Marudhu Pandiyan

வம்சி பிரியத்தம்

உண்மையில் நீயொருஆச்சரியம்! எனக்குள்உனைப் பற்றி யோசித்தால்பூச்சொரியம்! எங்களூர் தாண்டிஎங்குமே செல்லா எனைமுதலில்பெங்களூர் நீதானேஅழைத்தாய்!அறமொழி என்னும்அருந்தமிழ் தவிரபிறமொழி வெறுப்பைப்பேசிய எனக்குள்பிரியத்தை நீ தானேவிதைத்தாய்!உன்மொழி மட்டுமல்லபிறமொழியும்பெரிது தானென்றுஅதைத் ‘தாய்’ என்றேஅழைத்தாய்! வம்சி ப்ரியத்தம்(குழலை விரும்புபவன்)!பெயருக்கு அருத்தம்பலருக்குப் பொருத்தம்ஆவது என்பதேஅரிதான ஒன்று!உனக்கது பொருந்துதல்சரிதானா என்று,வினவினால் நூறுவிழுக்காடு பொருந்தும்! சிறுபுல்லுக்கும் அன்புபுரிவதன் பொருட்டு,விழைவாய் உன்னிடம்முழுக்காடு இருந்தும்! ஆனால் ஒன்றுஅவனைப் போலகொண்டதில்லை நீயும்கையில் குழலை!கோபத்தில் நீயும்மெய்யாய் மழலை! கோபி!இவ்வாறே அனைவரையும்இன்பத்தால் சோபி! நாரணனே!நஞ்சில்லாப் பிரியத்தின்பூரணனே! கண்ணா!மொழி உந்தன்இன்னொருகண்ணா? ஏன் மொழி மீதுஇத்தனைப்ப்ரியத்தம்,ப்ரியத்தம்? பிறமொழியை மதிப்பதுபெரிதென்று […]

வம்சி பிரியத்தம் Read More »

தீபின் விஜித்!

உற்ற துயரங்களை எல்லாம்ஊருக்கு சொல்லாமல் மறைக்கும்கோப்பின் வடிவம் நீ!மூப்பின் அனுபவம் நீ!யாப்பின் கட்டுப்பாடு நீ! வேப்பின் வெறுப்பை வெளிக்காட்டாது கொஞ்சம்காப்பின்? உன்வாழ்க்கை கடக்கும் பூ பின்!நிச்சயம் வெல்லுவாய் நீயதை நீப்பின்! தீபின்!உன் வாழ்க்கை போனதுவே தீ பின்! அனைத்தையும் மாற்றியதே மரணம்தன்தீர்ப்பின்!வழிவந்த வலிகளெல்லாம் சேர்ப்பின்,வருந்தாது அதைக்கண்டு ஆர்ப்பின்,புன்னகையை பரிசாக வார்ப்பின்,பயமின்றி அதைஎதிர்த்து தீர்ப்பின்,வருமிந்த ஊர்பின் யார்பின்? உன்பின்;செல்லாதே பெண்பின், பொன்பின், மண்பின்! கவிதைக்குக்காரணம் என்பின்? பண்பின்அன்பின்சிகரம் நீ; ஒருவரையும் கண்டதில்லை உனைப்போல முன் பின்! வருந்தாமல் வாநீ

தீபின் விஜித்! Read More »

ஸ்டாலின் தமிழ்!

சிகரம் தொட்டாலும் – எந்தன்சிந்தனைத் துளிகளுக்கு,அகரம் நீர் தானே – அடஅதைநான் என் சொல்வேன்?உனக்கும் எல்லைஉண்டா? எழுது!என்று,ஆரும் என்னைஅண்டா பொழுது,நீயே என்னுடைய,எழுத்தைப் போற்றினாய்! இந்தநிழலையும் கூடநிஜமாய் மாற்றினாய்! நீ மட்டும்,எப்படி அறிந்தாயோஎந்தன் பாத் திறம்?அன்பில் நீ,அல்ல அல்ல குறையாஅட்சயப் பாத்திரம்! இதற்காகவே நான்,வருங்காலம் சொல்வதுபோல்வளர வேண்டும்! சமர்பணமாய் அந்தவளர்ச்சியை உனக்குத்தான்வழங்க வேண்டும்! ஆம்!வளர்ச்சியைக் கொடுப்பேன்உனக்கே நிச்சயம்! இது வெறும்,உணர்ச்சிகள் அல்லஉன்மேல் சத்தியம்! கைம்மாறு எண்ணாமல்காட்டுவாய் பாசத்தை! உண்மையாய் பலமுறை-கண்டதுண்டு உன்னிடத்தில்கடவுளின் வாசத்தை! ஆராவது உன்னிடம்ஆசையாய்ப் பேசினால்,கேட்காமலேயே உள்ளதைத்

ஸ்டாலின் தமிழ்! Read More »

அரு சௌரிராசன்!

