Marudhu Pandiyan

The 5-Hour Rule

எட்டு மணி நேர நீண்ட நாளுக்குப் பின், வீட்டிற்குள் நுழையும் நீங்கள், உணவைக் கையில் எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு சீரிஸில் மூழ்கி நேரத்தைத் தொலைக்கிறீர்கள். ஒரு எபிசோட் போதுமென்று தொடங்கிய சீரிஸ், நான்கைந்தில் கொண்டு வந்து நிறுத்த, அயர்ச்சியில் ஆழ்துயில் கொள்கிறீர்கள். கேளிக்கை விரும்பாத மனித மனமா? என்றோ ஒருநாளெனில் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் எல்லா நாளும் இப்படியே சென்றால்? வென்றவர்கள் எல்லோரும் இவ்வழியில் சென்றவர்களா என்றால், இல்லை. சாதனையாளர்கள் வாழ்வை, சற்று உற்று நோக்கினால், […]

The 5-Hour Rule Read More »

செத்துவிடவில்லை!

கனவாய்ப் போகும் வேளைகளில் – அடகரியாய்ப் போகும் நாளைகளில்,கனமாய்ப் போகும் உறவுகளில் – என்கவிதைக் கிடந்து சாகிறதே! கண்ணீர் கொண்டு கலை செய்தேன் – பலகளிப்பினை எல்லாம் கொலை செய்தேன்முந்நீர் கொண்டு முயற்சியினால் – நான்முப்போகம் நிலம் விளை செய்தேன்! எழுதா சொற்கள் ஏராளம் – நான்எழுத்தென்றானால் தாராளம்,விழுதா கிளையா தெரியாது – என்விதைகள் கொண்ட வேர் ஆழம்! முகத்தில் களிப்பு கொண்டதனால் என்முட்காயங்கள் மறைவதில்லை!அகங்கள் கொண்ட ஆழத்தை – அடஅக்கம் பக்கம் அறிவதில்லை! கண்ணிமை கவிழும்

செத்துவிடவில்லை! Read More »

இமயம் சென்ற சமயம்…

இமய மலை செல்வதென்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது? விடிய விடிய உறக்கமில்லாமல் தான் தொடர்வண்டி நிலையம் வந்தோம். ஏழு பேர்(நான், தீபின் விஜித், ராம் குமார், ரவிக்குமார், அஷ்வின், விஷால், சமீர்). தீபின், ராமைத் தவிர ஏனையவர்கள் அதிகம் பரிட்சியமில்லாதவர்கள் ஆதலால், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பயணம் தொடங்கியது. ஒரு முதியவரும், ஒரு இளையவரும் என இரண்டு வட இந்தியர்கள் எங்கள் பிரிவில் வர, சில நிமிடங்களிலேயே இளையவர் எங்களோடு இணங்கி வந்துவிட்டார். முதியவர், மட்டும் முணங்கிக் கொண்டே தான் வந்தார். இருபத்தி ஏழு

இமயம் சென்ற சமயம்… Read More »

இறைவனது காவியம்!

என்வாழ்க்கை நிறைவுறாத இறைவனது காவியம்! இறைவனது காவியத்தில் இடம்கிடைக்கா ஓவியம்! மண்வாழ்க்கை இன்பமுற மனம்முழுக்க வேள்விகள்! மனம் எழுப்பும் வேள்விகட்கு மலர்கொடுக்கும் தோல்விகள்! * இடைமறித்த ஆசைகட்கு இதயங்களை விற்றவன்! இதயங்களை விற்றதனால் இன்னல்களைப் பெற்றவன்! தடைகொடுத்த வாழ்க்கையிலே தத்துவங்கள் சொன்னவன்! தத்துவங்கள் சொல்லும்-நான் தோல்விகளின் மன்னவன்! * காலநதி வெள்ளத்திலே கடல்கலக்கச் சென்றவன்! கடல்கலக்கும் முன்னமஞ்சி கரை ஒதுங்கி நின்றவன்! வாழவழி இல்லையென்று வார்த்தைகளை அழைத்தவன்! வார்த்தைகளை நம்பியதால் வாழ்க்கைதனில் பிழைத்தவன்! * சோலைகளின் மலர்வனப்பில்

இறைவனது காவியம்! Read More »

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

War is not about who is right!War is all about who is left! போர்களில் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. எந்த சண்டைக்கும் வன்முறை தீர்வாகாது என்பதே, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழனின் தார்மீகக் கருத்தாக இருக்குமென்றே நம்புகிறேன். உலகம் தனது எல்லைகளுக்காக, அல்லைகளைப் பிளந்த நாட்களில் கூட, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும், மகுடங்களைச் சூட மக்களை மறந்த மன்னர்கள் ஆட்சியில், ‘போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது’ என்றும்

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது Read More »

இறகு உதிர்க்கும் மரம்!

