Marudhu Pandiyan

இசைக்குயில் சுவர்ணலதா!

சிற்றூர்களில் கூத்துகட்டும் நாடக நடிகர்கள், அரங்கத்தில் அத்தனை ஆச்சரியங்களை நிகழ்த்திவிட்டு, கூத்து முடிந்ததும் தன் ஒப்பனைகளைக் களைந்து, ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல் கிளம்புவார்கள். சுவர்ணலதா அவ்வகையே. திரையில் எத்தனையோ மாயங்களை நிகழ்த்திவிட்டு, நேர்காணல்களுக்கு வந்தமரும் போது, அதற்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருக்கும் இயல்புடையவள் அவள். கூட்டணி சேர்ந்த எல்லோருடனும் வெற்றி மட்டுமே இலக்கு என்று பயணித்தவள்.   சுவர்ணலதா பாடிய வெகுவான வரிகளெல்லாம், அவளுக்காகவே எழுதப்பட்டதோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு […]

இசைக்குயில் சுவர்ணலதா! Read More »

வாலியும் கதிரும்-2

முந்தைய அத்தியாயத்தில் சொன்னது போல, கதிருடன் வாலி கொடுத்தக் காதல் காவியங்கள் தான் எத்தனை எத்தனை? காதல் சாயத்தில் கசக்கிப் பிழிந்த துணிகளைப் போல, மொத்தப் படத்தையும் காதலால் முழுக்காட்டி இருப்பார்கள், கதிரும் வாலியும். இவர்கள் இப்படி இருக்க, ரகுமான், எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்திருப்பார். ‘காதல் தேசம்’ முக்கோணக் காதலுக்கு முதல்முறை அல்ல, ஆயினும், ரகுமானும் வாலியும் அதை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பது தமிழ் சமூகத்தின் தாரக மந்திரம்.

வாலியும் கதிரும்-2 Read More »

வாலியும் கதிரும்

கூட்டணி இல்லாமல் திரைப்படம் இல்லை. எத்தனைக் கூட்டணிப் பிரிவு இழப்பில் சென்று முடிந்திருக்கின்றன? எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த வைரமுத்து இளையராஜா கூட்டணி, இன்னும் ஒரு படம் இணையாதா என்று எத்தனை மனங்கள் ஏக்கத்தில் இருக்கின்றன. இப்பொழுதும் கூட, பொன்னியின் செல்வனில் வைரமுத்துவைத் தேடும் இதயங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது? ஏனோ தெரியவில்லை, மணிரத்னம் படமென்று வந்துவிட்டால் ரகுமான் அரக்கனாகி விடுவதை கண்டவர்கள் கேட்டவர்கள் சாட்சி. இப்படி எத்தனையோக் கூட்டணிகளை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். கூட்டணி சக்கரம் இல்லாமல், சினிமாத்

வாலியும் கதிரும் Read More »

நான் ரசித்த வாலி – 8

‘எப்படி ஒரு கவிஞன் நாத்திகனாய் இருக்க முடியும்? இறைமையை உணராமல் எப்படிக் கவித்துவம் வரும்? அதனால் தான், ஆதி நாட்களில் நாத்திகனாய் இருந்த கவியரசர் கண்ணதாசன், பாதி நாட்களில் ஆத்திகனாய் ஆனார்’ என்று நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருப்பார் கவிஞர் வாலி. அவரைப் பற்றி கவிஞர் வாலி, “மேடைக்கு மேடை… நாத்தழும்பேறநாத்திகம் பேசினான்;பின்னாளில் – அப்பித்தம் தெளிந்து…நாத்திகத்தை நாக்கில் இருந்துவழித்து வீசினான்;” என்று ‘கிருஷ்ண பக்தன்’ என்னும் நூலில் கண்ணதாசன் என்னும் கவிதையைக் கவிதையாய் வடித்திருப்பார் வாலி. இப்படி

நான் ரசித்த வாலி – 8 Read More »

புத்தனின் கருவறை!

புத்தனாக மாறசித்தார்த்தன்தவம் செய்தான்!முதலில் அவன்,சித்தார்த்தன் ஆகவேதவம் செய்தான் என்பதை ஏன் யாரும் சொல்லவில்லை? முன்னது,இருப்பதில் இருந்துஇல்லாமைக்குச் செல்வது…பின்னது,இல்லாமையில் இருந்துஇருத்தலைச் சொல்வது… ஒரு ஒற்றுமை!இரண்டு தவங்களின்ஈட்டலையும்கடவுளாகக் கருதினாலும், விருப்பமில்லாமல்,புத்தனுக்குப்பூசப்பட்டதைப் போல்இங்கும் ஏராளமான கைகள்மதச்சாயங்களோடுநிற்கின்றன! *இது,தண்ணீருக்குள் மூழ்கியதவநிலை! இங்கு,இலைகள் விழுந்துஎழுப்பப்போவதில்லை! எத்தனைக் குரல்கள்எங்கு ஒலித்தாலும்முகங்களும் மொழிகளும்பரிட்சயமில்லாததால்முடியாத மோன நிலை! கடவுளாகக் கருதக்முக்கிய காரணம்,‘கருவறை’ காவலே! ஆனால்,இந்தக் கருவறையில்எல்லோர்க்கும் அனுமதி உண்டு!

புத்தனின் கருவறை! Read More »

ஆசிரியர் பா!

