வேட்கைத் தீ
விடாமல் எரிகிறதுவேட்கைத் தீ,வனமாக நினைத்துபுதையுண்ட விதையின்புது இலையாய்! – பா. மருது பாண்டியன்
விடாமல் எரிகிறதுவேட்கைத் தீ,வனமாக நினைத்துபுதையுண்ட விதையின்புது இலையாய்! – பா. மருது பாண்டியன்
‘எப்படி ஒரு கவிஞன் நாத்திகனாய் இருக்க முடியும்? இறைமையை உணராமல் எப்படிக் கவித்துவம் வரும்? அதனால் தான், ஆதி நாட்களில் நாத்திகனாய் இருந்த கவியரசர் கண்ணதாசன், பாதி நாட்களில் ஆத்திகனாய் ஆனார்’ என்று நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருப்பார் கவிஞர் வாலி. அவரைப் பற்றி கவிஞர் வாலி, “மேடைக்கு மேடை… நாத்தழும்பேறநாத்திகம் பேசினான்;பின்னாளில் – அப்பித்தம் தெளிந்து…நாத்திகத்தை நாக்கில் இருந்துவழித்து வீசினான்;” என்று ‘கிருஷ்ண பக்தன்’ என்னும் நூலில் கண்ணதாசன் என்னும் கவிதையைக் கவிதையாய் வடித்திருப்பார் வாலி. இப்படி
புத்தனாக மாறசித்தார்த்தன்தவம் செய்தான்!முதலில் அவன்,சித்தார்த்தன் ஆகவேதவம் செய்தான் என்பதை ஏன் யாரும் சொல்லவில்லை? முன்னது,இருப்பதில் இருந்துஇல்லாமைக்குச் செல்வது…பின்னது,இல்லாமையில் இருந்துஇருத்தலைச் சொல்வது… ஒரு ஒற்றுமை!இரண்டு தவங்களின்ஈட்டலையும்கடவுளாகக் கருதினாலும், விருப்பமில்லாமல்,புத்தனுக்குப்பூசப்பட்டதைப் போல்இங்கும் ஏராளமான கைகள்மதச்சாயங்களோடுநிற்கின்றன! *இது,தண்ணீருக்குள் மூழ்கியதவநிலை! இங்கு,இலைகள் விழுந்துஎழுப்பப்போவதில்லை! எத்தனைக் குரல்கள்எங்கு ஒலித்தாலும்முகங்களும் மொழிகளும்பரிட்சயமில்லாததால்முடியாத மோன நிலை! கடவுளாகக் கருதக்முக்கிய காரணம்,‘கருவறை’ காவலே! ஆனால்,இந்தக் கருவறையில்எல்லோர்க்கும் அனுமதி உண்டு!
தன்னலமே கொள்ளாதோர்,தமக்கென்று நில்லாதோர்,தரணியிலே ஆசிரியர் மட்டும்! அஃதிடம்சின்னதொரு விதைதந்தால்சிங்கார மரமாக்கிசிரிப்போடு வளர்ச்சியில்கைத் தட்டும்! பெற்றோர்கள் வெளியிலேபெருமையோடு சொன்னாலும்பேர்வாங்கித் தந்ததுவோ இவர்கள்! பலகற்றோர்கள் ஆனாலும்கர்வமே இல்லாமல்(கொள்ளாமல்)கைகொடுப்போர் இவரில்லா தெவர்கள்? வள்ளுவனோ தன்னுடையவார்த்தைகளில் மறந்தானோமேன்மையான ஆசான்கள் பற்றி! அந்தவல்லவனே மறந்தாலும்வாழ்த்துவோம் இல்லையெனில்வையகமே எறிந்திடும்தீப் பற்றி! இருள்நீக்கி மனிதர்கள்இதயத்தை ஒளியாக்கிஎந்நாளும் ஒளிருமிந்த மெழுகு! அவர்கள்பொருளீட்ட வழியொன்றைப்புரியாமல் எங்கேதான்போகிறதிப் பொல்லாத உலகு? அவமானம் செய்தாலும்அறியாமை என்றெண்ணிஅன்பாக பேசிடுவார் நாளும்! அஃதைதவமாக எண்ணாததற்குறிகள் மேதினியில்தழைத்தோங்கி எவ்வாறு வாழும்? ஏணியென பலபேரைஏற்றிவிட்டோர் அவர்மட்டும்ஏறாமல் நிற்பதுதான் கொடுமை!