கவிதைத் தொடரின் முன்னுரை…   தோன்றிய நாள் முதலே, வாழ்வில் மனிதன் ஓடிக்கொண்டே இருக்க, உழைக்க வேண்டியிருந்தது. உழைத்துக் களைத்த ஊமை விழிகள், கலைகள் மூலமாய்த் தான் கதைகள் பேசின; ஆம்!கலைகள் தான் அவன்,காயங்களுக்கெல்லாம்களிம்புகள் இட்டன;மௌனத்தைக் கூடமொழி பெயர்த்தன; சமிக்ஞையே அவனதுசகலமும் ஆனது;குறிகள் காட்டியகுறைகளைப் போக்கஒலிகள் வந்துஉதவத் தொடங்கின;ஒலிகள் கூடஓரிரு இடத்தில்உதவாமல் போக,மொழிகள் வந்துவழிகள் காட்டின; ஆனால் மொழிகளால்,வளர்ச்சியில் உழன்றவனின்வலக்கரம் பிடித்தாலும்,அயர்ச்சியில் கிடந்தவனைஆற்றுப்படுத்த முடியவில்லை; வேகமாய் ஓடும் நதியைவெட்டித் திருப்பி வயலுக்குக்கொட்டித் தீர்க்கப் பாய்ச்சுவது போல,மொழிகள் தன்னைமுறைமை

இறகு உதிர்க்கும் மரம்! Read More »

மல்லிப்பூ வாடுது!

/*! elementor – v3.6.8 – 27-07-2022 */ .elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block} ‘ஐடம் சாங்க்’ என்று பெயர் வாங்கிய ஒரு பாடல் எப்படி பிரிவின் துயரை மொழியும் பாடலாக மாறியது என்ற ஆச்சரியம் எனக்குள் அடங்கவே இல்லை. அண்மையில், சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் தான் ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸப் என எல்லா சமூக வலைத்தளங்களையும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. இது, கணவனைப் பிரிந்த

மல்லிப்பூ வாடுது! Read More »

அவர் தான் பெரியார்!

பெரியார் இறந்து ஐம்பது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறோம். இன்னும் அந்தக் கறுப்புச் சூரியனின் நெருப்புக் குழம்பால் தான், நிலைத்து நிற்கிறது நம், நிலமிசைப் பகல். பெரியாரின் சிந்தனைகள் அருகிக் கொண்டிருப்பதாய் அச்சமூட்டகின்றனர் சிலர்; விண் வரை எழுந்து விழுது இறக்கிய ஆலத்தை, மண் அடி வாழும் கரையான்கள் அரிக்குமா? அவரை நினைக்கும் போதெல்லாம், நினைவுக் குளத்தில் நீந்துகின்றன விந்தை மீன்கள்; அவர் சிந்தனைச் சிற்பிக்குள், முத்துக்கள் எடுக்க முயலாத ஆட்கள், கிளிஞ்சல் என்று அதைக் கீழே

அவர் தான் பெரியார்! Read More »

ஆடும் பாம்படம்

எங்களுக்கெல்லாம்வசவுச் சொற்களின்வாத்தியார் அவர்! அண்டிய செடிகொடிகளால்அதிகம் புழக்கமில்லாதஒற்றை அடிப் பாதையாய் ஆனதுஅப்பாவுக்கும் அப்பத்தாவுக்குமான உறவு! அப்பத்தாவைப் பொறுத்த வரைஅப்பா ஒரு,தேவையில் திறக்கும்அண்டாகா கசம் குகை! அடகு வைத்த நகையைமாதா மாதம் மீட்டுமீண்டும் அடகு வைக்கும்ஏழைச் சாமானியனைப் போலசந்திப்பு ஒவ்வொன்றிலும்சண்டையைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறியதே இல்லை இருவரும்! எவருக்கு எதுவென்றுஎப்போதோ கையெழுத்தானஉடன்படிக்கைகளை எல்லாம்உதவாதவைகளாக்கினஅப்பத்தாவின் ஆயுள்! அன்றாடம் வரும்அனைத்து உபசரிப்புகளும்நின்று போனதன்காரணம் விளங்காமல் அப்பத்தாக்காத்திருக்க, ஐந்து விரல்களில்மோதிர விரலானஅத்தைகள் கூட வந்து பார்க்கவில்லை, அத்தனை நகைகளும்திருடுபோன பின்!

ஆடும் பாம்படம் Read More »

இசைக்குயில் சுவர்ணலதா!

சிற்றூர்களில் கூத்துகட்டும் நாடக நடிகர்கள், அரங்கத்தில் அத்தனை ஆச்சரியங்களை நிகழ்த்திவிட்டு, கூத்து முடிந்ததும் தன் ஒப்பனைகளைக் களைந்து, ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல் கிளம்புவார்கள். சுவர்ணலதா அவ்வகையே. திரையில் எத்தனையோ மாயங்களை நிகழ்த்திவிட்டு, நேர்காணல்களுக்கு வந்தமரும் போது, அதற்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருக்கும் இயல்புடையவள் அவள். கூட்டணி சேர்ந்த எல்லோருடனும் வெற்றி மட்டுமே இலக்கு என்று பயணித்தவள்.   சுவர்ணலதா பாடிய வெகுவான வரிகளெல்லாம், அவளுக்காகவே எழுதப்பட்டதோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு

இசைக்குயில் சுவர்ணலதா! Read More »

Shopping Cart
Scroll to Top