குபேரனுக்குகுசேலன் எழுதும்கடிதம்! பெரியாரின் மாணவர்அனா ரூனாவின்நகல் அகம் இவர்! ஆம்! இவர் ஒருமாணவர் நகலகம்!அட! யாரு? என்றெல்லாம்ஆச்சர்யம் வேண்டாம்! இந்தஅடையாறு ஒருகொடை ஆறு! திரு.சௌரிராசன் அவர்கள்! அ’னா ரூ’னா அய்யாராஜா என்றால்நீ இளையராஜா தானே? உனக்கும் இளையராஜாக்கும் தான்எத்தனைப் பொருத்தம்! இருவருமேவாசிப்பைநேசிப்பவர்கள்! இருவர் தொடங்கிய இடமும்பொதுவுடைமை தான்! இருவருமே, நூல்களுக்கு மத்தியிலே,நுழைந்தவர்கள்! எழுத்துத் தேரைஎல்லோர்க்கும் சேர்க்க,ராஜாஇசையால் அச்சிடுகிறார்!நீ இயந்திராத்தால் அச்சிடுகிறாய்! ஒரே ஒரு வேறுபாடு தான்,அது பண்ணபுரத்து ராஜா!இது கண்ணபுரத்து ராஜா!என்னைப் போன்றுஎத்தனையோப் பேர்க்கு-நீஅ’னா தானா? கைநீட்டுவதில்

அரு சௌரிராசன்! Read More »

மணிமேகலை சௌரிராசன்!

முரண்பட்டக் கருத்துகளை மொழிவது யாராயினும் அரண்கட்டி அதனுள்ளே அமைதியாய் வாழாமல் எடுத்து அவர்களிடம் விளம்பு! அது வேந்தனே ஆயினும் எதிர்த்துரைக்கும் நீர்‘சிலம்பு’! ஆம்,அடுத்தவர்க்காய் நீர்‘வளையாபதி’! அன்னை தமிழின் அழகுத் தோள்களில் ஆடும் நீரொரு ‘குண்டலம்’! பற்களிலே சிக்காமல் பல்லிடங்கள் நிற்காமல் தெற்கிருக்கும் வள்ளுவனாய் தேன் கலந்த கல் கவணாய்சொக்கவைத்து பொட்டடிக்கும் சோழியாய் உன் சொற்கள்! அது வெறும் சொற்கள் அல்ல,சொற்கள் அல்ல,சொந்தமென்ற-சொர்க்கத்தை விலைக்கு வாங்கும் வைரமணிக் கற்கள்! ஆம்! உம்சொற்கள் ஒவ்வொன்றும் ‘சிந்தாமணி’! அட்சயப் பாத்திரம் ஏந்தாமல்,

மணிமேகலை சௌரிராசன்! Read More »

காவலர்கள்!

கோடையில் காய்வதனால்குலைந்திடுவானோ?வாடையில் தேய்வதனால்வாடிடு வானோ?மேடையில் பிறர் ஏறமெனக்கடல் கொள்வான்!ஓடையில் ஓரிலையாய்வரும்வழி செல்வான்! முயலாக ஓடினாலும்முப்பொழுதும் ஓயவில்லை; வாழ்க்கைபுயலாக மாறியதால்பூப்பறிக்க நேரமில்லை; முரட்டுச்செயலாக வாழ்வதனால்சிரிப்பதற்கும் காலமில்லை! சிரிப்புஅயலாகிப் போனதனால்அழுவதற்கும் தேவையில்லை! புத்தியே ஆயுதமாம்;பூச்சாண்டி காட்டுகிறகத்தியே வந்தாலும்கையோடு விளையாடும்லத்தியே குலதெய்வம்;லாக்அப்பைக் கண்டதனால்சுத்தியே அலைகிறதுசுதாரித்தே வாழ்ந்தவிழி! (வேறு) காவலன் இன்றிக்கட்டுகள் இலையே! அதுகோவலன் இல்லாக்கண்ணகி நிலையே! சிவனிடம் இருந்ததொருசிறந்த பண்பு – அதுஇவனிடம் உள்ளதெனில்எவரறி வாரோ? கலவரமோ? பெயர்தெரியாகட்சிகளின் ஊர்வலமோ? பகைநிலவரமோ? இல்லையில்லைநிற்காமல் போர்வருமோ? ஊருக்கு வருகின்றஒவ்வொரு துயரையும் – தன்பேருக்குப்

