தீபின் விஜித்!
உற்ற துயரங்களை எல்லாம்ஊருக்கு சொல்லாமல் மறைக்கும்கோப்பின் வடிவம் நீ!மூப்பின் அனுபவம் நீ!யாப்பின் கட்டுப்பாடு நீ! வேப்பின் வெறுப்பை வெளிக்காட்டாது கொஞ்சம்காப்பின்? உன்வாழ்க்கை கடக்கும் பூ பின்!நிச்சயம் வெல்லுவாய் நீயதை நீப்பின்! தீபின்!உன் வாழ்க்கை போனதுவே தீ பின்! அனைத்தையும் மாற்றியதே மரணம்தன்தீர்ப்பின்!வழிவந்த வலிகளெல்லாம் சேர்ப்பின்,வருந்தாது அதைக்கண்டு ஆர்ப்பின்,புன்னகையை பரிசாக வார்ப்பின்,பயமின்றி அதைஎதிர்த்து தீர்ப்பின்,வருமிந்த ஊர்பின் யார்பின்? உன்பின்;செல்லாதே பெண்பின், பொன்பின், மண்பின்! கவிதைக்குக்காரணம் என்பின்? பண்பின்அன்பின்சிகரம் நீ; ஒருவரையும் கண்டதில்லை உனைப்போல முன் பின்! வருந்தாமல் வாநீ […]