Previous Next ஏன் எப்போதும் பயணம்என்று கேட்போரிடம்ஒன்று கேட்க வேண்டும், பயணங்கள் செய்யாதமனிதர் யார்? எல்லா மனிதனும்பயணத்தில் தான்அல்லதுபயணத்தால் தான்உயிர்ப்போடு இருக்கிறான்! ஆம்!சயனங்கள் கொள்ளாதிருக்கபயணங்கள் தான்நம்மைக் காக்கின்றன! நாளுக்கு ஒரு இடம்,பொழுதுக்கு ஒரு வலம் என்றுநினைவுகளைச் சேர்ப்பது மட்டுமல்லநினைவுகளை மீட்பதும் பயணங்கள் தான்! ஒரு பாடலால்ஒரு படத்தால்எத்தனை ஆண்டுகள் பின்னால்நம்மைப் பயணப்பட வைக்க முடிகிறது? கர்ப்பக் கிரகம் விட்டு இந்தஅற்ப கிரகம் வந்ததுபயணம் தான்! இறுதியில்,நால்வரால் மெல்லநகர்வதும் பயணம் தான்! அதிசயங்களை,அனுபவங்களை,ஆச்சரியங்களை,ஆதாரங்களை,தொலைத்ததைத்தேடும் இன்பங்களை எனஏதோ ஒன்றை அடைவதற்கேஎல்லாப்
பாடல்களுக்குள், தங்கச் சிமிழை மட்டுமல்ல சங்கத் தமிழையும் தங்க அழைத்தவர் கவிஞர் வாலி. மொழியை வளர்த்த இடங்களிலும் மொழியை வளரவிட்டவர். தமிழ் ஒரு தான் தோன்றி. எத்தனைக் கட்டுகள் போட்டாலும், தன்னை மெய்ப்பிக்க அவள் தவறியதே இல்லை. அவளது பேரும் புகழும் எல்லா ஊரும் சென்று சேர, உதவும் உதவியாளாராகத் தான் ஒவ்வொரு கவிஞரையும் காண்கிறேன். கவிஞர் வாலியும், “கொடிவருடிப் பூந்தென்றல் குலவுகின்ற தென்பொதிகை மடிவருடிப் பூத்தவளே! மணித்தமிழே! மாற்றாரின் அடிதிருடிப் பாடாமல் அம்மா!நின் அரவிந்த
கள்வாங்கி இருக்கும்கவின்மிகு மலர்களைஉள்வாங்கி நிற்கும்உள்ளமுன் உள்ளம்! உன்னிடம்சொல்வாங்கிச் செல்வோர்சோகமுற்றால் சொற்களெனும்கல்வாங்கி அடைக்கலாம்கவலையெனும் பள்ளம்! தீட்டாமல் வாளுமில்லை;சுட்டுப் பொசுக்கும்தீயின்றி உலையில்லை;தென்றல் வந்து,மீட்டாமல் குழலுமில்லை;வரவெண்ணாமல்மேதினியில் சொந்தமில்லை;வேண்டும் போதுநீட்டாமல் வாழுகின்றநிலத்தார் முன்னே,நெஞ்சினிக்க அன்புமழைநித்தம் பெய்து,கேட்காமல் உதவுகின்றகேளிர் கிடைத்தால்கிட்டியவன் பெற்றபயன்கிளவியில்(சொல்) அடங்கா! அகவையால் ஒன்றும்ஆவதற்கில்லை – அவரவர்தகவை வைத்துதான் தரணி போற்றும் என்ற வரிகளின்இன்னொரு வடிவு நீ;நிசிக்குள் நிற்போர்க்குநீள்வான் விடிவு நீ; இரண்டு தினங்கள் – உன்னோடுஇருந்தால் போதும் – நீஅரக்க மனத்திலும் – மெல்லஅன்பைக் குடியேற்றுவாய்! மனம்பாழடைந்தாலும் – சிலந்திநூலடைந்தாலும் –