தன்னலமே கொள்ளாதோர்,தமக்கென்று நில்லாதோர்,தரணியிலே ஆசிரியர் மட்டும்! அஃதிடம்சின்னதொரு விதைதந்தால்சிங்கார மரமாக்கிசிரிப்போடு வளர்ச்சியில்கைத் தட்டும்! பெற்றோர்கள் வெளியிலேபெருமையோடு சொன்னாலும்பேர்வாங்கித் தந்ததுவோ இவர்கள்! பலகற்றோர்கள் ஆனாலும்கர்வமே இல்லாமல்(கொள்ளாமல்)கைகொடுப்போர் இவரில்லா தெவர்கள்? வள்ளுவனோ தன்னுடையவார்த்தைகளில் மறந்தானோமேன்மையான ஆசான்கள் பற்றி! அந்தவல்லவனே மறந்தாலும்வாழ்த்துவோம் இல்லையெனில்வையகமே எறிந்திடும்தீப் பற்றி! இருள்நீக்கி மனிதர்கள்இதயத்தை ஒளியாக்கிஎந்நாளும் ஒளிருமிந்த மெழுகு! அவர்கள்பொருளீட்ட வழியொன்றைப்புரியாமல் எங்கேதான்போகிறதிப் பொல்லாத உலகு? அவமானம் செய்தாலும்அறியாமை என்றெண்ணிஅன்பாக பேசிடுவார் நாளும்! அஃதைதவமாக எண்ணாததற்குறிகள் மேதினியில்தழைத்தோங்கி எவ்வாறு வாழும்? ஏணியென பலபேரைஏற்றிவிட்டோர் அவர்மட்டும்ஏறாமல் நிற்பதுதான் கொடுமை!

ஆசிரியர் பா! Read More »

பயணங்கள்!

Previous Next ஏன் எப்போதும் பயணம்என்று கேட்போரிடம்ஒன்று கேட்க வேண்டும், பயணங்கள் செய்யாதமனிதர் யார்? எல்லா மனிதனும்பயணத்தில் தான்அல்லதுபயணத்தால் தான்உயிர்ப்போடு இருக்கிறான்! ஆம்!சயனங்கள் கொள்ளாதிருக்கபயணங்கள் தான்நம்மைக் காக்கின்றன! நாளுக்கு ஒரு இடம்,பொழுதுக்கு ஒரு வலம் என்றுநினைவுகளைச் சேர்ப்பது மட்டுமல்லநினைவுகளை மீட்பதும் பயணங்கள் தான்! ஒரு பாடலால்ஒரு படத்தால்எத்தனை ஆண்டுகள் பின்னால்நம்மைப் பயணப்பட வைக்க முடிகிறது? கர்ப்பக் கிரகம் விட்டு இந்தஅற்ப கிரகம் வந்ததுபயணம் தான்! இறுதியில்,நால்வரால் மெல்லநகர்வதும் பயணம் தான்! அதிசயங்களை,அனுபவங்களை,ஆச்சரியங்களை,ஆதாரங்களை,தொலைத்ததைத்தேடும் இன்பங்களை எனஏதோ ஒன்றை அடைவதற்கேஎல்லாப்

பயணங்கள்! Read More »

நான் ரசித்த வாலி – 7

பாடல்களுக்குள், தங்கச் சிமிழை மட்டுமல்ல சங்கத் தமிழையும் தங்க அழைத்தவர் கவிஞர் வாலி. மொழியை வளர்த்த இடங்களிலும் மொழியை வளரவிட்டவர். தமிழ் ஒரு தான் தோன்றி. எத்தனைக் கட்டுகள் போட்டாலும், தன்னை மெய்ப்பிக்க அவள் தவறியதே இல்லை. அவளது பேரும் புகழும் எல்லா ஊரும் சென்று சேர, உதவும் உதவியாளாராகத் தான் ஒவ்வொரு கவிஞரையும் காண்கிறேன். கவிஞர் வாலியும்,   “கொடிவருடிப் பூந்தென்றல் குலவுகின்ற தென்பொதிகை மடிவருடிப் பூத்தவளே! மணித்தமிழே! மாற்றாரின் அடிதிருடிப் பாடாமல் அம்மா!நின் அரவிந்த

நான் ரசித்த வாலி – 7 Read More »

ராம் குமார்!

கள்வாங்கி இருக்கும்கவின்மிகு மலர்களைஉள்வாங்கி நிற்கும்உள்ளமுன் உள்ளம்! உன்னிடம்சொல்வாங்கிச் செல்வோர்சோகமுற்றால் சொற்களெனும்கல்வாங்கி அடைக்கலாம்கவலையெனும் பள்ளம்! தீட்டாமல் வாளுமில்லை;சுட்டுப் பொசுக்கும்தீயின்றி உலையில்லை;தென்றல் வந்து,மீட்டாமல் குழலுமில்லை;வரவெண்ணாமல்மேதினியில் சொந்தமில்லை;வேண்டும் போதுநீட்டாமல் வாழுகின்றநிலத்தார் முன்னே,நெஞ்சினிக்க அன்புமழைநித்தம் பெய்து,கேட்காமல் உதவுகின்றகேளிர் கிடைத்தால்கிட்டியவன் பெற்றபயன்கிளவியில்(சொல்) அடங்கா! அகவையால் ஒன்றும்ஆவதற்கில்லை – அவரவர்தகவை வைத்துதான் தரணி போற்றும் என்ற வரிகளின்இன்னொரு வடிவு நீ;நிசிக்குள் நிற்போர்க்குநீள்வான் விடிவு நீ; இரண்டு தினங்கள் – உன்னோடுஇருந்தால் போதும் – நீஅரக்க மனத்திலும் – மெல்லஅன்பைக் குடியேற்றுவாய்! மனம்பாழடைந்தாலும் – சிலந்திநூலடைந்தாலும் –

ராம் குமார்! Read More »

Shopping Cart
Scroll to Top