கீழ் கொண்டு வரும் ஆற்றல் உழவர்களுக்கு உண்டு.</p><p>அரசு அணியும் முடி &#8211;<br />சிரசு பணியும் படி &#8211;</p><p>விழவைத்திடுவர்<br />நேர் கீழே &#8211; தான்<br />உழ வைத்திருக்கும்<br />ஏர் கீழே;</p><p>உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்<br />விட்டேம்என் பார்க்கும் நிலை (1036)</p><p>உழவர்கள் வேலையின்றி முடங்கிவிட்டால், விரும்பி பிற தொழில்களைச் செய்து வாழ்பவர்களும், விருப்பங்களைத் துறந்த துறவிகளும் வாழ்வில்லா நிலைக்குப் போவர்.</p><p>உழுதற் பொருட்டு<br />நிலத்தில் ஏர் படும்;<br />ஏர் படாவிட்டால் &#8211;<br />உணவில்லாத<br />நிலைமை ஏற்படும் &#8211;</p><p>விழைந்ததில் சிறந்தவர்க்கும்;<br />விருப்பத்தைத் துறந்தவர்க்கும்;</p><p>நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்<br />சொற்பொருள் சோர்வு படும் (1046)</p><p>உயர்ந்த கருத்துகளைக் கற்றுணர்ந்து சொன்னாலும், அதைச் சொல்பவர் வறுமையுற்றவராக இருந்தால் அந்தச் சொற்கள் எடுபடாமல் போகும்.</p><p>தெளிந்த சொற்களை &#8211;<br />மொழிந்தும் சுற்றம் &#8211;</p><p>மொழிபவர் நிலையை<br />மோப்பம் விடும்; அவர்<br />ஏழ்மையே சொற்களை<br />ஏப்பம் விடும்;</p><p>இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்<br />கரப்பார் இரவன்மின் என்று (1067)</p><p>உள்ளதை மறைப்பவரிடம் யாசிக்க வேண்டாம் என்று இரப்பவர்களை எல்லாம் கெஞ்சிக் கேட்கிறேன்.</p><p>இருப்பதை மறைக்க<br />முயன்றவரை,<br />தாவென்று கைகளை &#8211;<br />ஏந்தாதிருங்கள்<br />இயன்ற வரை;</p><p>மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து<br />நட்பினுள் சாப்புல்லற் பாற்று (829)</p><p>மிகுதியாய் அன்பு செய்து ஆனால் மனதிற்குள் பகை உணர்வோடு வெறுப்பவரிடம், நாமும் அதே நட்பின் வழியில் நடந்து கொண்டு அந்த உறவையே கொன்று விடவேண்டும்.</p><p>வெளியே சிரிப்பு<br />வெகுளியாய் நடிக்க &#8211;<br />உள்ளே வெறுப்பு<br />உலையாய்க் கொதிக்க &#8211;</p><p>நினைப்பதை மறைத்து<br />நடிக்கும் உலகம்;<br />அவர்களைப் போலவே &#8211;<br />அன்பை அறுக்க &#8211;<br />நீயும் ஆவாய்<br />நடிகர் திலகம்;</p><p>இரவுஎன்னும் ஏமாப்பில் தோணி கரவுஎன்னும்<br />பார்தாக்கப் பக்கு விடும் (1068)</p><p>இருப்பதை மறைத்து இல்லையென்று சொல்லும் கல் நெஞ்சின் மீது மோதும் போது, கையேந்துதல் என்ற பாதுகாப்பு இல்லாத படகு உடைந்துவிடும்.</p><p>ஏந்தும் கையிடம்<br />இல்லை என்ற<br />சொல்லைச் சிலரும்<br />அவிழ்த்துவிடுவர்;</p><p>இரத்தல் படகை<br />இல்லை என்னும்<br />கல்லைக் கொண்டு<br />கவிழ்த்துவிடுவர்;</p><p>நன்றறி வாரின் கயவர் திருவுடையார்<br />நெஞ்சத்து அவலம் இலர் (1072)</p><p>எப்போதும் நல்லதைப் பற்றியே சிந்தித்துக் கவலைப் படுபவர்களை விட, கயவர்கள் பேறு பெற்றவர்கள் தான்.</p><p>நல்லதை மட்டும்<br />நினைக்க ஒரு சிலர்<br />எண்ணம் எங்கிலும்<br />எழுப்புவர் வேலி; அந்த<br />அல்லலில் சிக்கி<br />அகப்பட்டுக் கொள்ளா<br />கயவர் அன்றோ<br />பாக்கியசாலி?</p><p>கருவியும் காலமும் செய்கையும் செய்யும்<br />அருவினையும் மாண்டது அமைச்சு (631)</p><p>உகந்த கருவியால், தகுந்த காலத்தில், செயல் திட்டங்களோடு அரிதான செயல்களைச் செய்யும் தனிச்சிறப்புடையவனே அமைச்சன்.