உண்மையில் நீயொருஆச்சரியம்! எனக்குள்உனைப் பற்றி யோசித்தால்பூச்சொரியம்! எங்களூர் தாண்டிஎங்குமே செல்லா எனைமுதலில்பெங்களூர் நீதானேஅழைத்தாய்!அறமொழி என்னும்அருந்தமிழ் தவிரபிறமொழி வெறுப்பைப்பேசிய எனக்குள்பிரியத்தை நீ தானேவிதைத்தாய்!உன்மொழி மட்டுமல்லபிறமொழியும்பெரிது தானென்றுஅதைத் ‘தாய்’ என்றேஅழைத்தாய்! வம்சி ப்ரியத்தம்(குழலை விரும்புபவன்)!பெயருக்கு அருத்தம்பலருக்குப் பொருத்தம்ஆவது என்பதேஅரிதான ஒன்று!உனக்கது பொருந்துதல்சரிதானா என்று,வினவினால் நூறுவிழுக்காடு பொருந்தும்! சிறுபுல்லுக்கும் அன்புபுரிவதன் பொருட்டு,விழைவாய் உன்னிடம்முழுக்காடு இருந்தும்! ஆனால் ஒன்றுஅவனைப் போலகொண்டதில்லை நீயும்கையில் குழலை!கோபத்தில் நீயும்மெய்யாய் மழலை! கோபி!இவ்வாறே அனைவரையும்இன்பத்தால் சோபி! நாரணனே!நஞ்சில்லாப் பிரியத்தின்பூரணனே! கண்ணா!மொழி உந்தன்இன்னொருகண்ணா? ஏன் மொழி மீதுஇத்தனைப்ப்ரியத்தம்,ப்ரியத்தம்? பிறமொழியை மதிப்பதுபெரிதென்று
உற்ற துயரங்களை எல்லாம்ஊருக்கு சொல்லாமல் மறைக்கும்கோப்பின் வடிவம் நீ!மூப்பின் அனுபவம் நீ!யாப்பின் கட்டுப்பாடு நீ! வேப்பின் வெறுப்பை வெளிக்காட்டாது கொஞ்சம்காப்பின்? உன்வாழ்க்கை கடக்கும் பூ பின்!நிச்சயம் வெல்லுவாய் நீயதை நீப்பின்! தீபின்!உன் வாழ்க்கை போனதுவே தீ பின்! அனைத்தையும் மாற்றியதே மரணம்தன்தீர்ப்பின்!வழிவந்த வலிகளெல்லாம் சேர்ப்பின்,வருந்தாது அதைக்கண்டு ஆர்ப்பின்,புன்னகையை பரிசாக வார்ப்பின்,பயமின்றி அதைஎதிர்த்து தீர்ப்பின்,வருமிந்த ஊர்பின் யார்பின்? உன்பின்;செல்லாதே பெண்பின், பொன்பின், மண்பின்! கவிதைக்குக்காரணம் என்பின்? பண்பின்அன்பின்சிகரம் நீ; ஒருவரையும் கண்டதில்லை உனைப்போல முன் பின்! வருந்தாமல் வாநீ
சிகரம் தொட்டாலும் – எந்தன்சிந்தனைத் துளிகளுக்கு,அகரம் நீர் தானே – அடஅதைநான் என் சொல்வேன்?உனக்கும் எல்லைஉண்டா? எழுது!என்று,ஆரும் என்னைஅண்டா பொழுது,நீயே என்னுடைய,எழுத்தைப் போற்றினாய்! இந்தநிழலையும் கூடநிஜமாய் மாற்றினாய்! நீ மட்டும்,எப்படி அறிந்தாயோஎந்தன் பாத் திறம்?அன்பில் நீ,அல்ல அல்ல குறையாஅட்சயப் பாத்திரம்! இதற்காகவே நான்,வருங்காலம் சொல்வதுபோல்வளர வேண்டும்! சமர்பணமாய் அந்தவளர்ச்சியை உனக்குத்தான்வழங்க வேண்டும்! ஆம்!வளர்ச்சியைக் கொடுப்பேன்உனக்கே நிச்சயம்! இது வெறும்,உணர்ச்சிகள் அல்லஉன்மேல் சத்தியம்! கைம்மாறு எண்ணாமல்காட்டுவாய் பாசத்தை! உண்மையாய் பலமுறை-கண்டதுண்டு உன்னிடத்தில்கடவுளின் வாசத்தை! ஆராவது உன்னிடம்ஆசையாய்ப் பேசினால்,கேட்காமலேயே உள்ளதைத்