காவலர்கள்! Read More »

நான் ரசித்த வாலி – 6

வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மந்திர தந்திரங்கள் தான் எத்தனை? இருவரும் சேர்ந்து, எண்பதுகளின் முதல் பாதியில் ஈடில்லா அதிசயங்களை ஏற்படுத்தினர். ஆனால், எல்லா இன்பங்களும் ஏதோ ஒரு புள்ளியில் முடியத்தானே செய்கிறது? கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிய, இளையராஜாவின் ராஜாங்கத்தின் எத்தனையோக் கவிஞர்கள் இருக்க, வாலி அரசவைக் கவிஞரானார். வாலியின் கலைப்பயணத்தில், ஏனையவர்கள் விண்மீனெனில், ராஜா வெண்ணிலவு.   எத்தனையோப் பாடல்களில் எத்தனையோப் பெயர்களுக்கு, குறுநிலங்களைக் கொடுத்த வாலி, ராஜாவுக்கென்று ஒரு ராஜ்ஜியமே கொடுத்திருக்கிறார். அதற்கு,

நான் ரசித்த வாலி – 6 Read More »

நான் ரசித்த வாலி-5

கவிதைகளில் கவித்துவம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு; ஆனால் பாடல்களுக்கு, அதுவும் தேவையான ஒரு பண்பு. அதுமட்டுமல்ல. பாடல்களைப் பொருத்த வரையில், புதுமையைத் தான் மக்கள் மனம் கொண்டாடுகிறது. இன்றதை, எத்தனையோப் பேர் செய்தாலும், அதை, அன்றே செய்தவர் கவிஞர் வாலி. படங்களில் தோன்றும் பாத்திரங்களை எல்லாம் பாடல்களில் பதித்தவர், சில நிஜப்பெயர்களையும், மக்கள் மனதில், நிலைநாட்ட முயற்சித்தார். முந்தைய பதிவில் சொன்ன ஒரு பாடலால், வாலியோடு ஒருவர், முறைத்துக் கொண்டார் என்றால் நம்புவீர்களா? ஆம்! “கறவை

நான் ரசித்த வாலி-5 Read More »

நான் ரசித்த வாலி-4

உணவு, உடை, உறைவிடம் என்பதோடு காமத்தையும் சேர்த்திருக்க வேண்டும். உணவுக்கு அலைந்தன உயிரினங்கள்; அது கிட்டியதும், தினவுக்கு அலையைத் தொடங்கின. காமத்திற்காக, உறுதிகள் எத்தனை உடைந்தனவோ? குருதிகள் எத்துணை வடிந்தனவோ? மறைத்து மறைத்து கொண்டு செல்வதைத் தான் மனது நினைத்து நினைத்து தவிக்கும். கல்வியில் மெய் வேண்டாம் என்கிறது பிற்போக்கு சமூகம். கல்வி’யில் மெய்யை நீக்கினால், கலவி ஆகும் என்று அறியாதவர்களிடம் என்ன பேசுவது? கல்வி கலவி, பள்ளி பள்ளி இரண்டும் வாழ்க்கைக்குத் தேவை என்று வாதாடிப்

நான் ரசித்த வாலி-4 Read More »

நான் ரசித்த வாலி-3

எல்லோருக்குமானது இலக்கியம். அதை, ஒரு சாரருக்கு மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்? படங்களை மட்டுமே மக்களின் பந்திக்குக் கொண்டு சென்ற திரைக் கூட்டம், பாடல்களை ஏனோ பறிமாறவே இல்லை. அவர்களின் பசியைக் கவிதையைக் கொடுத்துக் கட்டிப் போட்டது. அதன் சுவையை, உணர்ந்தோர் உண்டு கொழுத்தனர்; உணராதோர் கண்டு தவித்தனர். கலையால் நாமும் களிப்புற, காவியக் கவிஞர் வாலி, இயல் தமிழைத் துறந்து இயல்புத் தமிழுக்குத் தாவினார். அஃதோடு நிறுத்தாமல், புதுபுது முயற்சிகளை மேற்கொண்டு, திரைப்பாடல்களை, அடுத்த கட்டத்திற்கே

நான் ரசித்த வாலி-3 Read More »

Shopping Cart
Scroll to Top