</p><p>அரிய செயல் &#8211;<br />செய்யும் முறை;<br />உரிய கருவி;<br />செய்யும் வரை;</p><p>அமைச்சனுக்கு இயல்பாய்<br />இவை இருக்கவேண்டும்;<br />இவையிருக்கும் அமைச்சனே<br />அவை இருக்கவேண்டும்;</p><p>உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது<br />கொள்வாரும் கள்வரும் நேர் (813)</p><p>நட்பினால் கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர், ஈட்டிய பொருளைப் பறிக்கும் விலைமகளிருக்கும், திருடருக்கும் நிகரானவர்.</p><p>பயனை அளந்து<br />பழக்கமும் கொள்வர்;<br />அவர்க்கு நிகர் &#8211;<br />காசைப் பறிக்கும்<br />கணிகையர் கள்வர்;</p><p>ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்<br />தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (702)</p><p>சந்தேகத்திற்கு இடமின்றிப் பிறர் மனதில் உள்ளதை உணர்ந்து கொள்பவர்கள் தெய்வத்திற்கே இணையானவர்கள்.</p><p>ஒரு சிலர் உணர்வர் &#8211; பிறர்<br />ஊன் வசிக்கும் மனம்; <br />வையத்திலே அத்தகையோர்<br />வான் வசிக்கும் இனம்</p><p>பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்<br />வகைமை உணர்வார்ப் பெறின் (709)</p><p>பிறர் கண்களில் தெரிவது நட்பா, பகையா என அறியமுடியும், பார்வையின் வேறுபாடுகளை உணர்பவர்களால்.</p><p>உரைக்கெல்லாம் ஒரு பெயர்<br />ஊர் வைக்கும்;</p><p>பக்குவ மனமே &#8211;<br />பந்த பாசமென &#8211;<br />யார் வைக்கும் பார்வைக்கும்<br />பேர் வைக்கும்;</p><p>விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்<br />ஓட்டுஅன்றோ வன்க ணவர்க்கு (775)</p><p>பகைவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள், அவர் வேலைக் எறிந்த போது மூடி இமைத்தால் கூட அது வீரர்கள் புறமுதுகு காட்டி ஓடியதற்கு ஒப்பாகும் அல்லவா?</p><p>எதிரி வேலை &#8211;<br />எறியும் வேளை &#8211;</p><p>இயல்பாக நாம் நமது<br />இமை சேர்க்கலாம்;<br />ஆனால் உலகம் &#8211;<br />இயலாத பட்டியலில்<br />நமை சேர்க்கலாம்;</p><p>கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா<br />நாடுஎன்ப நாட்டின் தலை (736)</p><p>கேடென்ற ஒன்றே அறியாமல், ஒருவேளை கெடுதல் வந்தாலும் தன் வளத்திலே குறையாமல் இருக்கும் நாடே நாடுகளுக்கு எல்லாம் தலை.</p><p>அழிவென்பதை<br />அறியாமல் &#8211; அதில்<br />அகப்படும் போது<br />அழியாமல்,<br />நாளும் பீடு &#8211;<br />வாழும் நாடு &#8211;</p><p>கேடு வந்த போதும் &#8211; கை<br />நீட்டாமல் எழலாம்; பல<br />நாடுகளுக்கெல்லாம் அதை<br />நாட்டாமை எனலாம்;</p><p>காலம் கருதி இருப்பர் கலங்காது<br />ஞாலம் கருது பவர் (485)</p><p>உலகத்தையே வெல்ல விரும்புபவர், உறுதியான மனத்துடன் தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.</p><p>உலகை வெல்லும்<br />நெஞ்சில் உறுதி &#8211; <br />உயிர்ப்போடிருக்கும்<br />நேரம் கருதி;</p><p>பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை<br />கையல்ல தன்கண் செயல் (832)</p><p>மடமைகளில் எல்லாம் பெரிய மடமை, ஆசையின் கையில் சிக்கி, ஆகாத செயலை முழு ஈடுபாட்டோடு செய்வது.</p><p>ஆசை மிகுதியால் &#8211;<br />ஆகாததில் காலை &#8211;</p><p>விட்டால் நமக்கு<br />நட்டம் வரும்; உடன்<br />முட்டாள் என்னும்<br />பட்டம் வரும்;</p>								</div>
				</div>
					</div>
		</div>
					</div>
		</section>
				</div>
		<p>The post <a href="https://kavirasan.com/elementor-4571/">முப்பாலுக்கு அப்பால்!</a> appeared first on <a href="https://kavirasan.com">கவிராசன் பதிப்பகம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
